Friday, March 27, 2009

Rajini vote(voice) in Election 2009 - ‘என் ஓட்டு யாருக்கு?’ - மனம் திறக்கும் ரஜினி!!



Thanks - http://onlysuperstar.com/

Sunday, March 22, 2009

LTTE Prabhakaran now - சாதாரண உடையில் பிரபாகரன் நடமாட்டம் : இலங்கை ராணுவம் தகவல்


"இலங்கை புதுக் குடியிருப்பில் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி பலமுறை சாதாரண உடையில் வெளியே வந்துள்ளனர்' என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் வெறும் 26.5 சதுர கி.மீ., பரப்பளவிலான நிலப்பகுதி மட்டுமே இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது. அப்பகுதியையும் புலிகளிடமிருந்து கைப்பற்ற கடும் தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி புதுக்குடியிருப்பில் உள்ள தாக்குதலுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது

இதுகுறித்து இலங்கை ராணுவம் கூறியிருப்பதாவது:புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி இருவரையும், புதுக்குடியிருப்பில் உள்ள துப்பாக்கிச்சூடு நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் பலமுறை பார்த்ததாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வந்த தமிழர்கள் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பதுங்குகுழியில் இருப்பதாகவும், அடிக்கடி சாதாரண உடையில் வெளியே வந்து ராணுவத்திற்கு எதிராக போரிடுவதன் அவசியம் குறித்து படையில் சேராத தமிழர்களிடையே பிரசாரம் செய்துள்ளனர்.

சாதாரண உடையில் வருவதன் மூலம் தமிழர்களுடன் கலந்த இருவரும், தங்களை சுற்றி பயங்கர ஆயுதங்களுடன் உள்ள சிறப்பு பாதுகாவலர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மனின் டிரைவரை 58வது பிரிவு கைது செய்துள்ளது. புலிகளின் தலைவர்கள் பற்றி பல ரகசிய தகவல்களை அவன் ராணுவத்தின் விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.இவ்வாறு ராணுவம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய ஆயிரத்து 185 தமிழர்களை மீட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தற்போது நடந்து வரும் சண்டையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி ராணுவத்திடம் அடைக்கலம் புகுந்த தமிழர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முல்லைத்தீவில் படிக்கரைக்கு தெற்கே நடந்த சண்டையில் புலிகளின் கடற்பிரிவு மூத்த தலைவர் சிந்து கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.இரணைப்பாலையில் செந்தூரன் சிலையடி, அமலன் வெதுப்பகச்சந்தி, டயர் கடைச்சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சிவன் கோவிலடி ஆகிய இடங்களில் முன்னகர்ந்த ராணுவத்தினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், படுகாயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதலில், நேற்று 46 பேர் உட்பட கடந்த மூன்று நாட்களில் 102 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.வன்னிக்கு கடந்த 4 மாதங்களாக மருந்துகள் அனுப்பப்படாத நிலையில், மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக கிளிநொச்சியை சேர்ந்த டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல் இரு தடவைகளில் 850க்கும் அதிகமான நோயாளிகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்றி - தினமலர்

Saturday, March 21, 2009

Arundhati film review - அருந்ததீ - திரைவிமர்சனம்



உண்மைத்தமிழனின் அருந்ததீ திரைவிமர்சனம்

கேபிள் சங்கரின் அருந்ததீ - திரைவிமர்சனம்

அருந்ததீ பட முழு விவரம் - தமிழ்

அனுஷ்கா பற்றிய வாழ்க்கைக்குறிப்பு

அனுஷ்கா அட்டகாசமான புகைப்படங்கள்

அருந்ததீ பட முழு விவரம் - தெலுங்கு


Friday, March 20, 2009

Muslim lady eats Noodles - முஸ்லிம் பெண்கள் சாப்பிட படும் பாடு!





இது யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கவும்!

Tamilnadu election survey 2009 - தமிழ்நாடு இளைஞர் ஓட்டு யாருக்கு?-- விகடன் மெகா சர்வே முடிவுகள்!


