Tuesday, April 14, 2009
தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!
கலைஞர் என்ன தான் மட்டும் தான் தமிழ் காவலர் என்று யாரிடமாவது சான்று பெற்றுள்ளாரா!
அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை நீக்கி பழையபடியே ஏப்ரல் 14 தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பார்! இதை கேட்கிற தமிழ் நாட்டு மக்கள் என்ன கேனயர்களா!
எதை எதையோ எழுதலாம் என்று இருந்தேன்! இந்த நல்ல நாளில் அரசியல் சாக்கடைகளைப்பற்றி பேச வேண்டாம் என்று இத்துடன் முடித்து கொள்கிறேன்!
Friday, March 20, 2009
Tamilnadu election survey 2009 - தமிழ்நாடு இளைஞர் ஓட்டு யாருக்கு?-- விகடன் மெகா சர்வே முடிவுகள்!
இது தேர்தல் சீஸன்!
அதிகாரம் யாருக்கு என்பதுதான் எல்லாத் தேர்தல்களும் தீர்மானிப்பது. மக்களின் விருப் பங்கள் என்ன என்று தெளிவு பெற விகடன் எடுத்தது மெகா சர்வே.
அதுவும் வாக்குச் சாவடிக்கு வலது காலை முதல் தடவையாக எடுத்துவைக்கும் இளம் தலைமுறை என்ன நினைக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினோம்.
'இளைஞர் ஓட்டு யாருக்கு?' என்ற கேள்வியே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அதுதான் முதல் மெகா சர்வேயின் அடித்தளம். அரசியல் மேடைக்கு இந்தத் தலைமுறை முதல் முத்தம் வைப்பதற்கு முன்னால் அவர்களின் ஆசைகள், கோபங்கள், விருப்பங்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற மாதிரியான கேள்வி கள் தயாரிக்கப்பட்டன. வாக்களிக்கும் வயது 18 என்பதால் கேள்விகளும் 18.
'உங்களிடம் வாக்கு கேட்டு நிற்கும் மனிதரிடம் முதல் தகுதியாக என்ன எதிர்பார்ப்பீர்கள்?' என்பதில் ஆரம்பித்து, 'அடுத்த பிரதமராக வரப் போவது யார்?' என்பதில் முடிகின்றனகேள்வி கள். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்ற நமது டீம், 18 வயதைத் தாண்டிய கல்லூரி மாணவ-மாணவியர், வேலை பார்க்கும் இளைஞர்கள், வேலைக்குக் காத்திருப்போர், விவசாயி கள், தொழிலாளர்கள் என இளவட்டங்களாகப் பார்த்து கேள்வித் தாள்களை நீட்டினோம்.
'இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் அக்கறை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லை. காலேஜ், சினிமா... இரண்டைத் தாண்டி எதுவுமே தெரியாது' என்று பெருசுகள் உதிர்க்கும் அவச் சொற்கள் அத்தனையும் பொய். ஐந்தாவது கேள்விக்கான பதில்களில் 'ஓட்டுக்குத் துட்டு கொடுக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற பதிலை ஏன் சேர்க்கலை?' என்று மதுரை கல்லூரி மாணவி ஒருவர் கேட்டார். நம் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் மட்டுமல்ல, அக்கறையும் அதைத் தாண்டிய தீர்க்கமான முடிவுகளும் இருக்கின்றன என்பதுதான் விகடன் கண்டுபிடித்த முதல் ரிசல்ட். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்!
''இளைஞர்களுக்கு அரசியல் அறிவு இல்லாததால்தான் நல்ல தலைவர்கள் உருவாவது தடைப்பட்டது'' என்று பெரியகுளம் ஜெயராஜ் கலைக் கல்லூரி மாணவர் முருகன் காரணம் சொன்னார். கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி உமா கௌரி அடித்த காமென்ட்டுகள் விறுவிறுப்பானவை. ''ஓட்டுப் போடவே எரிச்சலா இருக்கு. ஆனா, ஓட்டுதான் அரசியல் மாற்றத்துக்கான ஒரே ஆயுதம் என்பதால் நிச்சயம் வாக்களிப்பேன். அரசியல் இன்று வியாபாரமாக ஆகிவிட்டது. அதை மாற்றக்கூடியவர்கள் இளைஞர் படைதான்'' என்று கொட்டித் தீர்த்தார்.
அரசியல்வாதிகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் கோபங்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. 'தேர்தலுக்குச் செலவழிப்பதற்குப் பதில், தங்களுக்குள் பேசி முடிவெடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருவர் என்று சுரண்டித் தின்ன வேண்டியதுதானே?'' என்று கொதித்தார் திருவாரூர் ராஜா என்ற மாணவர்.
ஊழல் அரசியலுக்கு எதிராகவும், லஞ்சம் வாங்கிச் சொத்து குவிப்பதை அருவருப்பாகவும் இன்றைய இளைஞர்கள் நினைப்பது நம்பிக்கை தருவதாக இருந்தது.
இன்று தமிழ்நாட்டில் சூடான பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது இலங்கை விவகாரம். இது குறித்துஇளைஞர் களுக்குக் கவலைகள் அதிகம் இருக்கின்றன. 'எந்தக் கட்சியும் இலங்கைத் தமிழர்களுக்குச் சரியான நம்பிக்கையைத் தர வில்லை' என்கிறார்கள். 'நிச்சயமாக இலங்கைப் பிரச்னை, காங்கிரஸையும் அதோடு ஒட்டி உறவாடும் கட்சிகளையும் பாதிக்கும்'' என்று ஆவேசப்பட்டவர் திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார். 'இலங்கைத் தமிழருக்காக இதுவரை எதுவும் செய்யாம, இப்ப திடீர்னு உண்ணாவிரதம் உட்கார்றாங்களே. ஏன் இந்த திடீர் கரிசனம்?' என்று கிண்டலடித்தார் அதே ஊரைச் சேர்ந்த உதயா என்ற மாணவி. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையை உருட்டிக்கொண்டு இருப்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளார்கள்.
எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜயகாந்த் சொல்லி வந்தாலும், அவர் எதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் சேருவார் என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. ''தனியாப் போட்டியிட்டால்தான் அவருக்கான உண்மையான செல்வாக்கு என்ன என்பது அவருக்கே தெரியும்'' என்று ராமநாதபுரத்தில் ஒரு மாணவி சொல்ல, அவருடன் இருந்த தோழி, ''அப்படி அவரு போட்டியிட்டா நிச்சயம் எல்லாத் தொகுதியிலயும் டெபாசிட் போகும். அதைப் பார்த்தாவது புதுசா யாரும் கட்சி ஆரம்பிக்க மாட்டாங்க'' என்று அதிர்ச்சி ஊட்டினார்.
யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு மன்மோகனும் அத்வானியும்தான் இளைஞர்களின் சாய்ஸாக இருந்தது. மாயாவதியில் ஆரம்பித்து ஜே.கே.ரித்தீஷ் வரை தங்களுக்குப் பிடித்த ஆட்கள் பெயரைச் சொல்லி காமெடி பண்ணவும் தவறவில்லை. அக்கறையுள்ள இந்தியன், நேர்மை யானவர், நாட்டுப்பற்றுள்ளவர் பிரதமராக வர வேண்டும் என்பது பலரது ஆசை.
விகடன் டீம் சந்தித்தது மொத்தம் 2,301 இளைஞர்களை. அவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் மகத்தான செய்திகளை நாட்டுக்கு அறிவிப்பதாக அமைந்துள்ளன. யாரு டைய தாக்கமும் இல்லாமல் சுய முடிவுப்படிதான் நாங்கள் வாக்களிப்போம் என்று இளைஞர்கள் சொன்னது நம்பிக்கை யாக இருந்தது. தனது பிரதிநிதியாக சட்டமன்ற, நாடாளு மன்றத்தில் இருப்பவர் படித்தவரா, உள்ளூர்க்காரராஎன்பதை விட, ஊழலற்ற மனிதரா என்பதே முக்கியம் என்கிறார்கள். சாதி அரசியலை வெறுக்கும் இளைஞர்கள், ஓட்டைத் துட்டுக்கு விற்கும் செயலைக் கொடும் குற்றமாகக் கருது கிறார்கள். ஓர் அரசியல் தலைவரின் வாரிசு தகுதியானவராக இருந்தால், அவரை அரசியலுக்குக் கொண்டுவருவது தவறல்ல என்றும் கருதுகிறார்கள் இளைஞர்கள். அரசியல்வாதிகள் மீது எல்லாக் கோபங்களும் வைத்திருக்கும் இளைஞர்கள் வாக்களிப்பது அவரவர் விருப்பம் என்று சொல்லி அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். ஓட்டுப் போடு என்று கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை. அரசாங்கம் வழங்கும் சலுகைகளை ரத்து செய்யலாம் என்றும் பலர் வாக்களித்துள்ளார்கள்.
கல்லூரிகளுக்குள் அரசியல் புகுவதை இவர்கள் விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்துக்குள் அரசியல் புகுந்து, நடுநிலையான அமைப்பைச் சிதைத்து வருவதை வேதனையுடன் பார்க்கிறார்கள். ஈழப் பிரச்னையில் கருணாநிதியின் அணுகுமுறை தமிழினத் துரோகம் என்று முகத்தில் அடிப்பது மாதிரி தீர்ப்பளித்துள்ள இளைஞர்கள், ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தையும் பச்சையான சந்தர்ப்பவாதம் என்று கண்டிக்கிறார்கள்.
மதத் தீவிரவாதத்தை எதிர்த்துப் பேசுவதில் இளைஞர்கள் ஓட்டை இடதுசாரிகளால் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. பெண்களுக்கு அ.தி.மு.க-தான் அதிக முக்கியத்துவம் தருவதாக இவர்கள் சொல்கிறார்கள்.
'வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் ஈடுபட விருப்பமா?' என்ற கேள்விக்கு, 'எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயமாக வருவேன்' என்று 2,301 பேரில் 1,141 பேர் சொன்னார்கள்.
எல்லா இரவும் விடியும் என்பதே நம்பிக்கை!
Thursday, March 12, 2009
India's 50 Most Powerful People - இந்தியாவின் 'சக்தி 50'ல் ரஜினி-மாறன் சகோதரர்கள்!

இந்தியாவின் 50 சக்தி வாய்ந்த பிரமுகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா டுடே இதழ், இந்தியாவின் டாப் 50 பிரமுகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்திய அரசியல் மற்றும் அரசியல் அல்லாத துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பட்டியல் இது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஜினிகாந்த், தென்னிந்திய திரைத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார். ரஜினிகாந்த் இல்லாமல், இந்திய சினி்மாத்துறை இல்லை என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
முன்பு பல சந்தர்ப்பங்களில் ரஜினிகாந்த்தை இந்தியா டுடே விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத் துறையினரிடையே பெருந்தன்மையான மனதுக்குச் சொந்தக்காரராக ரஜினி விளங்குகிறார். பாபா, குசேலன் படங்கள் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களின் நஷ்டத்தைக் களைய பல கோடி ரூபாய்களை திருப்பிக் கொடுத்த அதிசய மனிதர் ரஜினி எனவும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
50 பேர் பட்டியலில் ரஜினிக்கு 28 ரேங்க். மேலும், புகழ் மன்னன் என்ற பட்டத்தையும் இந்தியா டுடே ரஜினிக்கு சூட்டியுள்ளது.
அரசியல் சக்திகள் வரிசையில் சோனியா காந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடம் அவரது மகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்திக்குக் கிடைத்துள்ளது. 3வது இடத்தில் இருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அத்வானிக்கு 4வது இடம்தான் கொடுத்துள்ளது இந்தியா டுடே.மாயாவதி 7வது இடத்தில் இருக்கிறார். பத்தாவது இடத்தில் இருப்பவர் லாலு பிரசாத் யாதவ்.
ஷாருக்கானுக்கு 5வது இடம்:
அரசியல்வாதிகள் அல்லாதோர் பிரிவில் 5வது இடத்தில் இருக்கிறார் ஷாருக் கான்.
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 11வது இடமும், 16வது இடத்தில் அமீர் கானும், 19வது இடத்தில் அமிதாப் பச்சனும் உள்ளனர்.
