Wednesday, October 01, 2008

அவரவர் வீடுகளில் புகைப்பிடித்தாலும் அபராதம் - ஐயோ பாவம்


நாளை முதல் பொதுஇடங்களில் புகைப்பிடித்தால் ரூபாய் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார் . மத்திய அமைச்சர் திரு அன்புமணி ராமதாஸ் இயற்றியுள்ள சட்டமே இதற்கு காரணமாகும் .

பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு அபராதம் விதிப்பதன் மூலம் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் , மது அருந்தும் பழக்கத்தையும் நாட்டிலிருந்து அறவே ஒழிப்பதே தனது லட்சியம் என்றும் கூறுகிறார்

உண்மையிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் , மதுவையும் நாட்டிலிருந்தே ஒழிக்க நினைத்தால் அவர் அதை ஒரு சட்டத்தின் மூலமாக எளிதில் தடுத்து விடலாம் அல்லவா?

ஒருபுறம் மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கி விட்டு , மறுபுறம் மதுவை ஒழிக்க போவதாக கூறுவது எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.

மதுபான ஆலை அதிபர்களும், புகைப்பொருள் உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களும் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும்,
அரசுக்கும் அவர்களிடமிருந்து வரியாக கிடைக்கும் பெருந்தொகையும் தடையில்லாமல் கிடைக்க வேண்டும்,
அரசியல்வாதிகளுக்கும் அக்தகைய தொழில் அதிபர்களிடமிருந்து வரும் வருமானமும் குறையாமல் கிடைக்க வேண்டும்.
இதெல்லாம் நடைபெற வேண்டுமானால் திருவாளர் பொதுஜனமாகிய நாமெல்லாம் எப்போதும் திருந்திவிடக் கூடாதல்லவா ?

அதனால்தான் மதுவையும், புகைபொருட்களையும் உற்பத்தி செய்வதையும் தடை செய்யாமல் , அவற்றின் விற்பனையையும் தடை செய்யாமல் எதைச் செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்காத திருவாளர் பொதுஜனத்தின் மீது மீண்டும் ஒரு சுமையை ஏற்றியுள்ளனர் .

பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் என்ற இந்த சட்டம் பொதுஜனத்தின் தலையில் ஒரு இடியாகத்தான் இறங்கியுள்ளது , இனி காவலர்களுக்குத் தான் கொண்டாட்டம். இதுவரை வாகன ஓட்டிகள்தான் காவலர்களுக்கு பணம் காய்க்கும் மரமாக இருந்தனர்
காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து
தலைக்கவசம் அணியவில்லை ,
ஓட்டுனர் உரிமம் இல்லை ,
வாகன உரிமைச் சான்று இல்லை ,
வாகன காப்பீடு இல்லை
இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எளிதாக அபராதம்(!) விதித்து வந்தனர்.

இப்போது இன்னும் எளிதாக பணம் பறிக்க ஒரு வழி கிடைத்தாகி விட்டது, ஏனெனில் பொதுஇடம் என்று அரசின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள்
சாலைகள்,
சாலை ஓர நடை பாதைகள்,
தேநீர் கடைகள்,
உணவகங்கள்,
தங்கும் விடுதிகள்,
பேருந்து,
இன்னும் பல , இதில் உச்ச கட்டமான இடம் எதுவென்றால் இந்த பட்டியலில் வீடும் உள்ளது ,

அதாவது ஒருவர் தனது சொந்த வீட்டில் புகைப்பிடித்தால் கூட அவருக்கு அபராதம் விதிக்கப்படும் .இதைவிட பொதுஜனத்திடமிருந்து பணம் பறிக்க எளிதான வழி எதுவும் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.......
Thanks Arivizhi!

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009