Showing posts with label குண்டு வெடிப்பு. Show all posts
Showing posts with label குண்டு வெடிப்பு. Show all posts

Sunday, December 28, 2008

அடிப்படை உரிமைகளை பறிக்கும் புதிய சட்டங்கள்


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்
ள்துறைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கையோடு சிதம்பரம் இரண்டு புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டி இந்தச் சட்டங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. நிலவுகிற பயங்கரவாதச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, இருக்கிற சாதாரணச் சட்டங்கள் போதாது என்பது அரசின் வாதம். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு இவை இயற்றப்பட்டுள்ளன. இடதுசாரிகளின் பலவீனமான முணுமுணுப்புகள் நாடாளுமன்றத்திற்குள் எடுபடவில்லை. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. வைத்த ஒரே விமர்சனம், இன்னும் கடுமையாக இந்தச் சட்டம் அமையவில்லையே என்பதுதான்.

இந்தச் சட்டங்களின் மூலம் தேசிய அளவில் இன்னொரு புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு மாநில அரசுகளின் கையில் இருந்த போதும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைப் புலனாய்வு செய்யும் அதிகாரத்தைப் புதிய அமைப்பு எடுத்துக் கொள்கிறது. இன்னொரு பக்கம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள `சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்' பல புதிய கடுமையான கூறுகளை உள்ளடக்கித் திருத்தப்பட்டுள்ளது.

தேசியப் புலனாய்வு அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். எல்லாவற்றையும் அமெரிக்கா போலவே மாற்றிவிட வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ரொம்ப காலமாகச் சொல்லிக் கொண்டிருந்ததுதான். ஏதாவது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றால் `பொடா' சட்டம் நீக்கப்பட்டதுதான் காரணம் என்கிற ரீதியில் அத்வானி பேசுவதும், அமெரிக்காவிலுள்ள எஃப்.ஐ.ஏ. போல இங்கும் ஒன்று தொடங்க வேண்டும் என மன்மோகன் சொல்லுவதும் வழக்கமாக இருந்து வந்தது.

`குற்ற நீதிவழங்கு முறை தொடர்பான புதிய தேசியக் கொள்கை'யை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட என்.ஆர். மாதவமேனன் குழு, ஜூலை 2007-ல் அறிக்கை சமர்ப்பித்தபோது இந்தப் பரிந்துரையை முன் வைத்திருந்தது. ஜூன் 2008-ல் அறிக்கை சமர்ப்பித்த `நிர்வாகச் சீர்திருத்தக் குழு'வும் புதிய புலனாய்வு அமைப்பின் தேவையை வற்புறுத்தி இருந்தது.

பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் ஒரு மாநிலத்திற்குள் நின்று விடுவது இல்லை. சாதாரணச் சட்டங்கள், நீதி வழங்கு நெறிமுறையில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அடிப்படைகள் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளப் போதாது என்பது அரசின் வாதம். ``சில அடிப்படையான மனித உரிமை நெறிகளைத் தூக்கி எறிவது தவிர்க்க இயலாது'' என்கிறார் மன்மோகன்.

இந்தக் காரணங்களுக்காகவே இந்தப் புதிய சட்டங்களை மனித உரிமை இயக்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. நீதி வழங்கு முறையில் உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்படும் நெறிகள் மூன்று:

ஒன்று : குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்படும் வரை குற்றம் சுமத்தப்பட்டவரை குற்றமற்றவராகவே கருத வேண்டும்.

இரண்டு : அரசியல் சட்டத்தின் 20(3)வது பிரிவின்படி விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்டவர் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருக்கலாம்.

மூன்று : குற்றத்தை நிரூபிக்கும் சுமை குற்றத்தைச் சுமத்தும் காவல்துறையுடையது.

இதில் முதலாவது அம்சத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்
சட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் வெளிப்படையாக மறுக்கிறது. புதிய திருத்தத்தின்படி பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்கள், குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை உண்மை என ஏற்றுக்கொள்ளும். `இல்லை' என நிறுவும் பொறுப்பு குற்றம் சுமத்தப்பட்டவரின் சுமை ஆகிறது. எனவே, மன்மோகன்சிங் சொன்னது போல முதல் மற்றும் மூன்றாம் நெறிகள் இதன் மூலம் தூக்கி எறியப்படுகின்றன. இரண்டாம் நெறிமுறையும் மறைமுகமாக மறுக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் இந்நிலையில் பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பது தவிர, உண்மை அறியும் சோதனைகளின் மூலமும் அவர் கட்டாயமாகப் பதில் சொல்ல வைக்கப்படுகிறார்.

