Showing posts with label சன் டி.வி. Show all posts
Showing posts with label சன் டி.வி. Show all posts

Wednesday, January 28, 2009

Sun Tv - Padikathavan - சன்டிவியின் "வெற்றிப்படம் படிக்காதவன்"! சன்டிவியின் தந்திரங்கள்


படத்தின் பெயர் "படிக்காதவன்" -னா? இல்லை "வெற்றிப்படம் படிக்காதவன்" -னா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும் அளவிற்கு படத்தின் பெயர் சன்டிவி மற்றும் சன் குழும அலைவரிசைகள் எல்லாவற்றிலும் எப்பொழுதுமே "வெற்றிப்படம் படிக்காதவன்" என்றே உச்சரிக்கப் படுகிறது.

கடந்த பதினைந்து நாட்களாக சன்டிவியின் முக்கிய தலைப்பு செய்திகள் இவைதான்,

"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளும் ரசிகர்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது.

"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று விட்டன.

"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளில் பாடல்கள் காட்சிகளின் போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து ஆனந்தமாக நடனமாடுகின்றனர்.

தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்கிற்குச் சென்றாலும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள்தான் எதிரொலிக்கின்றன.

"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தில் நடித்ததால் நடிகர் தனுஷிற்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் அதிகரித்து விட்டடது, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

ஏதாவது ஒரு வகையில் "வெற்றிப்படம் படிக்காதவன்" பெயர் தினந்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது.

சன்டிவியில் தொடர்ந்து மலிவான விளம்பர நோக்கில் திணிக்கப்படும் இப்படிப்பட்ட செய்திகளும், சன்டிவியின் நிகழ்ச்சிகளின் இடையே திணிக்கப்படும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் விளம்பரங்களும் பாமரர் முதல் படித்தவர் வரையிலான எல்லாத் தரப்பு மக்களையும் முகம் சுளிக்கச் செய்வதுதான் உண்மை.

இவை எல்லாம் எங்கே தொடங்கின என்று பார்த்தால்,

ஓராண்டுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துடன் ஏற்பட்ட போட்டியில் புதிய திரைப்படங்களை வாங்க முடியாமல் தோற்றுப் போன சன்டிவி நிறுவனம், அதைச் சமாளிக்க எடுத்த முயற்சிதான் சன் பிக்சர்ஸ்.

ஏற்கனவே தயாரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படங்களை விலைக்கு வாங்கி வெளியிடத் தீர்மானித்த சன்டிவி நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக சன்பிக்சர்ஸ் மூலமாக கிட்டத்தட்ட ஒன்பது படங்களை விலைக்கு வாங்கி அதற்கான அறிவிப்பை ஒரு பெரும் விழாவாக நடத்தி வெளியிட்ட போதே திரை உலகில் பலவாறான குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

சண்டிவியானது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் தொலைக்கட்சிகளில் முதல் இடத்தைப் பெற்றுத் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டது மட்டுமில்லாமல் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஏகபோகமாகச் செயல்பட்டு வருகிறது.

சன்டிவி, தான் தொடங்கப்பட்டதில் இருந்து இத்தனை ஆண்டுகளில் தனக்குப் போட்டியாக எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தனது ஊடக ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட மிகப்பெரும் ஊடக பலமும், பணபலமும் கொண்ட சன் குழுமம் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக அறிவித்த போதே, திரைத்துறையில் உள்ள தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கக் கூடிய சிலர் இதனால் பல விபரீத விளைவுகள் ஏற்படப் போகின்றன என்று எச்சரித்தனர்.

ஏனெனில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதன்மையான தொலைக்காட்சியாக கோலோச்சும் சன்டிவியின் தயவு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் முக்கியமானதாகப் போய்விட்டது. முதலில் திரைப்படங்களை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட சன்டிவி, பின்னர் தான் மனது வைத்தால் மட்டுமே திரைப்படங்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டது.

சன்டிவியில் பாடல்கள், காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மட்டுமே அதிகமான மக்களைச் சென்றடைந்து வெற்றி பெற முடியும் என்ற நிலையை சன்டிவி உருவாக்கி விட்டது.

இப்படிப்பட்ட சூழலில் சன்டிவிக்கு ஒட்டுமொத்த தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமைகள் கொடுக்கப்படாத திரைப்படங்களின் பாடல்கள், காட்சிகள் மற்றும் அந்தத் திரைப்படங்களின் விளம்பரங்கள் சன்டிவியில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும்,

திரை விமர்சனம் மற்றும் பட வரிசைகளில் இக்தகைய திரைப்படங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் பல ஆண்டுகளாகவே சன்டிவியின் மீது குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் எழுந்தன.