நன்றி - விகடன் குழுமம்!

து தேர்தல் சீஸன்!

அதிகாரம் யாருக்கு என்பதுதான் எல்லாத் தேர்தல்களும் தீர்மானிப்பது. மக்களின் விருப் பங்கள் என்ன என்று தெளிவு பெற விகடன் எடுத்தது மெகா சர்வே.

அதுவும் வாக்குச் சாவடிக்கு வலது காலை முதல் தடவையாக எடுத்துவைக்கும் இளம் தலைமுறை என்ன நினைக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினோம்.

'இளைஞர் ஓட்டு யாருக்கு?' என்ற கேள்வியே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அதுதான் முதல் மெகா சர்வேயின் அடித்தளம். அரசியல் மேடைக்கு இந்தத் தலைமுறை முதல் முத்தம் வைப்பதற்கு முன்னால் அவர்களின் ஆசைகள், கோபங்கள், விருப்பங்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற மாதிரியான கேள்வி கள் தயாரிக்கப்பட்டன. வாக்களிக்கும் வயது 18 என்பதால் கேள்விகளும் 18.

'உங்களிடம் வாக்கு கேட்டு நிற்கும் மனிதரிடம் முதல் தகுதியாக என்ன எதிர்பார்ப்பீர்கள்?' என்பதில் ஆரம்பித்து, 'அடுத்த பிரதமராக வரப் போவது யார்?' என்பதில் முடிகின்றனகேள்வி கள். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்ற நமது டீம், 18 வயதைத் தாண்டிய கல்லூரி மாணவ-மாணவியர், வேலை பார்க்கும் இளைஞர்கள், வேலைக்குக் காத்திருப்போர், விவசாயி கள், தொழிலாளர்கள் என இளவட்டங்களாகப் பார்த்து கேள்வித் தாள்களை நீட்டினோம்.

'இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் அக்கறை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லை. காலேஜ், சினிமா... இரண்டைத் தாண்டி எதுவுமே தெரியாது' என்று பெருசுகள் உதிர்க்கும் அவச் சொற்கள் அத்தனையும் பொய். ஐந்தாவது கேள்விக்கான பதில்களில் 'ஓட்டுக்குத் துட்டு கொடுக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற பதிலை ஏன் சேர்க்கலை?' என்று மதுரை கல்லூரி மாணவி ஒருவர் கேட்டார். நம் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் மட்டுமல்ல, அக்கறையும் அதைத் தாண்டிய தீர்க்கமான முடிவுகளும் இருக்கின்றன என்பதுதான் விகடன் கண்டுபிடித்த முதல் ரிசல்ட். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்!

''இளைஞர்களுக்கு அரசியல் அறிவு இல்லாததால்தான் நல்ல தலைவர்கள் உருவாவது தடைப்பட்டது'' என்று பெரியகுளம் ஜெயராஜ் கலைக் கல்லூரி மாணவர் முருகன் காரணம் சொன்னார். கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி உமா கௌரி அடித்த காமென்ட்டுகள் விறுவிறுப்பானவை. ''ஓட்டுப் போடவே எரிச்சலா இருக்கு. ஆனா, ஓட்டுதான் அரசியல் மாற்றத்துக்கான ஒரே ஆயுதம் என்பதால் நிச்சயம் வாக்களிப்பேன். அரசியல் இன்று வியாபாரமாக ஆகிவிட்டது. அதை மாற்றக்கூடியவர்கள் இளைஞர் படைதான்'' என்று கொட்டித் தீர்த்தார்.

அரசியல்வாதிகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் கோபங்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. 'தேர்தலுக்குச் செலவழிப்பதற்குப் பதில், தங்களுக்குள் பேசி முடிவெடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருவர் என்று சுரண்டித் தின்ன வேண்டியதுதானே?'' என்று கொதித்தார் திருவாரூர் ராஜா என்ற மாணவர்.