பிரமாண்டமான அரசு எந்திரம், காவல்துறை, உளவு நிறுவனங்கள் ஆகியவற்றின் முன் சட்டத்தின் துணை ஒன்றை மட்டுமே நம்பி நிற்பதாலேயே குற்றம் சுமத்தப்பட்டவருக்கு இந்த உரிமைகள் உலக அளவில் வழங்கப்படுகின்றன. எனினும் இவை இன்று குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.

ஒன்றைச் சொல்ல வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யு.எல்.ஏ.பி சட்டம்) திருத்தப்படுவது இது முதல் முறை அல்ல. காங்கிரஸ் தலைமையிலான இன்றைய மத்திய அரசு, அதன் தேர்தல் வாக்குறுதிக்கிணங்க 2004-ல் பொடா சட்டத்தை நீக்கியபோது, கூடவே யு.எல்.ஏ.பி. சட்டத்தையும் திருத்தியது. பழைய சட்டத்துடன் மூன்று புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு `பொடா' சட்டத்தின் பல கடுமையான கூறுகள் இதில் இணைக்கப்பட்டன. இன்று இந்திய அளவில் கைது செய்யப்பட்டுள்ள பல மனித உரிமைப் போராளிகள் மீது இச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈழப் பிரச்னை பற்றி அத்துமீறிப் பேசினால் இச்சட்டம் பயன்படுத்தப்படும் என சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் மிரட்டியது நினைவிருக்கலாம்.

எனினும் 2004-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் பிணை விதிகள் (bail provisions) மட்டும் திருத்தப்படவில்லை. இன்று அவையும் திருத்தப்பட்டுள்ளன. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமலும் பிணையில் விடுதலை செய்யாமலும் சிறையில் வைத்திருக்கும் குறைந்தபட்ச காலம் மூன்று மாதம் என்பதிலிருந்து ஆறு மாதங்களாக இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் என்றால் அவர்களுக்குப் பிணையே கிடையாது. இந்தியக் குடிமக்களாக இருந்த போதும் பிராசிகியூஷன் தரப்பில் அனுமதி இல்லாமல் பிணை விடுதலை கிடையாது.

இப்படியான கடுமையான பிணை விதிகள் தவிர, குற்றம் சுமத்தப்பட்டவரின் நிதி ஆதாரங்களை முடக்குதல், பறிமுதல் செய்தல் ஆகிய உரிமைகளும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய சட்டத்தின் 16கி பிரிவின்படி வெடிமருந்து வைத்திருத்தல் முதலான குற்றங்களுக்குப் பத்தாண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். உதவி செய்பவர்களுக்கு ஐந்தாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கலாம்.

ஆக, விசாரணையின்போது, காவல்துறையினர் முன் வழங்கும் வாக்குமூலங்களைச் சாட்சியாக ஏற்றுக் கொள்ளுதல் என்கிற ஒன்றைத் தவிர, மற்ற அனைத்துப் `பொடா' சட்டக் கூறுகளையும் ஏற்றுக்கொண்ட புதிய பொடா சட்டம்தான் இது. சித்திரவதைகளின் மூலம் பெறுகிற வாக்குமூலங்களையே ஆதாரங்களாக ஏற்பதையும் உள்ளடக்கவில்லை என்பதை மட்டுமே புதிய சட்டத்தின் ஒரே குறையாக இன்று பா.ஜ.க. முன் வைக்கிறது. கடுமையான சட்டங்களின் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக வரலாறு இல்லை. `பொடா' சட்டம் இருந்த போதுதான் நாடாளுமன்றத் தாக்குதல், செங்கோட்டைத் தாக்குதல், அக்ஷர்தாம் தாக்குதல் எல்லாமும் நடந்தன. இப்போதும் மகாராஷ்டிரத்தில் கடுமையான `எம்கோகா' சட்டம் உள்ளது.