காக்க காக்க, சச்சின், தவமாய்த் தவமிருந்து, மும்பை எக்ஸ்ப்ரஸ், மாயக் கண்ணாடி,
தற்போது ரஜினியின் குசேலன் உள்ளிட்ட எத்தனயோ திரைப்படங்களின் வெற்றியை சன்டிவியின் இருட்டடிப்பு பாதித்ததாக நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் சன்டிவியே நேரடியாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தால் பின்னர் மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு சன்டிவியில் என்ன மாதிரியான மரியாதை தரப்படும் என்பதே திரைத்துறையினரின் அச்சத்திற்குக் காரணம்.

இப்போது சன் பிக்சர்ஸ் மூலமாகத் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. திரைத்துறையினர் ஏற்கனவே எதை நினைத்து பயந்தனரோ அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

சன்டிவியின் மூலமாகத் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமே சன்டிவியிலும், சன் குழுமத்தின் மற்ற எல்லா அலைவரிசைகளிலும் தற்போது ஒளிபரப்பப் படுகிறது. மற்ற எல்லாத் திரைப்படங்களும் முடிந்த அளவு இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

தற்போது சன்டிவியினர் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அத் திரைப்படங்களை வெற்றி பெறச் செய்யவும் தங்களது முழு ஊடக பலத்தையும் உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டனர்.

சன்டிவியினர் தங்களது சொந்த ஊடக பலத்தையும் - தங்களின் சொந்த பண பலத்தையும் - தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்திற்குப் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், இவர்களின் செயல்கள் எல்லை மீறிப் போகும் போது சுட்டிக் காட்டாமல் இருப்பதும் தவறுதானே.

சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் போது மற்ற திரைப்படங்களுக்குத் தரப்பட வேண்டிய குறைந்த பட்ச முக்கியத்துவத்தையாவது தர வேண்டும் இல்லையா?

திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களில் குறைந்தபட்ச நடுநிலையாவது பின்பற்றப்பட வேண்டும் இல்லையா?

சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களின் பாடல்களைக் கூட ஒளிபரப்ப மறுப்பது தவறில்லையா?

சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களை ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்வது என்பது சர்வாதிகார மனப்பான்மையின் வெளிப்பாடுதானே,

தன்னுடைய மித மிஞ்சிய ஊடக பலத்தை வைத்துக் கொண்டு தனது புதிய தொழிலில் முன்னேற முயல்வது என்பது தவறான செயல் இல்லை,

ஆனால் தனது ஊடக பலத்தால் தனது சகபோட்டியாளர்களை அழித்தொழிக்க முனைவது என்பது முறையான காரியம் இல்லையே,

தொழிலில் வரும் போட்டிகளை சமாளித்து சக போட்டியாளர்களுடன் கடுமையாக போட்டியிட்டு முன்னேறி முதலிடம் பெற முயல வேண்டுமே தவிர, தனது எல்லாப் போட்டியாளர்களையும் நசுக்கிப் பின்னர் தனக்குப் போட்டியே இல்லாத நிலையை உருவாக்கிக் கொண்டு தனது வெற்றிக் கொடியை நாட்ட முயல்வது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்றே தோன்றுகிறது................. அறிவிழி

Thursday, January 22, 2009

தமிழர் ரசனை மீது ‘அவ்வளவு’ நம்பிக்கை!


நன்றி - என்வழி.காம்

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது ஏ….க நம்பிக்கை சினிமாக்காரர்களுக்கு… இல்லாவிட்டால் தைப் பொங்கலும், தமிழ்ப் புத்தாண்டுமாய் இப்படி கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள்.

அஆஇஈ என்ற படத்தையும் சேர்த்து கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் பொங்கல் கணக்கு நான்கு படங்கள்.

இவற்றில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படத்தைத் தவிர மற்ற மூன்றும் குறைந்தபட்சம் திட்டி விமர்சனம் எழுதக்கூட அருகதையற்ற படங்கள்.

வில்லு! கொல்லு!
ரஜினி அல்லது எம்ஜிஆர் என்ற முகமூடி இல்லாமல் தன்னால் திரையில் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்ற அபார தன்னம்பிக்கையை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் வில்லு படத்தில் விஜய்.

என்ன தைரியத்தில் இந்தப் படத்தை ‘இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்டு படம்’ என்று பீற்றிக் கொண்டார்களோ.. புரியவில்லை. ஜேம்ஸ்பாண்ட் படத்தை முன்னபின்ன பார்த்திருக்கீங்களா விஜய்?