24வது இடத்தில் மாறன் சகோதரர்கள்
சன் டிவி அதிபர் கலாநிதி மாறனும், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் இணைந்து 24வது இடத்தில் உள்ளனர்.
மீடியா ஜாம்பவான்களில் ஒருவரான பிரனாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும் 42வது இடத்தில் உள்ளனர்.
செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு இந்தப் பட்டியலில் 47வது இடம்.
நன்றிகள்
தமிழ் - Thatstamil
படம் - Busiiness வீக்
இது தொடர்பான ஆங்கில செய்தி இந்தியா டுடேயிலிருந்து ......
28. RAJINIKANTH, 58, ACTOR
BIG BROTHER
Because the one-time carpenter and conductor has fanatics extending from Japan to Korea, and his 38,000 registered fan clubs around the world with an estimated 19 lakh members are waiting for him to start his own political party.
Because every time he stars in a flop, such as Kuselan, he compensates his distributors and bounces back with a big budget blockbuster, such as Shankar’s Rs 150-crore film, Endiran.
Because no protest or celebration in Tamil tinseltown is complete without his presence.
Spiritual guru: Swami Satchidananda of Rishikesh, on whose call he made a movie, Baba, before the Swami’s death in 2002.
unforgettable number 10A, the route number on which he was a conductor in his early days in Bangalore.
His political icon: Former Singapore premier Lee Kuan Yew.
http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=31652&Itemid=1&issueid=96§ionid=30&limit=1&limitstart=௨
http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=31590&Itemid=1&issueid=96§ionid=3&limit=1&limitstart=௧Wednesday, March 11, 2009
49-O Election Rule in india - யாருக்கும் ஓட்டில்லை: ஆன்-லைனில் தீவிரம்
இப்போது, இந்த கோஷம் வலுத்து வருகிறது. தொகுதியில் நிறுத்தப்பட்ட எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை எனில், யாருக்கும் ஓட்டு போடாமல் இருக்கலாம்; அதற்கு ஓட்டுச்சீட்டில் தனி பிரிவு அமைக்கலாம் என்று பலரும் யோசனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கோர்ட்டுகளிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இப்போது, ஆன்-லைனில் இந்த பிரசாரம் அதிகரித்து வருகிறது.
மேலே பெயர் குறிப்பிட்டுள்ள யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என்று ஓட்டுச் சீட்டில் தனி கட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான் எங்கள் ஜனநாயக ரீதியான அதிருப்தியை வெளிப்படுத்த முடியும்' என்று ஆன்-லைனில் கருத்துக்கள் குவிந் துள்ளன.இது தொடர்பாக, சில வெப்சைட்கள் முளைத்துள்ளன. அவற்றில் இது தொடர்பான விஷயங்களை பலரும் வெளியிட்டுள்ளனர்.சில வெப்சைட்களில்ப்ளாக்' பிரிவுகளில் தன் கருத்துக்களை பலரும் தெரிவித்துள்ளனர். "பல நாடுகளில் நெகட்டிவ் ஓட்டு' உரிமை மக்களுக்கு உள்ளது. அவர்களுக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஓட்டளிக்காமல் இருக்கலாம்.அதே சமயம், ஓட்டுரிமையை பயன்படுத்தவும் செய்யலாம். இதற்காக, ஓட்டுச் சீட்டில் கடைசி கட்டத் தில், யாருக்கும் என் ஓட்டில்லை' என்று எழுதப்பட்டிருக்கும். அதில், முத்திரையிட்டு தன் அதிருப்தியை வெளிப்படுத்தலாம்' என்று "ப்ளாக்கில்' சிலர் கூறி, அதற்கு பல நாடுகளை உதாரணம் காட்டியும் உள்ளனர்.
கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வேட்பாளராக நிற்பதும், அவர்கள் எம்.பி.,யாக அமர்வதும், மந்திரியாவதும் வாடிக்கையாகிவிட்டது. "இப்படிப் பட்டவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு வேண்டுமா' என்று ஆவேசத்துடன் சிலர் கருத்து கூறியுள்ளனர்.ஆனால், அரசியல் சட்ட நிபுணர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. "ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சியை, வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தான் உள்ளது.
எதிர்மறையான நடவடிக்கையை வெளிக்காட்ட ஜனநாயகத்தில் இடமில்லை. ஆனால், கிரிமினல் வேட் பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வரும் நிலை துர திருஷ்டமானது தான். அதை தவிர்க்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்று தெரிவித்தனர்.
Saturday, March 07, 2009
Rajini Voice in 2009 Election - தேர்தல் : ரஜினி முடிவு என்ன ?

இதோ தேர்தலை அறிவித்துவிட்டார்கள். பரபரப்பு ஸ்டார்ட் ஆகிவிட்டது. தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் மற்றும் புலனாய்வு இதழ்களின் அடுத்த வழக்கமான சம்பிரதாயம் “ரஜினி வாய்ஸ் யாருக்கு?” என்று தலைப்பிட்டு தங்கள் இஷ்டத்துக்கு எழுதித் தீர்ப்பது தான்.
ஒரு பத்திரிக்கையாக மேலே சொன்னபடி எழுத அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் அப்படி எழுதுவதன் உள்நோக்கம் தான் நாம் கவனிக்கவேண்டியது.
நேரடியாக அரசியலுக்கு வராமல் அரசியல் பற்றிய எதிர்பார்ப்பு 13 வருடங்களாக ஒருவர் மீது இருக்குமானால் அது சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் இதுவரை ரஜினி ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பரப்பரப்பு அனைத்தும் ஜஸ்ட் வெறும் அறிக்கை மற்றும் தொலைகாட்சி பேட்டிகள் மூலம் மட்டுமே என்பது நினைவுகொள்ளத் தக்கது. அவர் எந்த சூழ்நிலையிலும் மக்களை இதுவரை நேரடியாக சந்திக்கவில்லை என்பதை “ரஜினி வாய்ஸ்” குறித்து அவ்வப்போது ஆதங்கப்படும் தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் நினைவில் கொள்ளவேண்டும்.