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. `தடா', `பொடா' முதலானவை தாற்காலிகச் சட்டங்கள். இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றே அவற்றை நீட்டிக்க முடியும். யு.எல்.ஏ.பி. சட்டமோ நிரந்தரச் சட்டம். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய அரசு நெருக்கடிச் சூழலுக்குரிய அசாதாரணச் சட்டக் கூறுகளை (Extraordinary provisions) சாதாரண வழமையான (Normal/ordinary) நிரந்தரமான சட்டங்களாக மாற்றிவிட்டது.

தேசியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே இங்கு ஐ.பி., `ரா', சி.பி.ஐ. போன்ற மத்திய அளவிலான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. `பாதுகாப்புத்துறை நுண்ணறிவு முகமை' (டி.ஐ.ஏ), `தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு' (என்.டி.ஆர்.ஓ), `போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு' (என்.சி.பி), `ரெவின்யூ நுண்ணறிவு மற்றும் கூட்டு நுண்ணறிவுக் குழு' (ஜே.ஐ.சி) எனப் பல மத்திய அமைப்புகள் சமீப காலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவாக்கப்பட்டபின் எந்தப் பெரிய புதிய சாதனைகளும் நிகழ்ந்துவிடவில்லை. இன்னும் ஒரு புதிய அதிகாரத்துவ அமைப்பாக மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படுவதே இன்றைய `தேசியப் புலனாய்வு அமைப்பு' என்கிற விமர்சனம் இன்று வைக்கப்படுகிறது.

இத்தகைய அமைப்புகள் வெளிப்படையற்றுச் செயல்படுவதாலும், அதிகாரத்தில் உள்ளவர்களோடு மிக நெருக்கமாக இருப்பதாலும் உலக நாடுகள் பலவற்றில் இயங்கும் இத்தகைய அமைப்புகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளன. 48 ஆண்டுகாலம் அமெரிக்க எஃப்.ஐ.ஏ. தலைவராக இருந்த எட்வர்ட் ஹுவர், பாகிஸ்தான் எஃப்.ஐ.ஏ பொறுப்புகளில் இருந்த குலாம் அன்சார், ரெஹ்மான் மாலிக் ஆகியோர் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் ரகசிய உறவைப் பேணினர் என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.

திருத்தப்பட்ட யு.எல்.ஏ.டி சட்டம், அணு ஆற்றல் சட்டம், விமானக் கடத்தல் எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட எட்டு சட்டங்களின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ எடுத்துக் கொள்கிறது. சட்டம் - ஒழுங்கு மாநிலப் பிரச்னையாக இருந்த போதிலும் தானாகவே இவற்றில் தலையிடும் (suo moto) உரிமையை மத்திய அரசு இதன் மூலம் பெறுகிறது.

இவ்வாறு மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது அரசியல் சட்ட உரிமைகளுக்கு எதிரானது. இதனால்தான் இத்தகைய புலனாய்வு அமைப்பைப் பரிந்துரைத்த மாதவமேனன் குழு, `அரசியல் சட்டத்திலுள்ள சிரமங்களை மீறி இதைக் கொண்டு வரவேண்டும்' எனப் பரிந்துரைத்தது.

பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. இருக்கின்ற புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளைப் பலப்படுத்துவது, திறமையாகச் செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலமே இதைச் சாதிக்க முடியும். பயங்கரவாதத்தின் பெயரால் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது அரசியல் சட்ட அடிப்படையிலான ஆளுகை என்பதை கேலிக்கூத்தாக்கிவிடும்.

Saturday, December 27, 2008

போருக்கு உலக நாடுகள் ஆதரவு




மும்பை தீவிரவாத செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும், இந்தியாவில் வெறிச்செயல் நிகழ்த்திய தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்திருந்த ஒரு மாத கெடு முடிந்தது.

ஆனால் பாகிஸ்தானோ பல சாக்குப் போக்குகளைச் சொல்லி வருகிறது. இந்நிலையில். தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

ராணுவம் குவிப்பு

எல்லையோரப் பகுதிகளில் முப் படைகளையும் குவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானும், தன் எல் லைப் பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது.