இதையெல்லாம் பிராஸ்னனோ… டேனியல் க்ரெய்க்கோ கேள்விப்பட்டால் சொன்னவங்களை டம்மி துப்பாக்கியாலேயே சுட்டுக் ‘கொன்னு’டுவாங்க!!
வேண்டாம் தனுஷ்…
படிக்காதவன் என்ற தலைப்பு ஒவ்வொரு ரஜினி ரசிகனின் நெஞ்சிலும் பச்சைக் குத்தப்பட்டது போல அத்தனைப் பசுமையான ஒன்று. அந்தப் படத்தை 400 முறை பார்த்து தினத்தந்தியில் சாதனைச் செய்தியாக மாற்றிய இரு கோவை ரசிகர்களைப் பார்த்திருக்கிறது தமிழ் சினிமா.

தனுஷ் இப்போது செய்துள்ள காரியம் அவர்களையெல்லாம் அவமானப்படுத்துவதற்குச் சமமானது!

ரஜினியின் படப் பெயர்கள் தனுஷுக்கே ஏகபோகச் சொத்தாக இருந்துவிட்டுப் போகட்டும். அதில் யாருக்கும் வருத்தமில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்தத் தலைப்புகளுக்கு சின்ன மரியாதை வருமளவுக்கு கதையுள்ள படங்களாக நடித்தால் நல்லது. காரணம், படிக்காதவன் என்ற அந்த தலைப்புக்காகவே போய் படம் பார்த்துவிட்டு தலையிலடித்தபடி வெளியில் வரும் பல ரசிகர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது!!

‘அதெல்லாம் முடியாது… நான் எப்போதும் ‘சுள்ளான்’தான், மாற்றிக் கொள்ள முடியாது…’ என்றால், தயவு செய்து எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை தனுஷ் மட்டுமல்ல… வேறு யாருமே வைக்க முயற்சிக்காதீர்கள் (ஜானி, இளமை ஊஞ்சலாடுகிறது, ரங்கா, முத்து போன்ற தலைப்புகள் இப்போது இவர் வசம்தான் உள்ளன என்கிறது தயாரிப்பாளர் சங்கம்!).

இந்த புதிய படிக்காதவன் படத்தின் இன்னொரு கொடுமை விவேக் என்ற வக்கிரம் பிடித்த அரைகுறை. பேசாமல் ரிட்டயர் ஆகிவிடுங்கள் விவேக்… தமிழ் சினிமா பிழைத்துப் போகட்டும்!

திரைத்துறையில் சன் டிவி போன்று சர்வாதிகாரிகளை வளரவிடுவது எத்தகைய ஆபத்து என்பதற்கு காதல்னா சும்மா இல்லை என்ற ஓரளவு நல்ல படம் வந்ததே தெரியாமல் அமுங்கிப் போனதே சான்று.
ஆஸ்கர் பரிந்துரை கமிட்டி வரை போன கம்மியம் என்ற தெலுங்குப் படத்தை குறைந்தபட்ச நேர்மையுடன் ரீமேக் செய்திருந்தார்கள். ஆனால் வெறும் சப்தங்களுக்கு மத்தியில் ஒரு சங்கீதம் எடுபடாமல் போன மாதிரியாகிவிட்டது, ராஜ் டிவிக்காரர்களின் இந்த நேர்மையான முயற்சி.

ஏஎம் ரத்னம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தும், இந்தப் படத்தில் தன் மகனுக்கு தேவையற்ற பில்டப் எதுவும் கொடுக்காமல் அவரை சாதாரண கேரக்டராக வரவைத்திருந்தார்.

ஆனால் கொடுமை பாருங்கள்… சென்னையை விட்டால் அடுத்த 100 கிமீ தூரத்துக்கு வேறு தியேட்டரில் ‘காதல்னா சும்மா இல்ல’ படத்தையே பார்க்க முடியவில்லை. அந்தளவு தியேட்டர் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள் இந்தப் படத்துக்கு.

இவர்களின் அசுர பலத்துக்கு முன்னால் யார் என்ன செய்துவிட முடியும்?

அஆஇஈ… ஏவிஎம் என்ற காலிப் பெருங்காய டப்பா(பிராஞ்ச் -2)விலிருந்து வந்துள்ள படம்… அந்த வாசனை கொஞ்சம்கூட இல்லை!

ஆக இந்தப் பொங்கல், அரசியல் தொடங்கி சினிமா வரையில் தமிழனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதாகவே வந்து போனது!

Tuesday, December 23, 2008

அடங்காத ஐங்கரன்... இடம் மாறிய எந்திரன்! - ஷங்கர், அருண்பாண்டியன் கசப்பு...