சூப்பர் ஸ்டாரின் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் சுருக்கமாக அதே சமயம் சரியாக இன்றைய மாலை மலர் தந்திருக்கிறது. முதல் இரண்டு பாராக்கள் சூப்பர்.
“ரஜினியிடம் அரசியல் இல்லை. ஆனால் அவரை சுற்றி அரசியல் உண்டு.” - வைரமுத்து.
Over to Maalai Malar (06/03/09)
பாராளுமன்ற தேர்தல் ரஜினி ஆதரவு யாருக்கு?
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ரஜினி ஆட்டி வைத்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. விரல் அசைவுக்காக காத்திருக்கும் ரசிகர் படை தமிழ் மக்கள் அளித்துள்ள சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றால் அவரது ஆதரவை பெற அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வரிந்து கட்டுவது உண்டு.
ரஜினி கட்சி துவங்கி அரசியலில் ஈடுபட வேண்டுமென ரசிகர்கள் வற்புறுத்தல்கள் தொடர்கிறது.. இவ்விஷயத்தில் அவர் தொடர்மவுனம் கடைபிடிப்பதால் தேர்தல்களில் அவர் கை நீட்டும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஆறுதல் படுகின்றனர்.
1996-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக அரசியல் களத்தில் பிரவேசித்தார் அ.தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக கருணாநிதி, மூப்பனாரை நேரில் சந்தித்து தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 1998 தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார். ஒரு வருடத்திலேயே அ.தி.மு.க-வால் மத்திய அரசு கவிழ்ந்தது. 1999-ல் தேர்தல் நடந்த போது பல கட்சிகள் ரஜினி ஆதரவை நாடி தூதுவிட்டன. ஆனால் எக்கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.. நடுநிலைமை வகித்தார். ரசிகர்கள் தனது படங்களை தேர்தலில் பயன்படுத்தக்கூடாது எனவும், தடை விதித்தார்.
ஆனால் 2004 பாராளுமன்ற தேர்தலில் நிலைப்பாடு மாறியது. பா.ம.க-வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அக்கட்சிக்கு எதிராக இறங்கினார்.. பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் எதிராக ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் என்றார். அதோடு நதி நீர் இணைப்பை நிறைவேற்றுவதாக அறிவித்த பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போடுவேன் என்றும் வெளிப்படையாக சொன்னார். அது போல் ஓட்டும் போட்டார்.
ஆனால் 2006 சட்ட சபை தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் மீண்டும் மவுனம். அவரது படங்களுடன் சென்று பிடித்த அரசியல் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்த ரசிகர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போதைய தேர்தலில் ரஜினி நிலை என்ன என்று ரசிகர்களும் அரசியல் கட்சியினரும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கின்றனர். மறைமுகமாக சில கட்சிகள் அவரது ஆதரவை கேட்டு தூது அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி படங்கள், ரசிகர்மன்ற கொடிகள் போன்றவற்றுடன் சென்றால் கூடுதல் வாக்குகளை திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.
ரஜினி ஏதேனும் கட்சியை ஆதரிப்பாரா அல்லது நடுநிலைவகிப்பாரா என்பது இன்னும் ஒரிருவாரத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முடிவை ரசிகர்மன்ற தலைவர் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் மூலம் விரைவில் தெரிவிப்பார் என்று ரசிகர்மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.
நன்றி - onlysuperstar.comWednesday, January 21, 2009
நேர்மையான எம்.பி.க்கள்!
பொ.மோகன் பற்றி கீழ்க்கண்டவாறு அப்பத்திரிகை எழுதியுள்ளது.
“முன்பெல்லாம் நாடாளுமன்றத்திற்கு எனது அப்பா நடந்தே போவார். இப்போது அவரிடம் சைக்கிள் ஒன்று உள்ளது. டில்லியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்வது போல அவரது புகைப்படம் ஒன்றை மலையாள பத்திரிகை வெளியிட்டிருந்தது” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மோகனின் இளைய மகள் பாரதி.புகைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அது டில்லியாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக கிளிக் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் கட்சியால் வழங்கப்பட்ட பஜாஜ் எம்80 வண்டியில்தான் இன்னும் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஒரு முறை, ரேசன் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் வண்டி நின்று விட்டதால் இறங்கி அவரே சரி செய்ய முற்பட்டார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நாளிதழின் புகைப்படக்கலைஞர் அதைப் படம் பிடித்தார். அடுத்த நாள், முதல் பக்க புகைப்படமானது.
டில்லியில் இருக்கும்போது நாடாளுமன்றத்திற்கு நடந்து செல்வதைப் பார்க்கலாம். மூன்று முறை தேர்தலில் தோல்வியுற்று, 1999 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரான பொ.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கத்தில் தனது பணியை 1973 ஆம் ஆண்டு துவக்கினார். கடந்த சில ஆண்டுகளில் மதுரையின் வளர்ச்சிக்கு அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மதுரைக்காரர்கள் சொல்லி வருகிறார்கள்.
மதுரையில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை இந்தத் தொகுதிகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தருகிறார். இந்தப் பணிகள் நடைபெறுவதையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்.
கிராமம் ஒன்றில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் சிமெண்டுடன் அதிக மணலைக் கலந்து வந்தார். உங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள் என்று மக்களிடம் மோகன் கூறினார். மக்களே அந்த ஒப்பந்ததாரர்களை தூக்கி எறிந்தார்கள்.
மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் ஜோதி கணேஷ் என்ற வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன்தான்.
யாரிடமிருந்தும் அவர் பணத்தை வாங்கியதில்லை என்பதற்கு நான் சாட்சியாகும். அவருக்கு எதிரான கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், இதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் குறிப்பிடுகிறார்.
நன்றி - The Sunday Indian
Sunday, January 18, 2009
திருமாவின் புலி ஆதரவு எல்லை மீறுகிறது
நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்திருமாவளவனுக்கும், காங்கிரஸுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்தான் என்ற நிலையில், இதில் இன்னொரு வில்லங்கமாக வந்து முளைத்திருக்கிறது ஒரு சி.டி! அது புலிகளை ஆதரித்து திருமா வெளியிட்டுள்ள `எகிறிப் பாய்' என்ற சி.டி.
கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய `தமிழீழ அங்கீகார மாநாட்டில் வெளியிடப்பட்ட குறுந்தகடு அது. இதற்காக திருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.
``திருமாவளவனின் புலி ஆதரவு எல்லைமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. `கடுமையான நடவடிக்கை எடுப்போம்!' என்று வைகோ, சீமானை எல்லாம் கைது செய்த முதல்வர், திருமாவிற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை? முன்பு புலிகளுக்கு ஆதரவாக வெறும் பிரசாரம் மட்டுமே செய்து வந்த திருமா, இன்று சி.டி. போட்டு பிரசாரம் செய்ய யார் இடம் தந்தது? அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா? `எகிறிப்பாய்' என்ற அந்தக் குறுந்தகடை வாங்கி நானும் கேட்டேன். அதில், தொடக்கத்திலேயே மூன்று நிமிடங்கள் உரையாற்றுகிறார் திருமா.
`விடுதலையைக் கேட்டதற்கு சிங்களவன் இனப்படுகொலையைச் செய்கின்ற செய்தி கேட்டு- வீரமுள்ள மறத்தமிழா இன்னுமிங்கே விழிமூடிக்கிடக்கின்றாயே? நியாயம்தானா? இளம் தமிழா எழுந்து வாடா போருக்கு! -உன் இனப்பெருமையை எடுத்துச் சொல்லு பாருக்கு! நிரந்தரமாய் நாடு வேண்டும் யாருக்கு? நம் நேசமுள்ள தமிழர்களின் வாழ்வுக்கு!' என்று அதில் சீறுகிறார்.இப்படிச் சொல்லி இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரிவினை வாதத்தை திருமா தூவுகிறார். நிரந்தரமாய் நாடு வேண்டும் என்கிறார். யாருக்கு என்றால் இலங்கையில் உள்ள தமிழனுக்கு. அங்கே தனிநாடு கேட்பது யார்? விடுதலைப் புலிகள்தானே? தடைசெய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படி இங்கே பிரசாரம் செய்தால் தமிழ்நாட்டில் அல்லவா அமைதி கெடும்? அது மட்டுமல்ல, அந்தக் குறுந்தகட்டில் வரும் முதல் பாடலே பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்து பிரசாரம் செய்வதாக உள்ளது.
`பழந்தமிழன் வீரம் இன்னும் செத்துப் போகவில்லை! தமிழ்ப் பரம்பரைக்கே சரணாகதிப் பழக்கமென்றுமில்லை! பாருக்கதை உணர்த்துகிறான் தம்பி வேலுப்பிள்ளை! அவன் பக்கம் செல்லும் தகுதி நம்மில் யாருக்குமே இல்லை!' என உள்ளது அந்தப் பாடல். அதை எழுதியவர் திருமாதான். பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமான பிரபாகரனின் பின்னால் செல்லும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை என்று கூறி இங்குள்ள தமிழ் மண்ணின் தலைவர்களை, மைந்தர்களை கேவலப்படுத்துவதாக உள்ளது அந்தப் பாடல். அதே பாடலில்...
`தமிழனென்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. தலைநிமிர்ந்து நடப்பதற்கே கூச்சமாக இருக்கிறது. தமிழன் தலை ஈழத்திலோ ரத்தஆற்றில் மிதக்குது!- இந்தத் தமிழ்நாட்டு தறுதலைகள் திரையரங்கில் கிடக்குது!' என்ற வரிகளும் உள்ளன.
என்ன கொடுமை இது? `வெட்கமாக இருக்கிறது, கூச்சமாக இருக்கிறது' என்று எந்தத் தமிழனை இங்கே இவர் கூறுகிறார்? தமிழக முதல்வரையா? அல்லது காங்கிரஸ்காரர்களையா? அது மட்டுமல்ல, திரையரங்கில் கிடப்பவர்களெல்லாம் தறுதலைகளா? அவர்கள் தறுதலைகள் என்றால் சினிமாவில் நடிப்பவர்கள் யார்? திருமா இதையெல்லாம் விளக்க வேண்டும்.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனுக்காகவும் திருமா அந்த சி.டி.யில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதைப் பாடியிருப்பவர் உன்னிகிருஷ்ணன். தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படியெல்லாம் பிரசார பாடல் எழுதினால் என்ன அர்த்தம்? இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கம். தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் வேண்டும்.
அந்தத் தமிழீழ ஆதரவு மாநாட்டிலேயே பிரபாகரன் படம் போட்ட போஸ்டர், புத்தகங்களை எல்லாம் போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் இந்த `எகிறிப்பாய்' சி.டி.யை மட்டும் போலீஸ் எப்படி அனுமதித்தது என்பது தெரியவில்லை. சென்னை புத்தகக் காட்சியிலும் இது பரபரப்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடலை எழுதி வெளியிட்ட திருமா மீது நடவடிக்கை கோரி முதல்வர் கலைஞர், கவர்னர் மட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சர், எங்கள் கட்சித் தலைவி அன்னை சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்'' என்று குமுறி முடித்தார் பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.
இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சியில் பிரபாகரன் படம் போட்ட புத்தகங்களை விற்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அந்த மாதிரி புத்தகங்களை விற்கக் கூடாது என்று கியூ பிராஞ்ச் போலீஸார் தடை போட்டிருக்கிறார்கள். சிறுத்தைகளின் புத்தகக் கடைக்குப் போய் இப்படிக் கூறியபோது, `முடியாது! நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார்கள் அவர்கள்.
இந்த சர்ச்சை பற்றி காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தோம்.
``தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரிய டீம் காய் நகர்த்தி வருகிறது. இந்தப் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வரும் கலைஞரிடமும். அதற்கேற்ற கணிப்பு இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இதன் முதல்அடி தெரிந்துவிடும். இதற்குமேல் இப்போதைக்கு வெளிப்படையாக நாங்கள் எதுவும் பேச முடியாது'' என்று கூறிச் சிரித்தனர் அவர்கள்.
சரி! இந்தக் குறுந்தகடு பற்றிய குற்றச்சாட்டுக்கு திருமாவளவனின் பதில் என்ன? கேட்டோம்.