இதையடுத்து பாகிஸ்தானுடன் போர் மூளுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தியப் படைகள் பாகிஸ்தான் எல்லையை நோக்கி விரைந்துவிட்டன. விமானங்களும், போர்க் கப்பல்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் முக்கியப் பகுதிகளிலும் பாகிஸ்தான் படைகள் பெருமளவு குவிக்கப்பட்டு வருவதாக ராய்டர் நிறுவனம் தெரிவிக்கிறது. இதனை அமெரிக்க உளவுப் பிரிவும் இந்திய உளவுத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய விமானங்கள், நேற்று முன்தினம் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

"போர் வாய்ப்பு இல்லை'

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் ராணுவம் செய்து வருகிறது.இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, லாகூர் மற்றும் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ராணுவ விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.இவ்வாறு பாகிஸ்தானின், "டெய்லி டைம்ஸ்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது."போர் நடப்பதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை' என இரு நாட்டு பிரதமர்களும் கூறி வருகின்றனர். இருந்தாலும், எல்லையில் தொடர்ந்து இரு நாடுகளும் ராணுவத்தைக் குவித்து வருவதாலும், பிரதமர் மன்மோகன் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாலும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளுக்கு தகவல் தெரிவித்த பிரதமர்!

இந்நிலையில் தங்கள் கோரிக்கை எதையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை என்பதை உலக நாடுகளுக்கு ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது இந்திய அரசு.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக, இந்தியாவுக்குச் சொந்தமான, ஆனால் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்குள் விமானத் தாக்குதல் நடத்தக்கூடும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் ஆதரவு

தனது பிராந்தியத்தையும், இறையாண்மையையும் காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் தீவிரவாதிகள் முகாம்கள் உள்ள பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டால் அதன் குறுக்கே நாங்கள் வர மாட்டோம் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே நிலைப்பாட்டை இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

இந்தியாவுக்கு எந்த வடிவிலும் உதவ தயார் என ரஷ்யாவும் உறுதியளித்துள்ளது.

நன்றி - தினமலர்

Monday, December 08, 2008

ஊடக விபசாரர்கள் - மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்


பம்பாயில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது ஊடக விபசாரர்களின் கூத்து தாங்க முடியாத அளவிற்கு வக்கிரமாக இருந்தது. இதைப் பற்றி வனமாலி என்பவர் தமிழ்ஹிந்து.காமில் அருமையான பதிவொன்றை எழுதியுள்ளார்.

‘Butch Cassidy and the Sundance Kid’ என்ற பிரபலமான திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் திரைப்படத்தின் நாயகர்கள் இருவரும் ஒரு பாழடைந்த கட்டடத்துக்குள் மாட்டிக் கொள்வார்கள். சிறு திருடர்களான அவர்களை எப்போதும் போலிஸ் துரத்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பித்து விடும் அவர்களை இந்தமுறை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று ஒரு பெரிய பட்டாளமே அந்த கட்டடத்தைச் சுற்றிவளைக்கும். வெளியே ஒவ்வொரு அங்குலத்துக்கும் போலிஸ் நிற்பது தெரியாமல் எப்போதும் போல் தப்பித்துவிடலாம் என்று கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வருவார்கள் நாயகர்கள் இருவரும். அந்த ஃப்ரேம் அப்படியே உறைந்துபோய், இன்று உலக சினிமாவின் ஒரு முக்கியக் காட்சியாகப் பதிந்துவிட்டது.

ஆனால் Butch Cassidy-யும், Sundance Kid-உம் பாவப்பட்டவர்கள்! அவர்கள் காலத்தில் கட்டடத்தைச் சுற்றி வெளியே என்ன நடக்கிறது என்று லைவ் அப்டேட் கொடுக்க செய்திச் சேனல்கள் இல்லை. ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை என்பது இன்னும் துரதிர்ஷ்டவசமான விஷயம்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய சிம்கார்டுகள் இருந்தன; அவை புதுதில்லியில் வாங்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தப் பட்டிருக்கின்றன; தீவிரவாதிகள் வசமிருந்த செல்ஃபோன்களின் பேட்டரி தீர்ந்து போனபோது, தாங்கள் சுட்டுக்கொன்றவர்களிடமிருந்த செல்ஃபோன்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை அத்தனையும் போலிஸிடம் உயிருடன் சிக்கிய ஒரே தீவிரவாதி சொன்ன தகவல்கள்! தீவிரவாதிகளுக்கு இத்தனை தகவல்கள் நம் ஊடகங்களின் உடனடிச் செய்திகளால் கிடைத்ததில் ஒரு கட்டத்தில் அரசே, இந்த ஊடகங்களை சற்று நேரம் அமைதி காக்கும்படி வேண்டிக்கொள்ளுமாறு ஆனது. ஆனாலும் நம் செய்தி ஊடகங்களைப் போர்வீரர்கள் என்றும், பொறுப்பான மகாத்மாக்கள் என்றும் சிலாகித்துக் கட்டுரை எழுதுபவர்கள் இருக்கிறார்கள்!