நன்றி - ஜூனியர் விகடன்

முதலில் கமல்... அடுத்து ரஜினி... அதன் பின் அஜீத்... அப்புறம் ஷாரூக்கான் என்றெல் லாம் பேசப்பட்டு, கடைசியில் திரும்பவும் ரஜினியிலேயே வந்து முடிந்த படம், ஷங்கரின் கனவுத் திட்டமான 'ரோபோ'!
'ஐங்கரன் இன்டர்நேஷனல் மூவீஸ்' தயாரிப்பில் தொடங்கப்பட்டு, 'ரோபோ' என்ற பெயர் மாறி, 'எந்திரன்' என்றாகியும் மாற்றங்களில் திருப்தி போதா மல், தயாரிப்பாளரையும் மாற்றிக்கொண்டு 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் போய்ச் சேர்ந்திருக்கிறது இத்திரைப்படம்!
ஏன் இந்த இடமாற்றம்..?


பாதியில் நின்ற படப்பிடிப்பு..!

ஷங்கர், ரஜினி, ஐஸ்வர்யாபச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் என்று மெகா கூட்டணியில், இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதபடி 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க முதலில் ஒப்புக்கொண்டார் 'ஐங்கரன் இன்டர்நேஷனல் மூவீஸ்' லண்டன் கருணா. பல ஆண்டுகளாகவெளிநாட்டில் பட விநியோகம் செய்துவரும் கருணா, ஈழத்தமிழர். சமீபத்தில் அஜீத் நடித்து வெளிவந்த 'ஏகன்' படம்தான் அவருடைய தயாரிப்பில் முதல் வெளியீடு. விஜய் ஹீரோவாக நடித்து பொங்கலுக்கு வரவிருக்கும் 'வில்லு' படமும் கருணாவின் சொந்தப் படம்தான்.

'எந்திரன்' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பிரேசில் நாட்டில் நடந்தது. அடுத்ததாக கோவாவிலும் சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பங்களாவிலும்

நடந்தது. கடைசியாக தி.நகரில் இருக்கும் 'பிரசாந்த் ரியல் கோல்டு டவர்' கட்டடத்தின் கீழ்த்தளத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. பகலில் படப்பிடிப்பு நடந்தால், ரஜினியைப் பார்க்கக் கூட்டம் எகிறிவிடும் என்பதற்காக, தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் ஷ¨ட்டிங் நடந்தது. ஹீரோ ரஜினியும், வில்லன் ரஜினியும் சந்திக்கும் ஒரு காட்சியை அந்த பில்டிங்கின் மாடியில் இருக்கும் ஜாய் ஆலுக்காஸ் நகை மாளிகையின் தளத்தில் படமாக்கினார்கள்.

அடுத்ததாக டிசம்பர் 18-ம் தேதி படப்பிடிப்பு நடக்கும் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப் பட்டது. ஆனால், என்ன நடந்ததோ... அந்தத் தேதியில் 'எந்திரன்' படம் கருணாவின் கையை விட்டே போய்விட்டது!

பகீர் பணச்செலவுகள்...

'எந்திர'னில் ரஜினியின் சம்பளத்தைப் பற்றிச் சொல்லும்போது, 'சிவாஜி'யில் ரஜினி வாங்கிய சம்பளம் 'ஜுஜுபி' என்கிறார்கள். ஷங்கருக்கும் அப்படியே! ஐஸ்வர்யா பச்சனுக்கு ஏழரை கோடி பேசி, 2 கோடி அட்வான்ஸாகக் கொடுக்கப்பட்டது என்று மும்பை பக்கம் பேச்சு! ஹாங்காங்கில் இருக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு, கிராபிக்ஸ் வேலை செய்யும் டீமுக்கு என்று எல்லாமே கோடிகளில்தான் வாரி இறைத்திருக்கிறார் கருணா. இதுவரை ஆன செலவு 35 கோடி ரூபாய் என்றும், வட்டிக் கணக்கு பார்த்தால் 50 கோடியை நெருங்கும் என்றும் பட்டியல் போடுகிறது ஐங்கரன் தரப்புக்கு நெருக்கமான வட்டாரம். இதெல்லாம் கோலிவுட் வட்டாரத்தில் 'எந்திரன்' படம் சம்பந்தமாகப் பேசப்பட்டு வரும் தகவல்களில் ஒருசில.

லாரியில் போன கார்..!

'எந்திரன்' படத்தில் பயன்படுத்து வதற்காக லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் ஹீரோ ரஜினிக்கு, பி.எம்.டபிள்யூ. கார் வில்லன் ரஜினிக்கு என்று எல்லாமே செமத்தியான ஸ்டைலாகத்தான் செலவு செய்திருக்கிறார் கருணா. கோவாவில் ரஜினி, ஐஸ்வர்யாபச்சன் தொடர்பான காட்சியைப் படமாக்கியபோது, ரஜினி பயன்படுத்த வேண்டிய பென்ஸ் காரை சென்னையிலிருந்து லாரியில் கோவாவுக்கு அனுப்பினார்களாம்.