``நெஞ்சில் நஞ்சையும், வஞ்சகத்தையும் சுமந்து கொண்டு தமிழின துரோகத்தோடு பிரபாகரனைக் காட்டிக் கொடுக்கத் துடிக்கும் இவர்கள் (காங்கிரஸார்) எல்லாம் ஒன்று சேர்ந்து இதே பிரபாகரனை பாராட்டிப் போற்றி ஆதரித்துப் பேசிய காலத்தில், 83-ம் ஆண்டில் நான் எழுதிய பாடல்கள்தான் அந்த `எகிறிப்பாய்' குறுந்தகடு. இன்று அந்த காங்கிரஸ்காரர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், நான் மாறவில்லை. அந்தப் பாடல்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் எழுதவில்லை. உலகத் தமிழர்கள் பத்தரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். தேசிய இன அடிப்படையில் அவர்களுக்காக ஒரு நாடு வேண்டும் என்றுதான் குரல் கொடுத்திருக்கிறேன். அது ஒரு ஜனநாயகக் கோரிக்கையே தவிர குற்றமாகாது.
தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, இவர்கள் கற்பனை செய்வதைப் போல இந்தியாவிலிருந்து தனித்தமிழ் நாடு வேண்டும் என்று கோரவில்லை. தமிழினத்தை வைத்து பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் இத்தகைய துரோகக் கும்பலை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் தனிநாடு கோரவும் முடியாது. தமிழனுக்காகவே வாழ்ந்து தனித்தமிழ்நாடு கோரிய தமிழரசனை அடித்துக் கொன்ற மண் இந்த மண். இங்கே நாங்கள் தமிழ்ஈழம் வேண்டும் என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்தியாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பரப்பவில்லை.
காங்கிரஸ் கட்சியிலும் இனமானத் தமிழுணர்வுள்ள தமிழர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அதேபோல நாங்களும் அமரர் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை மட்டுமின்றி உண்மையான காங்கிரஸாரை மதிக்கின்றோம். மாறாக, சிங்களத் தூதர் அம்சாவின் எடுபிடிகளாக மாறி, அம்சா தருகிற கேளிக்கை விருந்துகளுக்கும், `பரிசு'களுக்கும் மயங்கிக்கிடக்கும் சில காங்கிரஸாரின் நிலையை ஏற்க முடியாது. அப்படிப்பட்ட போலி காங்கிரஸார்தான் இப்படி சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள். இவர்களுக்கு ராஜீவ் காந்தியை விட ராஜபக்ஷேதான் மானசீகத் தலைவர். ஆகவே, ராஜபக்ஷேவின் எடுபிடிகள் இப்படித்தான் பேசுவார்கள்'' என முடித்துக் கொண்டார் திருமா.
Tuesday, January 06, 2009
தமிழக வி.ஐ.பி.களுக்கு சப்ளையாகும்கள்ள துப்பாக்கிகள்
தமிழ்நாடே திருமங்கலம் இடைத்தேர்தலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, தூத்துக்குடி மக்கள் மட்டும் கள்ளத்துப்பாக்கி வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கள்ளத்தனமாக விற்கப்பட்ட துப்பாக்கிகளை வாங்கிய அனைவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வி.ஐ.பி.கள் என்பதுதான் அதற்குக் காரணம். துப்பாக்கி வியாபாரிகளைப் பிடித்து கம்பீரம் காட்டவேண்டிய போலீஸாரோ, தேன்கூட்டில் கை வைத்த கதையாக அலறிக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு ஒரு துப்பாக்கி வாங்கிய தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவர், இன்னொரு துப்பாக்கியை வாங்கி அதை அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவருக்கும் கொடுத்திருக்கிறார். அந்த இருவரும் ஒரே ஒன்றியத்தில் எதிரும் புதிருமாக அரசியல் செய்கிறவர்கள் என்பதுதான் வேடிக்கை.கள்ளத்துப்பாக்கி கும்பல் சிக்கியது எப்படி? அவர்களைப் பொறி வைத்துப் பிடித்த தனிப்படை டீமில் உள்ள போலீஸாரின் வாயைக் கிளறினோம்.
"தூத்துக்குடி ஏரியாவில் லோக்கல் ரவுடிகள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை சர்வசாதாரணமாக கள்ளத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருவது தெரிந்த விஷயம்தான். ஆனாலும், அவர்களை எந்த ஆதாரத்தில் பிடிப்பது என்று விழிபிதுங்கிக் கொண்டு இருந்தோம். அதே நேரத்தில் அவர்களுக்கு யார் துப்பாக்கிகள் சப்ளை செய்கிறார்கள் என்ற விஷயமும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி பகுதியில் கள்ளத் துப்பாக்கி விற்கும் கும்பல் நடமாடுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுகிறவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் தயாரானோம். யார் மூலம் துப்பாக்கிகள் தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது என்பதை முதலில் கண்காணித்தோம். சென்னை வண்டலூரில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் மேனேஜராக வேலை பார்த்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவன் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அதற்குக் காரணம், அவன் தூத்துக்குடிக்கு வரும்போதெல்லாம், பணத்தை தாராளமாகச் செலவு செய்து செல்வச் செழிப்போடு திரிந்ததுதான். அதைத் தொடர்ந்து அவனது நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். எங்கள் விசாரணையில் அவன்தான் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்குத் தூப்பாக்கிகளை கடத்திக் கொண்டு வருகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, அவனை முதலில் மடக்கத் திட்டமிட்டோம். இரண்டு, மூன்று முறை அவன் எங்களிடம் இருந்து தப்பிவிட்டான். இந்த நிலையில், கடந்த 28_ம் தேதி தூத்துக்குடி வந்த அவனைத் தூக்கினோம். அப்போதும் அவனிடம் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனாலும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்தான். அவனை இங்கே வைத்து விசாரித்தால் சொல்லமாட்டான் என்று, வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்துக்குக் கொண்டு போனோம். அங்கே கொண்டுபோனதுமே மிரண்டுபோய் சொல்லத் தொடங்கினான். அங்கே எங்கள் பாணி விசாரணையே தனி. அதற்கு பயந்துபோன அவன் உண்மைகளை கக்கத் தொடங்கிவிட்டான். `நான் மட்டும் துப்பாக்கிகளை விற்கவில்லை. என்னுடன் மேலும் மூன்று பேர் உண்டு' என்று அவர்களது பெயர் விவரங்களைச் சொன்னான்.