நாளை இதுபோன்ற புல்லரிப்புக் கட்டுரைகள் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படிக்கும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெறும். ஏன், சென்சேஷலிசப் பத்திரிகைகளில் ஒன்றான ஜூனியர் விகடன், தீவிரவாதிகள் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தங்கள் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப் பட்டும், அதுவும் ஏன், பிடிபட்ட தீவிரவாதியே தான் ஒரு பாகிஸ்தானி என்று வாக்குமூலம் கொடுத்தும், கூசாமல் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்துக்கள் எனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களே இப்படிப் பொறுப்பில்லாமல், விஷமத்தனத்துடன் நடந்து கொள்ளும்போது, உலக ஊடகங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

பிரபலமான பத்திரிகையான ‘டைம்’, முஸ்லிம்கள் இப்படி அடிக்கடி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் காரணம் இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதலபாதாளமான பொருளாதார வேறுபாடு இருப்பதுதான் என்றும், கடும் வறுமையில் இருக்கும் முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள், பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என திட்டமிட்ட பிரச்சாரம் சர்வதேச ஊடகங்களில் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகிறது.

இது எவ்வளவு பெரிய பொய் என்று இந்தியாவின் கிராமங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்கும் எவராலும் சுட்டமுடியும். முஸ்லிம்கள் உண்மையில் தங்கள் சவக்குழியைத் தாங்களே வெட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். ஆண்களிலும் கல்லூரியைத் தாண்டுபவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். இதற்குப் பொருளாதாரக் காரணங்கள் இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தில், ஏன், உலகப் பொருளாதாரம் இருக்கும் நிலையில், வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதித்துக் குடும்ப வண்டியை இழுப்பது எவ்வளவு சிரமம் என்பது மத்திய தரத்தினருக்கு நன்றாகத் தெரியும். இதில் அடிப்படை வாதத்தால் உந்தப்பட்டுப் பெண்களைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தபின், வெகு சிரமப்பட்டுக் கல்லூரியை முடிக்கும் இளைஞர்களைக் கொண்டு பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற முடியும்? அதே நேரத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்த எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள், பொறியியல், வணிகம், மருத்துவத் துறைகளில் நுழைந்து வெகுசிறப்பான நிலைகளுக்கு வந்திருக்கின்றன.

ஒரு வாதத்துக்காக முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் தாழ்நிலையில் இருக்கும் ஏழை இந்துக்கள் எத்தனை அரசு அலுவலகங்களைத் தகர்த்திருக்க வேண்டும்! பல்லாயிரக் கணக்கான ஏழைத் தமிழர்கள் வாழும் மும்பைச் சேரிகள் இந்நேரம் எத்தனை தீவிரவாதிகளை உருவாக்கியிருக்க வேண்டும்?

இவர்கள் சொல்லும் இன்னொரு வாதம் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளும், ஊக்கமும் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது. ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானியை ஜனாதிபதியாக்கிப் பார்த்த நாட்டைப் பார்த்துக் கூசாமல் இவர்களால் எப்படிப் பொய் சொல்ல முடிகிறது? இந்திய தேசம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கிரிக்கெட்டில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் முஸ்லிம் இளைஞர்தானே! சானியா மிர்ஸாவுக்குத் தொடர்ந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் வருவது இந்திய அரசாங்கத்திடமிருந்தா, இல்லை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தா?

அபூர்வமாக பதிலுக்கு இந்துக்களிடமிருந்து வன்முறை கிளம்பினால் தேசமெங்கும் கண்டிக்கப்படுகிறது. ‘நான் ஒரு இந்துவாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்’ என்ற கூக்குரல்கள் கூட அவ்வப்போது எழும்புகின்றன. நம் பத்திரிகைகளும் மை தீரும் வரை கண்டித்துத் தலையங்கங்கள் எழுதிக்கொண்டே இருக்கும். இது போன்ற அறக்கோபம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களில் நூறில் ஒரு பங்கு கூட, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறித்தனத்தின் போது இஸ்லாமிய சமூகங்களிலிருந்தோ, நம் ‘செக்யூலர்’ ஊடகங்களிலிருந்தோ எழுவதில்லை.