ஊழல் அரசியலுக்கு எதிராகவும், லஞ்சம் வாங்கிச் சொத்து குவிப்பதை அருவருப்பாகவும் இன்றைய இளைஞர்கள் நினைப்பது நம்பிக்கை தருவதாக இருந்தது.

இன்று தமிழ்நாட்டில் சூடான பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது இலங்கை விவகாரம். இது குறித்துஇளைஞர் களுக்குக் கவலைகள் அதிகம் இருக்கின்றன. 'எந்தக் கட்சியும் இலங்கைத் தமிழர்களுக்குச் சரியான நம்பிக்கையைத் தர வில்லை' என்கிறார்கள். 'நிச்சயமாக இலங்கைப் பிரச்னை, காங்கிரஸையும் அதோடு ஒட்டி உறவாடும் கட்சிகளையும் பாதிக்கும்'' என்று ஆவேசப்பட்டவர் திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார். 'இலங்கைத் தமிழருக்காக இதுவரை எதுவும் செய்யாம, இப்ப திடீர்னு உண்ணாவிரதம் உட்கார்றாங்களே. ஏன் இந்த திடீர் கரிசனம்?' என்று கிண்டலடித்தார் அதே ஊரைச் சேர்ந்த உதயா என்ற மாணவி. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையை உருட்டிக்கொண்டு இருப்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளார்கள்.

எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜயகாந்த் சொல்லி வந்தாலும், அவர் எதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் சேருவார் என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. ''தனியாப் போட்டியிட்டால்தான் அவருக்கான உண்மையான செல்வாக்கு என்ன என்பது அவருக்கே தெரியும்'' என்று ராமநாதபுரத்தில் ஒரு மாணவி சொல்ல, அவருடன் இருந்த தோழி, ''அப்படி அவரு போட்டியிட்டா நிச்சயம் எல்லாத் தொகுதியிலயும் டெபாசிட் போகும். அதைப் பார்த்தாவது புதுசா யாரும் கட்சி ஆரம்பிக்க மாட்டாங்க'' என்று அதிர்ச்சி ஊட்டினார்.

யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு மன்மோகனும் அத்வானியும்தான் இளைஞர்களின் சாய்ஸாக இருந்தது. மாயாவதியில் ஆரம்பித்து ஜே.கே.ரித்தீஷ் வரை தங்களுக்குப் பிடித்த ஆட்கள் பெயரைச் சொல்லி காமெடி பண்ணவும் தவறவில்லை. அக்கறையுள்ள இந்தியன், நேர்மை யானவர், நாட்டுப்பற்றுள்ளவர் பிரதமராக வர வேண்டும் என்பது பலரது ஆசை.

விகடன் டீம் சந்தித்தது மொத்தம் 2,301 இளைஞர்களை. அவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் மகத்தான செய்திகளை நாட்டுக்கு அறிவிப்பதாக அமைந்துள்ளன. யாரு டைய தாக்கமும் இல்லாமல் சுய முடிவுப்படிதான் நாங்கள் வாக்களிப்போம் என்று இளைஞர்கள் சொன்னது நம்பிக்கை யாக இருந்தது. தனது பிரதிநிதியாக சட்டமன்ற, நாடாளு மன்றத்தில் இருப்பவர் படித்தவரா, உள்ளூர்க்காரராஎன்பதை விட, ஊழலற்ற மனிதரா என்பதே முக்கியம் என்கிறார்கள். சாதி அரசியலை வெறுக்கும் இளைஞர்கள், ஓட்டைத் துட்டுக்கு விற்கும் செயலைக் கொடும் குற்றமாகக் கருது கிறார்கள். ஓர் அரசியல் தலைவரின் வாரிசு தகுதியானவராக இருந்தால், அவரை அரசியலுக்குக் கொண்டுவருவது தவறல்ல என்றும் கருதுகிறார்கள் இளைஞர்கள். அரசியல்வாதிகள் மீது எல்லாக் கோபங்களும் வைத்திருக்கும் இளைஞர்கள் வாக்களிப்பது அவரவர் விருப்பம் என்று சொல்லி அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். ஓட்டுப் போடு என்று கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை. அரசாங்கம் வழங்கும் சலுகைகளை ரத்து செய்யலாம் என்றும் பலர் வாக்களித்துள்ளார்கள்.