அவன் சொன்ன தகவலை வைத்து முத்துகிருஷ்ணாபுரத்தில் லாரி ஷெட் வைத்திருக்கும் மாயாண்டி, இந்திரா நகரைச் சேர்ந்த பழனிக்குமார், கே.வி.கே. நகரைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தோம். இந்த நான்கு பேரும் சேர்ந்துதான் ஒருவர் மூலம் ஒருவருக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்திருக்கிறார்கள். சரி, யாருக்கெல்லாம் துப்பாக்கிகளை விற்பனை செய்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போய்விட்டோம். காரணம், அவர்களிடம் துப்பாக்கிகள் வாங்கிய அனைவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வி.ஐ.பி.கள் என்பதுதான்!'' என்றவர்களிடம், `அந்த வி.ஐ.பி.கள் யார், யார்?' என்றோம். நீண்ட யோசனைக்கும் தயக்கத்திற்கும் பிறகே வி.ஐ.பி.களின் பெயர்களைச் சொன்னார்கள்.
"தூத்துக்குடி யூனியனில் சேர்மனாக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த கருணாகரன், ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு ஒரு துப்பாக்கி வாங்கியிருக்கிறார். அவரே இன்னொரு துப்பாக்கியை ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், மாவட்ட எம். ஜி.ஆர். மன்றத்தின் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனுக்குக் கொடுத்திருக்கிறார். தூத்துக்குடி வக்கீல் சங்கத் தலைவராக இருக்கும் பிரபு ஒரு துப்பாக்கி வாங்கியிருக்கிறார். தூத்துக்குடியில் இருந்து ஷிஃப்ட் ஆகி மதுரையில் செட்டில் ஆகிவிட்ட அடிதடிப் பேர்வழியான அசோக் என்பவர் இரண்டு துப்பாக்கிகள் கேட்டிருக்கிறார்.
வி.ஐ.பி.களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் புத்தம் புதியவை. இன்னும் ஒரு தடவை கூட பயன்படுத்தவில்லை. அந்தத் துப்பாக்கியில் `மேட் இன் யு.எஸ்.ஏ.' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை அல்ல. அதே நேரத்தில் அவற்றின் தயாரிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவை சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. நேபாளத்தில் இருந்துதான் அந்தத் துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அங்கே சில ஆயிரத்துக்கு வாங்கி, இங்கே கொண்டு வந்து ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்றிருக்கிறார்கள். இந்த நான்கு வி.ஐ.பி.களுக்கு மட்டும்தான் அவர்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்தார்களா? மேலும் வேறு யார் யாருக்கெல்லாம் விற்றிருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!'' என்றார்கள்.
நிருபர் என்று தெரிந்து கொண்டு நம்மை ஓரங்கட்டிய காக்கிகள் சிலர், "சார், இப்போது எங்களிடம் சிக்கியிருக்கும் இவர்கள் எல்லாம் கமிஷனுக்கு துப்பாக்கி விற்றுக் கொடுப்பவர்கள்தான். ஒரு துப்பாக்கி விற்றுக் கொடுத்தால் இவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். இவர்களுக்குத் துப்பாக்கி சப்ளை செய்தவன் செல்வம் என்பவன். அவனுக்கும் தூத்துக்குடிதான் சொந்த ஊர். வெங்கட் என்ற பிரவுன் சுகர் கடத்தல்காரன் இப்போது சென்னைச் சிறையில் இருக்கிறான். அவனிடம் டிரைவராக வேலை பார்த்தவன்தான் இந்த செல்வம். வெங்கட்டை வைத்து செல்வத்திற்கு துப்பாக்கி வியாபாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் நேபாளத்தில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வந்து சரவணக்குமார் மூலம் இங்குள்ள வி.ஐ.பி.களுக்கு விற்பனை செய்திருக்கிறான். செல்வத்துக்கு சென்னை அம்பத்தூரில் உள்ள நிர்மலா என்ற பெண்ணுடன் பழக்கம் உண்டு. நிர்மலாவின் கணவர் பீகாரைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.
இப்போது செல்வத்தைப் பிடிக்க எங்கள் டீம் சென்னை சென்றிருக்கிறது. ஆனால், உஷாரான செல்வம் தப்பி விட்டான். அவனது வீட்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் செல்வத்திடம் இருந்து ஊரப்பாக்கம் பஞ்சாயத்துத்
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நான்கு பேரின் வாக்குமூலங்களையும் ஒன்று விடாமல் பக்காவாக பதிவு செய்திருக்கிறது போலீஸ். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை வைத்து கள்ளத் துப்பாக்கி வாங்கிய அரசியல் வி.ஐ.பி.களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவார்களா? இதுதான் இப்போது தூத்துக்குடி மக்களின்
"நான் யாரிடமும் துப்பாக்கி வாங்கவில்லை. அரசின் அனுமதியோடு துப்பாக்கி வாங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தைத்தான் ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியிருக்கிறேன். பிறகு எதற்காக கள்ளத்தனமாக துப்பாக்கி வாங்கப் போகிறேன்? போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் என்னிடம் துப்பாக்கி விற்றிருப்பதாக போலீஸ் சொல்கிறது. அதே நேரத்தில் என் வீட்டில் இருந்து துப்பாக்கி கைப்பற்றியதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், என்னிடம் அல்லவா அதற்கு சாட்சியாக கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும். நான் அங்கு இல்லை என்று வைத்துக் கொண்டாலும் என் வீட்டில் உள்ளவர்களிடமாவது வாங்கியிருக்கலாமே... எனவே, இதில் ஏதோ அரசியல் சதி இருக்கிறது'' என்றார் அவர்.