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும் தவறாமல் பாபர் மசூதி இடிப்பையும், குஜராத் கலவரங்களையும் ஒரு சமநிலைக்காக முன்னணியில் வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படியானால் 64 முறை இடிக்கப்பட்ட சோமநாதபுரம் (மற்றும் எண்ணற்ற கோவில்களை) இந்துக்கள் காட்டி நியாயம் கற்பிக்கலாமே. பாமினி புத்தர் சிலைகளைத் தகர்த்ததை பௌத்தர்கள் சுட்டிக் காட்டலாம். இதெல்லாம் வாதமே அல்ல. ஆனாலும், ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் நம் ஊடகங்கள் ஏதாவது ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன.

நேற்று ஒரு செய்திச் சேனலில் மும்பை குண்டுவெடிப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியானது. அதில் பேசிய ஒருவர் சொன்னது: “BJP உண்மையிலேயே தலைகுனிய வேண்டிய நேரமிது. ஏனென்றால் பாபர் மசூதியை இடித்து இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்ததே அந்தக் கட்சிதான்!” தொழுகைக்குப் பயன்படாத பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியாவில் முஸ்லிம் தாக்குதல்களே நடைபெற்றது கிடையாதா?

இதோ இப்போது மும்பை தாக்குதல்களை நியாயப்படுத்தி, நம் சிறுபத்திரிகைகள் மெல்ல, மெல்லத் தம் ஆஸ்தான எழுத்தாளர்களை வைத்துக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கும். தவறாமல் அக்கட்டுரைகளில் மோடி, குஜராத், மலேகான் போன்ற வார்த்தைகள் இடம்பெறும். ஒருவேளை இக்கட்டுரைகள் இவர்களைத் துகிலுரித்துக் காட்டிவிடுமோ என்ற அச்சம் இருந்தால், மொத்த குண்டுவெடிப்பையும் மறந்துவிட்டு ஏதாவது மேற்கத்திய எழுத்தாளரின் கதைகளை மொழிபெயர்த்து இப்பத்திரிகைகள் வெளியிடும். இவர்களுக்குத்தான் கட்டமைப்பை விடக் கட்டுடைப்பு அதிகம் பிடித்ததாயிற்றே.

மொத்தத்தில் பொறுப்பில்லாத, கைக்கூலித்தனம் இந்திய ஊடகங்களின் அடையாளமாகிவிட்டது. இருந்திருந்தால், பந்துக்குப் பந்து கிரிக்கெட் விமர்சனம் போல, பயங்கரவாதத் தாக்குதலைக் காண்பித்து விவரித்து, ISI முன்னாள் அதிகாரி ஒருவர் இங்கே செயல்பட்ட வன்முறைக் கும்பலுக்குச் சரியான அழிவுக்கு வழிகாட்ட உதவியிருக்க மாட்டார்கள். இருந்திருந்தால், மத்திய அரசுக் கட்டில் மிக நெடுங்காலமாக உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் அரசின் கையாலாகத் தனத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை ‘அரசியல்வாதிகளின் மீதான கோபம்’ என்று திசைதிருப்பிக் காட்ட மாட்டார்கள்.

இனிமேலாவது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.

Sunday, November 30, 2008

தீவிரவாதிகளை வென்ற கதை


தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசுஅறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும்பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாகஉள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ்டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டுஇருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்குவழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள்சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீவைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறுஇருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்றநமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒருகுறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டைநடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்குசென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இதுசொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரியபோராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சிபெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்துகொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம்மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிகநிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின்அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தைகணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொருகுழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாகஇவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும்அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டுகாட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பலஇடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்றசண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும்அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்டஇடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்ததீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேரசண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூடஇருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓடமுயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்கவிரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கிஇருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்றமற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும்சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில்கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில்மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல்ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒருகமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்றுசொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதேசமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்றஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல்படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும்பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலைதீவிரப் படுத்தினர். "

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்தகளைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல்சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதிரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்றுஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலைநிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும்தெரிவித்தார். "

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்துகொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ளசெய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும்அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சிலகுண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும்ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்தநிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோகூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்லமெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னாபின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளேகூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்துகட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்குவாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்கநினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர்சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம்இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவுமிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள்பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும்முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காகஉயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம்செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்டசொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும்கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்குமுன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்துகொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும்சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும்தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும்கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவுகடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"