ஷங்கர், அருண்பாண்டியன் கசப்பு...

திரைப்பட நடிகர் அருண்பாண்டியன், கருணாவின் நீண்டகால நண்பர். முதலில் ஐங்கரன் மூவீஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த அருண்பாண்டியன், நாளடைவில் கருணாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் 'ஏகன்' படத்தில் தயாரிப்பாளரில் ஒருவராக உயர்த்தப்பட்டார். பொதுவாக, தான் இயக்கும் படங்களின் ஸ்டில்கள் வரையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குக்கூட காட்டாமல் கடைசி வரை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குநர் ஷங்கர். எல்லாம் முடிந்தபிறகு முழுமையான 'புராடக்ட்'டை தன் திருப்திக்கேற்ப செதுக்கிவிட்டுக் காட்டுவதுதான் அவருக்குப் பிடிக்கும் என்கிறார்கள். ஏவி.எம் போன்ற பெரிய தயாரிப்பாளர்களே இந்த மாறுபட்ட அணுகுமுறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய நிலைதான்!

ஆனால், 'எந்திரன்' பட விஷயத்தில் ஷங்கரின் அணுகுமுறைக்கு அடங்காமல், தனி ரூட்டில் பயணித்திருக்கிறார் அருண்பாண்டியன். 'எந்திரன்' படத்துக்காக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளை ஷங்கரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல், அந்த ஃபிலிம் ரோலை டெவலப் செய்து அருண்பாண்டியன் போட்டுப் பார்த்துவிட்டார் என்பது தான் 'எந்திரன்' இடம்மாறி 'சன் பிக்சர்ஸ்'ஸ§க்குப் போய்விட முக்கியக் காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது! பாடல் காட்சிகள் திரையிட்டுப் பார்க்கப் பட்டன என்ற விஷயம் தெரிந்தவுடன், ஷங்கர் டென்ஷனாக... அந்த டென்ஷன் படத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று ரஜினியும் டென்ஷனாகிவிட்டாராம்.

ஷங்கரை மாற்றிய ராஜு...

அருண்பாண்டியன் மீதிருந்த வருத்தத்தின் பிரதிபலிப்பாக, அடுத்து நடத்தவேண்டிய படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாராம் ஷங்கர். நாளாக நாளாக தயாரிப்புத் தரப்பு மீது அவருக்குக் கோபம் அதிகரித்துவந்ததே தவிரக் குறையவில்லை. இந்நிலையில், ஒரு நாள் எதேச்சையாக டான்ஸ் மாஸ்டர் கம் டைரக்டரான ராஜுசுந்தரத்தை சந்தித்திருக்கிறார் ஷங்கர். தன்னுடைய வருத்தம் முழுவதையும் அவரிடம் கொட்டித்தீர்த்திருக்கிறார். ''ரெண்டு பாட்டைப் போட்டுப் பார்த்ததுக்கே இப்படி கோபப்படுறீங்களே... நான் ஆசை ஆசையா 'ஏகன்' படத்தை எடுத்து முடிச்சேன். அருண்பாண்டியன் வந்து எடிட்டிங் ரூம்ல உட்கார்ந்துகிட்டு நான் பண்ணி வச்சிருந்த ஐடியாவையெல்லாம் மாத்தினாரு. இது ரசிகர்களுக்குத் தெரியுமா? படம் தோல்வி அடையும்போது டைரக்டர் மேலேதான் எல்லா பாரமும் விழுது!'' என்று சொல்ல... ஷங்கர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனாராம்.

ஜகா வாங்கிய சகா..!

'எந்திரன்' படத்துக்காகப் பிரத்தியேகமாக, கோடிகளை கருணாவின் கையில் திணித்தது வேறொரு தயாரிப்பு நிறுவனம். ஆனால், அந்தப் பணத்தில் 'ஏகன்', 'வில்லு' படங்களைத் தயாரித்தார் கருணா. அதோடு, வெளித் தயாரிப்பாளர்களின் படங்களையும் மொத்தமாக வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம். 'ஏகன்' வெற்றிபெறாததை உணர்ந்து, விழித்துக்கொண்டது பணம் கொடுத்த நிறுவனம். உடனே, கணக்குவழக்குகளைப் பக்கத்திலிருந்து பார்க்க தன் பிரதிநிதி இருவரை சென்னைக்கு அனுப்பியதாம். இதுவரை ஐங்கரன் மூவீஸ் சினிமாவுக்காக செலவு செய்தவிதத்தில் திருப்தியில்லாததால் 'எந்திரன்' படப்பிடிப்புக்கு மேற்கொண்டு பணம் ரிலீஸ் செய்யாமல் பின்வாங்கத் தொடங்கியதாம்.