கல்லூரிகளுக்குள் அரசியல் புகுவதை இவர்கள் விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்துக்குள் அரசியல் புகுந்து, நடுநிலையான அமைப்பைச் சிதைத்து வருவதை வேதனையுடன் பார்க்கிறார்கள். ஈழப் பிரச்னையில் கருணாநிதியின் அணுகுமுறை தமிழினத் துரோகம் என்று முகத்தில் அடிப்பது மாதிரி தீர்ப்பளித்துள்ள இளைஞர்கள், ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தையும் பச்சையான சந்தர்ப்பவாதம் என்று கண்டிக்கிறார்கள்.

மதத் தீவிரவாதத்தை எதிர்த்துப் பேசுவதில் இளைஞர்கள் ஓட்டை இடதுசாரிகளால் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. பெண்களுக்கு அ.தி.மு.க-தான் அதிக முக்கியத்துவம் தருவதாக இவர்கள் சொல்கிறார்கள்.

'வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் ஈடுபட விருப்பமா?' என்ற கேள்விக்கு, 'எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயமாக வருவேன்' என்று 2,301 பேரில் 1,141 பேர் சொன்னார்கள்.

எல்லா இரவும் விடியும் என்பதே நம்பிக்கை!

Friday, March 13, 2009

Endhiran in kumudam - குமுதத்தின் லேட்டஸ்ட் எந்திரன் கவர் ஸ்டோரி


எந்திரன் துவங்கியதிலிருந்து அவ்வப்போது படம் குறித்து சிறப்பு கட்டுரைகள், செய்தி தொகுப்புகள் வெளியிட்டு தனது வாசகர்களை திருப்திபடுத்த முயன்று வருகிறது குமுதம்.

அதன் தொடர்ச்சியாக இதோ எந்திரனைப் பற்றி குமுதத்தில் மற்றுமோர் கவர் ஸ்டோரி. இடையில் சிறிது காலம் விட்ட கேப்பை இந்த சிறப்பு தொகுப்பில் கவர் செய்ய முயன்றிருக்கிறார்கள்.

படத்தை கிளிக்கி தெளிவாக பார்க்கவும்

இந்த தொகுப்பிற்காக குமுதம் நிறையவே மெனக்கெட்டிருப்பது நன்கு புரிகிறது. அங்குமிங்கும் படித்த, கேள்விப்பட்ட, துணுக்குகளை வைத்து, இன்னும் கொஞ்சம் தகவல்களை கஷ்டப்பட்டு திரட்டி இப்படி ஐந்து பக்கங்கள் தயார் செய்வது (இழுப்பது) குமுதத்திற்கு மட்டுமே கைவந்த கலை.

பரவாயில்லை….உண்மையோ, பொய்யோ செய்தியை சுவாரஸ்யமாக தர முயன்றதற்கு குமுதத்திற்கு ஒரு பூச்செண்டு தரலாம்.

எப்படியோ குமுதத்திற்கு மற்றுமொரு கைகொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
நன்றி - Onlysuperstar.com

Thursday, March 12, 2009

India's 50 Most Powerful People - இந்தியாவின் 'சக்தி 50'ல் ரஜினி-மாறன் சகோதரர்கள்!