பிரபுவைத் தொடர்ந்து தூத்துக்குடி யூனியன் சேர்மன் கருணாகரனிடம் கேட்டோம். "எனக்கு எதற்கு துப்பாக்கி? எனக்கு துப்பாக்கி தேவை என்றால்தானே வாங்க வேண்டும். அதுவும் நான் துப்பாக்கி வாங்கி எஸ்.பி.சண்முகநாதனுக்குக் கொடுத்தேனாம். அவருக்கும் எனக்கும் பேச்சுவார்த்தையே இல்லை. பிறகு எப்படி நான் துப்பாக்கி வாங்கி அவருக்குக் கொடுப்பேன்? இந்த விஷயத்தில் யாரோ எங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள்!'' என்று வக்கீல் பிரபு மறுத்தது போலவே மறுத்தார் கருணாகரன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனை நம்மால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இந்த வழக்கை நேரடியாக விசாரித்து வரும் நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பனிடம் அது பற்றிக் கேட்டோம். "அந்த நால்வரையும் கைது செய்து விசாரித்துவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். எனவே, அதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது!'' என்று சொல்லிவிட்டார். தூத்துக்குடி போலீஸாரோ... "துப்பாக்கிகளை கள்ளத்தனமாக விற்பது எப்படி குற்றமோ, அதைப் போலவே கள்ளத்தனமாக வாங்குவதும் குற்றம்தான். எனவே சட்டம் தனது கடமையைச் செய்யும். பொறுத்திருந்து பாருங்கள்!'' என்கிறார்கள். பார்ப்போம்.
Saturday, January 03, 2009
நாமும் எம்.பி ஆகலாம் போல இருக்கு

நமது பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கிறது என்று தெரிந்தால் நமக்கும் எம்.பி ஆகலாம் என்று ஆசை வரும்.
எம்.பிகளுக்கு மாதச்சம்பளம் 16 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் சலுகைகளின் பட்டியல் மிக நீளம்.
ஒரு எம்.பியின் அலுவலக செலவுக்காக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் 4 ஆயிரம் ரூபாய், எழுத்து பொருள் செலவுக்காக, 2 ஆயிரம் ரூபாய் தபால் செலவுகளுக்காக. எம்.பி ஒருவர் தனது பணிகளுக்காக உதவியாளரை நியமித்துக்கொண்டோல் அவருக்குக் சம்பளமாக ரூ. 14 ஆயிரம் வரை லோக்சபா, ராஜ்யசபா செயலகம் அளிக்கும்.
நாடளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது தினசரி அலவன்சாக ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்.பி., தனது மனைவி அல்லது கணவர், எப்போதும் நாட்டின் எந்தப்பகுதிக்கும் ரயிலில் முதல் வகுப்பில் (First Class)இலவசமாக பயணம் செய்யலாம்.ஒவ்வொரு எம்.பியும் 34 ஒருவழிதட(One Way) விமானப்பயனகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.
இந்தியாயவின் எந்தப்பகுதிக்கும் உடன் மனைவி அல்லது உறவினர்கள், தெரிந்தவர்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம்.
ஒரு எம்.பியின் மனைவி அல்லது கணவர் அல்லது உறவினர் அவரைப் பார்ப்பதற்கு(per Year)
8 முறை இலவசமாக விமானத்தில் பறக்கலாம். இந்த அனுமதி, எம்.பிக்கான விமான பயண அனுமதியில் சேர்க்கப்படும்.
எம்.பி., ஒவ்வொருவருக்கும் 3 இலவச தொலைப்பேசி இணைப்புகளும்(3 land line phone connection), ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இலவச அழைப்புகளுக்கான அனுமதியுடன் செல்போன் இணைப்பும் வழங்கப்படும்(1,50.000 free calls in cellphone). மாதந்தோறும் ஆயிரத்து500 ரூபாய் அளவுக்கு இணையத்தையும் (free internet connection worth Rs. 1,500)இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாடாளுமன்ற உறுபினருக்கு டெல்லியின் இதயப்பகுதியில் வசிப்பிடம்(Heart of the City) ஒதுக்கப்படும். அது எம்.பியின் சீனியாரிடியைபொறுத்து பங்களாவாகவோ, இரட்டை மாடிக்குடியிருப்பு அல்லது விடுதியாகவோ இருக்கும். அதெற்கென குறைவான உரிமத்தொகை(Lease amount or Rent) எம்.பியின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.
ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரமும், 4 ஆயிரம் கிலோலிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்படும். நாடளுமன்ற உறுபினராக இருந்தவருக்கு ஓய்வூதியமாக(Pension) மாதம் ரூ. 8 ஆதிரம் வழங்கப்படும். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் எம்.பியாக இருந்தால் அவருக்கு கூடுதலான(increment) ஒவ்வொரு ஆடுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.800 வீதம் கூடுதலாக கணக்கிட்டு அளிக்கப்படும். ஒரு முன்னாள் எம்.பி. தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் ரலில் (First Class AC )முதல்வகுப்பு குளிர்சாதானப்பெட்டியில் பயணம் செய்யலாம்.
இது தவிர, கேபினெட் அமைச்சர்களாகவும்,கேபினெட் இணை அமைச்சர்களாகவும்
இருப்பவர்களுக்கு இன்னும் ஏராளமான அவர்களது துறை சார்ந்த சலுகைகள் கிடைக்கும்.
இவ்வளவையும் அனுபவித்து தங்கள் தொகுதிக்கு ஒதுக்கப்படும் எம்.பி நிதியையும் சரியாக தம் தொகுதி வளர்ச்சிக்கு செலவழிக்காமல் வைத்துருக்கிறார்கள்.
இவ்வளவு சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிற எம்.பிக்களை பார்க்கும்போது நம்மளுக்கும் எம்.பி ஆகலாம் என்று ஆசை வருகிறதுதானே!
சில எம்.பிகளுக்கு மட்டும் கீழே ------>
குறிப்பு: எம்.பிக்கள் லஞ்சமாக வாங்கும் பணம் மற்றும் பல்வேறு திட்டங்களில் கமிசனாக அடிக்கும் பணம் இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை. ஏனெனில் அது ஒவ்வொரு எம்.பிக்கும் மாறுபடும். (Ex. ராஜா - ஸ்பெக்தரம் 40,000 கோடி , லாலு பிரசாத் - 950 கோடி மற்றும் பல.)
நன்றி - Parliament of India