தயங்கிய ரஜினி...

ஏற்கெனவே அருண்பாண்டியன் நடவடிக்கையால் நொந்து போயிருந்த ஷங்கர், இதையும் ரஜினி யிடம் சொல்லி வருத்தப்பட.... 'இதற்கு மேலும் படப்பிடிப்பு தள்ளிப் போனால், அது தனக்கான இமேஜையும் சேர்த்தே பாதிக்கும்' என்று தீவிர முடிவுக்கு வந்தாராம் ரஜினி. இதுவே சன் டி.வி. குரூப்பிடம் பேசிப் பார்க்கலாம் என்று திசை மாறியதாகச் சொல்கிறார்கள். இந்த யோசனை வந்த சமயம், தி.மு.க-வின் பெரிய குடும்பத்துக்குள் சமாதானம் ஏற்படவில்லை. 'இப்படியரு முடிவெடுப்பதில் படத்துக்கு என்னவிதமான ப்ளஸ் - மைனஸ்கள் ஏற்படும்' என்ற கோணத்திலும் ரஜினி தீவிரமாக யோசித்தாராம். இதற்கிடையில், 'ஏவி.எம். நிறுவனத்தின் வசம் படத்தை ஒப்புவித்தால் என்ன?' என்ற கோணத்திலும் யூனிட்டுக்குள் பேச்சு வந்திருக்கிறது. ஏதோ சில காரணங்களால் அது மேற்கொண்டு முன்னேறவில்லை. அதன்பிறகே, ''இந்த 'எந்திரன்' படத்தை சன் டி.வி-யால்தான் தயாரிக்க முடியும். அதனால் இதுவரை எடுத்து முடித்தவற்றை அவர்களிடமே ஒப்படைத்து விடலாம். இதுவரை செலவான தொகையை அவர்களிடம் வாங்கலாம்'' என்று சென்னை வந்த வேறொரு தயாரிப்பு பிரதிநிதியிடம் விளக்கியிருக்கிறார் ஷங்கர்.

ஏமாந்த கருணா...

கடந்த 14-ம் தேதி, சென்னைக்கு அருகில் பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் ஏசியானா ஸ்டார் ஹோட்டலில் தன் அக்காள் மகளின் கல்யாணத்தையும் மறுநாள் ரிசப்ஷனையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார் 'ஐங்கரன்' கருணா. அந்த வைபவத்துக்குத் தமிழ்ப்பட உலகமே திரண்டு வந்தது. ஆனால், ரஜினியும் டைரக்டர் ஷங்கரும் அழைப்பிதழ் கொடுத்தும் வரவில்லை. அதோடு, 'எந்திரன்' படத்துக்காகப் பணியாற்றி கருணாவோடு பழகிய ஷங்கரின் உதவி இயக்குநர்களும்கூட நிகழ்ச்சிக்கு வரவில்லை. அப்போதே 'எங்கோ இடிக்குதே' என்று யோசித்திருக்கிறார்கள் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ரஜினி, ஷங்கர், கேமராமேன் ரத்தினவேலு மற்றும் ரஜினியின் நண்பர் நாகராஜராஜா ஆகியோருடன் கலாநிதி மாறன் சந்திப்பு பற்றிய செய்தியும், 'எந்திரன்' இடம் மாறிய விஷயமும் பரபரப்பாக வெளியானதைத் தொடர்ந்து, கருணாவைத் தொடர்பு கொண்டு அவருடைய நண்பர்கள் விசாரிக்க... ''படத்தை விடுங்க. ரஜினி என் 25 வருட நண்பர். அவர் எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வராம ஏமாத்திட்டாரே...'' என்று மட்டும் சொன்னாராம் கருணா.

கருணா மீது கோபம்..?

''கலைஞர் டி.வி. ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு முழு ஆதரவு கொடுத்தார் கருணா. தமிழ்நாட்டில் மட்டும் தெரிந்த கலைஞர் தொலைக்காட்சியை லண்டன், ஐரோப்பிய நாடுகள் என்று ஒளிபரப்ப முக்கிய உதவி செய்தார் அவர். 'சன்' பிக்சர்ஸின் 'காதலில் விழுந்தேன்' படம் ரிலீஸானபோது, வெளிநாடுகளில் தன் வசமிருக்கும் தியேட்டர்களில் அதை அவர் வெளியிடவுமில்லை!'' என்று பழைய கதைகளையும் சிலர் நினைவுகூர்கிறார்கள்.