இந்தியாவின் 50 சக்தி வாய்ந்த பிரமுகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா டுடே இதழ், இந்தியாவின் டாப் 50 பிரமுகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்திய அரசியல் மற்றும் அரசியல் அல்லாத துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஜினிகாந்த், தென்னிந்திய திரைத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார். ரஜினிகாந்த் இல்லாமல், இந்திய சினி்மாத்துறை இல்லை என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

முன்பு பல சந்தர்ப்பங்களில் ரஜினிகாந்த்தை இந்தியா டுடே விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத் துறையினரிடையே பெருந்தன்மையான மனதுக்குச் சொந்தக்காரராக ரஜினி விளங்குகிறார். பாபா, குசேலன் படங்கள் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களின் நஷ்டத்தைக் களைய பல கோடி ரூபாய்களை திருப்பிக் கொடுத்த அதிசய மனிதர் ரஜினி எனவும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

50 பேர் பட்டியலில் ரஜினிக்கு 28 ரேங்க். மேலும், புகழ் மன்னன் என்ற பட்டத்தையும் இந்தியா டுடே ரஜினிக்கு சூட்டியுள்ளது.
அரசியல் சக்திகள் வரிசையில் சோனியா காந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடம் அவரது மகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்திக்குக் கிடைத்துள்ளது. 3வது இடத்தில் இருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அத்வானிக்கு 4வது இடம்தான் கொடுத்துள்ளது இந்தியா டுடே.

மாயாவதி 7வது இடத்தில் இருக்கிறார். பத்தாவது இடத்தில் இருப்பவர் லாலு பிரசாத் யாதவ்.

ஷாருக்கானுக்கு 5வது இடம்:

அரசியல்வாதிகள் அல்லாதோர் பிரிவில் 5வது இடத்தில் இருக்கிறார் ஷாருக் கான்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 11வது இடமும், 16வது இடத்தில் அமீர் கானும், 19வது இடத்தில் அமிதாப் பச்சனும் உள்ளனர்.

24வது இடத்தில் மாறன் சகோதரர்கள்

சன் டிவி அதிபர் கலாநிதி மாறனும், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் இணைந்து 24வது இடத்தில் உள்ளனர்.

மீடியா ஜாம்பவான்களில் ஒருவரான பிரனாய் ராயும், அவரது மனைவி ராதிகா ராயும் 42வது இடத்தில் உள்ளனர்.

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு இந்தப் பட்டியலில் 47வது இடம்.

நன்றிகள்
தமிழ் - Thatstamil
படம் - Busiiness வீக்

இது தொடர்பான ஆங்கில செய்தி இந்தியா டுடேயிலிருந்து ......

28. RAJINIKANTH, 58, ACTOR
BIG BROTHER

Because the one-time carpenter and conductor has fanatics extending from Japan to Korea, and his 38,000 registered fan clubs around the world with an estimated 19 lakh members are waiting for him to start his own political party.

Rajinikanth
Rajinikanth
Because at Rs 26 crore a film, he’s the most highly paid star in southern India.

Because every time he stars in a flop, such as Kuselan, he compensates his distributors and bounces back with a big budget blockbuster, such as Shankar’s Rs 150-crore film, Endiran.

Because no protest or celebration in Tamil tinseltown is complete without his presence.

Spiritual guru: Swami Satchidananda of Rishikesh, on whose call he made a movie, Baba, before the Swami’s death in 2002.
unforgettable number 10A, the route number on which he was a conductor in his early days in Bangalore.

His political icon: Former Singapore premier Lee Kuan Yew.

மேலும் தகவல்களுக்கு ......

http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=31652&Itemid=1&issueid=96&sectionid=30&limit=1&limitstart=௨

http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=31590&Itemid=1&issueid=96&sectionid=3&limit=1&limitstart=


Wednesday, March 11, 2009

Jay in Vamanan - ஜெய்யின் 'திமிர்' பேட்டி


தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவும் செய்யாத துரோகத்தை செய்திருக்கிறார் ஜெய். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் இவர் அளித்திருக்கும் பேட்டி, பல தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அந்த பேட்டியில்?