நன்றி - சந்தைநிலவரம்

Thursday, November 27, 2008

மும்பையில் ஏழு இடங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு- - 78 க்கும் மேற்பட்டோர் பலி - 200 க்கும் மேற்பட்டோர் காயம்



மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் பரப்பளவும், உக்கிரமும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ராணுவ படையெடுப்புப் போன்றிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாக NDTV சொல்வதை விழித்திருந்து பார்க்கும் பொழுது, அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. பத்து இடங்களில் தாக்குதல் நடந்திருந்ததாக முதல்வர் தேஷ்முக் அறிவித்திருக்கிறார்.

தாஜ், ட்ரைடண்ட் போன்ற நட்சத்திர விடுதிகளைத் தேர்ந்தெடுத்தது, பரவலான பார்வையைத் தங்கள் மீது திருப்பும் - விளைவிக்கப்போகும் மரணங்கள் - இந்தியர்களாக மட்டுமே இருக்கக் கூடாது - ஆனால், உலகின் பல பாகங்களிலிருந்துமிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். அதன் மூலம் தங்களை அனைவரும் நோக்க வேண்டுமென்ற வெறியுடன் இயங்கியிருக்கிறார்கள், வெறியர்கள்.

டெக்கான் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

மும்பையின் தலை சிறந்த போலிஸ் அலுவலர்கள் இறந்திருக்கின்றனர். ATS Chief Hemant Karkere, Mumbai ACP Ashok Kamte, Cop Vijay Salaskar கொல்லப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 11 போலிஸினர் - 4 - 5 அதிகாரிகள் உட்பட கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மும்பை முழுவதும் ராணுவம் அனுப்பட்டிருக்கிறது. 5 Columns of army and 200 NSG commondos have been called. படகுகளின் மூலம் தீவிரவாதிகள் வந்திருக்கக் கூடும் - அது ஒன்றே பத்து இடங்களில் நிகழ்ந்த தாக்குதலை - geographically explaining.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாஜ் ஹோட்டலின் உள்ளே - அனைத்து ஊடகங்களின் முழு பார்வையும் பதிந்திருக்கும் பொழுதே -ஐந்து வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். சில பாகங்களில் தீ பிடித்து எரிகின்றது. அடிபட்டு விழுந்தவர்களை தூக்கிக் கொண்டு, இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

இதுவரையிலும் குண்டுகளை ஒளித்து வைத்து விட்டு ஓடிப்போனவர்கள், இந்த முறை நேருக்கு நேராக மோதத் துணிந்திருக்கிறார்கள். அப்பாவிகள் அதிகம் கூடியிருக்கும் - அதிலும் வெளிநாட்டினர் அதிகமிருக்க வாய்ப்புள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின் தீவிரத்தை விவரித்த NDTVயின் பாசு, இது காஷ்மீரத்தில் நிகழ்ந்த யுத்தம் போலிருக்கிறது என்கிறார்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை 80ஐத் தாண்டி விட்டது. 9 பேர் வெளி நாட்டினர். இன்னமும் தாஜ் ஹோட்டலின் உள்ளே துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

9 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னமும் 2 நபர்கள் உயிருடன் பிடிபடாதிருக்கின்றனர்.3 பேர் தப்பித்து ஓடியிருக்கின்றனர். அகற்றப்படாத உடல்கள் தாஜ் உள்ளே கிடப்பதாக வெளியேறியவர்கள் சொல்லியிருக்கின்றனர். இன்னமும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்.

சிலரை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும். இன்னமும் நிலைமை கட்டுக்குள் வரவில்லையென்று மகாராஷ்ட்ரா முதல்வர் நிருபர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும்.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களைப் பிடித்து மரணங்களை விதைத்தது போன்று அவர்களையும் மரணத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த சூழலில், தீவிரவாதிகளுடன் யுத்தம் புரிந்து இறந்து போன அந்த போலிஸ் அதிகாரிகளுக்கு - A Salute to you all Officers.

No amount of words would express our gratitude.

May God give the strength to your family to bear the losses.

மொத்த இந்தியாவுமே, உங்களின் தீரம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கிறது.


JAIHIND! Indian Police Officers!


Thanks - nanbanshaji.blogspot


 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009