கலாநிதி மகிழ்ச்சி!

ரஜினி, ரஹ்மான், ஐஸ்வர்யாபச்சன் ஆகியோ ரின் கால்ஷீட் வாங்குவதே குதிரைக் கொம்பான சங்கதியாக இருக்கும் நிலையில், இவர்களோடு இயக்குநர் ஷங்கரும் சேர்ந்து லட்டாகக் கிடைத் ததாலேயே, நேரடித் தயாரிப்பில் கலாநிதி மாறன் கால்பதித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், ரஜினியின் படத்தைத் தயாரிப்பது தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரை இன்னும் உயரத்துக்கு ஏற்றிப் பிடிக்கும் என்று கணக்கிட்டாராம். அதிலும், ''ரஜினியே தனது வீடு தேடி வந்து பேசியதை நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறார் கலாநிதி...'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், தங்களுக்கு பக்கபலமாகிவிட்ட 'சன்' குழுமத்துடன் ரஜினி கைகோப்பது கட்சிக்கும் ஒருவகையில் சைலன்ட்டான பாசிடிவ் சிக்னல்களைத் தரும் என்று தி.மு.க. கணக்கிடுவது தனி டிராக்

'வில்லு'... விலைபேசும் சன்னு..?

சமீபத்தில் 'வில்லு' படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. விஜய் ஏனோ அந்த ஃபங்ஷனுக்கு வரவில்லை. படத்தின் இயக்குநரான பிரபுதேவாவும் ஆப்சென்ட். பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் அந்தப் படம் வேறு கைகளுக்கு மாறுகிறதா என்பதும் இப்போது பேச்சாக இருக்கிறது.

நோ கமென்ட்ஸ்...

''ஷங்கர் படம்பிடித்த 'எந்திரன்' பாடல் காட்சிகளை அவர் அனுமதியில்லாமல் நீங்கள் பார்த்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என்கிறார்களே..?'' என்று அருண் பாண்டியனிடம் நாம் கேட்டோம். ''அது தவறான கருத்து. நாலு நாள் பொறுங்க, நானே எல்லாத்தையும் சொல்றேன். இப்போதைக்கு நோ கமென்ட்ஸ்!'' என்று எதற்கோ சஸ்பென்ஸ் வைத்தார்அவர். - எம்.குணா (vikatan)

இதையும் பாருங்க -- எந்திரன் புதிய படங்கள் , எந்திரன் கதை

Tuesday, December 02, 2008

தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.


Subject : கோபாலபுரவியல்

நேரம்:3.00 மணி
மதிப்பெண்:100
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

A.சிறுவினாக்கள்:

1. சன் டி.வி மீண்டும் அறிவாலயம் வருவதற்கான சாத்தியகூறுகள் பற்றி சிறு குறிப்பு வரைக.(10 mark)

2. கலைஞர் டி.விக்கு இதுவரை படங்களை வாங்கித்தந்த இராம.நாராயணன் இனி எந்த டி.விக்கு படங்களை வாங்கித்தருவார்? (10 mark)

3. வைகோ,விஜயகாந்த், சரத்குமார், ஜெயலலிதா போன்றவர்களை ஆதரித்த சன் டி.வி இனி யாரை ஆதரிக்கும்? (10 mark)

4. கனிமொழி மற்றும் தயாநிதியிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா ? (10 mark)

5. அழகிரி மற்றும் தயாநிதி ஆகியோரின் திரைப்பட நிறுவனங்கள்,கேபிள் நிறுவனங்கள் இணையுமா ? (10 மார்க்)

6. சன் டிவி Top Ten Movies ல் வாரணம் ஆயிரம் இடம் பெறுமா ?

B.விரிவான விடையளிக்கவும்:

1. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன? (25 mark)

2. தினகரன் அலுவலகம் எரிப்பு என்றால் என்ன? (25 mark)


இந்த கேள்விகளுக்கு சரியான விடைகளை பிநூட்டடில் அளிக்கவும்




கீழ்கண்ட செய்திக்கு அண்ணன் கேபிள்ஷங்கருக்கு நன்றிகள் - cablesankar.blogspot.com

தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின்பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?

ராஜ்டிவி.

இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ்அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களதுநிலமை என்னவாகும்?

கலைஞர் தொலைக்காட்சி

சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத்ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்தஇடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்றுசேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியைதூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய்ஓரு சேனலை அவர்கள் அதே குவாலிட்டியுடன் தருவார்களா..? என்பது கேள்வி.