"நான் நடித்துக் கொண்டிருக்கும் வாமனன் படம் பெரிய ஹிட் ஆகும். ஆனால், அதற்கு பிறகு வரப்போகும் என்னுடைய இரண்டு படங்கள் பெரிய ஃபிளாப் ஆகும்" இதுதான் ஜெய்யின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள். பல கோடிகள் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை பற்றி ஏதாவது நான்கு வரி செய்தி தவறாக வந்தால் கூட, அதிர்ந்து போய்விடுவார்கள். ஏனென்றால், விநியோகஸ்தர்கள் படத்தை வாங்காமல் போய்விட்டால் என்னாவது? ரசிகர்கள் தியேட்டருக்குள் வராமல் போய்விடுவார்களோ? இப்படியெல்லாம் நாலு வரி கிசுகிசுவுக்கே அஞ்சும் தயாரிப்பாளர்கள், படத்தின் ஹீரோவே இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தினால் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?

வாமனன் படத்திற்கு பிறகு ஜெய் நடித்து வெளிவரவேண்டிய படங்கள் அதே இடம் அதே நேரம், அவள் பெயர் தமிழரசி, அர்ஜுனன் காதலி. இதில் எந்த படத்தை ஃபிளாப் ஆகும் என்கிறார் ஜெய்? படத்தின் ஹீரோவே தனது படத்தை பற்றி இப்படி சொல்லிவிட்ட பிறகு எந்த விநியோகஸ்தராவது மேற்படி படங்களை வாங்க முன்வருவார்களா?

இவர் கொடுத்த பேட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக இதுபற்றி விவாதித்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், ஜெய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் கோவா படப்பிடிப்பை உடனே நிறுத்த சொல்லிவிட்டதாம். குறைந்தது ஆறு மாதங்களாவது ஜெய்யுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற திக் திக் நிமிடங்களோடு நகர்கிறது நேரம்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு நாளை அவசரமாக கூட்டப்படுகிறது. ஜெய்யின் தலை எழுத்தை நாளை முடிவு செய்வார்கள் போல் தெரிகிறது.

குறிப்பு: ஜெய் ஏற்கனவே மினரல் வாட்டர் கேட்டு பிரச்னை பண்ணியது நினைவிருக்கலாம்!

வாமணன் பட முழு விவரம்

49-O Election Rule in india - யாருக்கும் ஓட்டில்லை: ஆன்-லைனில் தீவிரம்


"மேலே பெயர் குறிப்பிட்டுள்ள யாருக்கும் என் ஓட்டு இல்லை' என்று ஒரு கட்டத்தை ஓட்டுச்சீட்டில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது; இதற்கு ஆன்-லைனில் பிசாரம் செய்வதும் அதிகரித்துள்ளது.தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தாலும், எந்த அரசும் சரிவர இல்லை; எந்த வேட்பாளரும் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்ற விரக்தி, மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக அவர்கள் எல்லா வழியிலும் மன்றாடிப்பார்த்து விட்டனர்; பலனில்லை.


இப்போது, இந்த கோஷம் வலுத்து வருகிறது. தொகுதியில் நிறுத்தப்பட்ட எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை எனில், யாருக்கும் ஓட்டு போடாமல் இருக்கலாம்; அதற்கு ஓட்டுச்சீட்டில் தனி பிரிவு அமைக்கலாம் என்று பலரும் யோசனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கோர்ட்டுகளிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இப்போது, ஆன்-லைனில் இந்த பிரசாரம் அதிகரித்து வருகிறது.
மேலே பெயர் குறிப்பிட்டுள்ள யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை' என்று ஓட்டுச் சீட்டில் தனி கட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான் எங்கள் ஜனநாயக ரீதியான அதிருப்தியை வெளிப்படுத்த முடியும்' என்று ஆன்-லைனில் கருத்துக்கள் குவிந் துள்ளன.இது தொடர்பாக, சில வெப்சைட்கள் முளைத்துள்ளன. அவற்றில் இது தொடர்பான விஷயங்களை பலரும் வெளியிட்டுள்ளனர்.