ஹாத்வே

பாவம் இவர்கள் தான் என்ன செய்ய போகிறார்கள் என்றே தெரியவில்லை.. எப்போதுமே இவர்கள்அரசியலவாதிகளால் அலைகழிக்கபட்டு, திராட்டில் விடப்படுபவர்கள்.. சென்ற ஆட்சியின் போது ஜெஅரசால் ஆதரிக்கபட்டு, பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் எஸ்.சி.வியுடன் மோதினார்கள்.. ஆனால்அவர்களுக்கு கே.டிவி, சன்செய்திகள், ஜெமினி, தேஜா, போன்ற் சேனல்களை கொடுக்காமல்இழுத்த்டித்து, அவர்க்ள் நொந்து நூலாகி, அரசின் ஆதரவும் கைவிடபட்டதனால் பாஸ்கரனும்வெளியேறிவிட்ட நிலையில்.. தாத்தா பேரன் சண்டையில், அழகிரி இவர்களுக்கு ஆதரவாய் களம் இறங்க.. மீண்டும் வெற்றி முகம்.. சென்னையில் 80 சதவிகதம் ஹாத்வே கையில்..இனிமேல் என்னவாகும்.. இவர்கள் நிலை..?

ஆர்.சி.வி

மதுரையில் அழகிரியால் எஸ்.சி.விக்கு போட்டியாய் ஆரம்பிக்கபட்டது. மதுரை மற்றும் சுற்றுபுற்த்தில் உள்ளஎல்லா ஊர்களுக்கும் எஸ்.சி.வியின் இணைப்பை துண்டித்து, கட்டாயமாய் ஆர்.சி.வி கனைக்ஷன்கொடுக்கபட்டது.. அவர்களூக்கு எதிராய் எஸ்.சிவியுடன் இருந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள்.. இனிஆர்.சி.வியின் கதி..?

அரசு கேபிள் கார்பரேஷன்

நடுநிலைமையோடு தான் ஆட்சி செய்வதாய் காட்டி கொள்வதற்காக மக்கள் பணத்தில் ஆரம்பிக்கபட்டகார்பரேச்ன் ஏற்கனவே அதன்நிலமை மிக மோசமாய்தான் இருக்கிறது.. இந்த நிலையில் சென்னையில்அவர்கள் டிசம்பரில் ஆரம்பிக்க போவதாய் இருந்தது.. இனி அவர்கள் நிலை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்

இவர்கள் தான் பாவம் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு சொம்படிப்பதையே தொழிலாககொண்டிருப்பதால், இவர்கள் சண்டையில் நன்றாக சம்பதித்து கொண்டிருந்தார்கள்.. இனி இவர்கள் கதிஎன்ன ..? அனேகமாய் ரெண்டு பேருக்கும் சொம்படித்து பிழைப்பை ஓட்டுவார்கள் என்றே தெரிகிறது.

ஆனந்தவிகடன்
இவர்களை நம்பி மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாய் விஜயகாந்தை ஏற்றிவிட்டு கொண்டிருந்தனர். இனிமேல் விஜயகாந்த் விகடனில் வருவாரா..?

கலைஞர் தனக்கு பின்னால் தன்னுடய குடும்பத்தை செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்ததில் இருப்பதாலும், இனிமேல் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இலலையென்பதாலும் செட்டில்மெண்டை துரிதமாய் முடிக்க வேண்டியகட்டாயத்தில் உள்ளார்.

அரசு கடமைகளைவிட தன் குடும்ப கடமைகளூக்கு முக்யத்துவம் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் அவருக்கு..
ஆனால் மாறன் சகோதர்களுக்கு எதிராய் ஆரம்பித்த விஷயங்கள் எல்லாம்அவ்வளவு சுலபமாய் மாற்றிவிட முடியாது..
இதை
நாடு பார்த்து கொண்டுதானிருக்கிறது. தங்கள்சுயலாபத்துக்காக, அரசை அதிகாரங்களை பயன்படுத்தி வருவதை மக்கள் கவனித்துகொண்டுதானிருக்கிறார்கள்..


இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்கபோகிறதோ..?

வழக்கமாய் க்லைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களூக்கு உதவியவர்களைமுடிந்த வரை உபயோகபடுத்தி கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரதுபேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்கள்.. அவர்களூக்கும் வேறு வழியில்லை.. என்னசெய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டார் கலைஞர் தனக்குரவுண்டாய்கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை ரவுண்டாய் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கு.. அவர்கள் சிறந்த பிஸினெஸ்மேன்கள்என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருகிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின்பேங்க் பேலன்ஸ் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..?
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009