சில வெப்சைட்களில்ப்ளாக்' பிரிவுகளில் தன் கருத்துக்களை பலரும் தெரிவித்துள்ளனர். "பல நாடுகளில் நெகட்டிவ் ஓட்டு' உரிமை மக்களுக்கு உள்ளது. அவர்களுக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஓட்டளிக்காமல் இருக்கலாம்.அதே சமயம், ஓட்டுரிமையை பயன்படுத்தவும் செய்யலாம். இதற்காக, ஓட்டுச் சீட்டில் கடைசி கட்டத் தில், யாருக்கும் என் ஓட்டில்லை' என்று எழுதப்பட்டிருக்கும். அதில், முத்திரையிட்டு தன் அதிருப்தியை வெளிப்படுத்தலாம்' என்று "ப்ளாக்கில்' சிலர் கூறி, அதற்கு பல நாடுகளை உதாரணம் காட்டியும் உள்ளனர்.


கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வேட்பாளராக நிற்பதும், அவர்கள் எம்.பி.,யாக அமர்வதும், மந்திரியாவதும் வாடிக்கையாகிவிட்டது. "இப்படிப் பட்டவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு வேண்டுமா' என்று ஆவேசத்துடன் சிலர் கருத்து கூறியுள்ளனர்.ஆனால், அரசியல் சட்ட நிபுணர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. "ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சியை, வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தான் உள்ளது.


எதிர்மறையான நடவடிக்கையை வெளிக்காட்ட ஜனநாயகத்தில் இடமில்லை. ஆனால், கிரிமினல் வேட் பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வரும் நிலை துர திருஷ்டமானது தான். அதை தவிர்க்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்று தெரிவித்தனர்.

Tuesday, March 10, 2009

Prevention in Agriculture - காந்தியின் தேசமே, விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!



இன்று காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.

"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி
- அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.

அதே போல, அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது.
அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே ஒதுக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!

இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்)
பல
ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...



இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.

ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்??


"கிராமங்களிலிருந்து சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் நூற்றுக்கு தொன்னூறு பேர் விவசாயிகள். காரணம் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்மொழியப்படவில்லை". இவ்வாறு நண்பர் மதிபாலா தனது அற்ப்புதமான கட்டுரையில் சொல்லியிருந்தார். உண்மையிலும் உண்மை.. இது தொடர்பில் என்னுடைய சில கருத்தையும் பதிவு செய்ய விரும்பி இதை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".

மதிபாலா நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..
ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.



இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.

இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான்.


நன்றி - தமிழர் நேசன்

Saturday, March 07, 2009

Rajini Voice in 2009 Election - தேர்தல் : ரஜினி முடிவு என்ன ?


பொதுத் தேர்தல்களும் - ரஜினி பற்றிய அரசியல் எதிர்பார்ப்பும்


தோ தேர்தலை அறிவித்துவிட்டார்கள். பரபரப்பு ஸ்டார்ட் ஆகிவிட்டது. தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் மற்றும் புலனாய்வு இதழ்களின் அடுத்த வழக்கமான சம்பிரதாயம்ரஜினி வாய்ஸ் யாருக்கு?” என்று தலைப்பிட்டு தங்கள் இஷ்டத்துக்கு எழுதித் தீர்ப்பது தான்.

rajii-elections-bj

ஒரு பத்திரிக்கையாக மேலே சொன்னபடி எழுத அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் அப்படி எழுதுவதன் உள்நோக்கம் தான் நாம் கவனிக்கவேண்டியது.

நேரடியாக அரசியலுக்கு வராமல் அரசியல் பற்றிய எதிர்பார்ப்பு 13 வருடங்களாக ஒருவர் மீது இருக்குமானால் அது சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் இதுவரை ரஜினி ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பரப்பரப்பு அனைத்தும் ஜஸ்ட் வெறும் அறிக்கை மற்றும் தொலைகாட்சி பேட்டிகள் மூலம் மட்டுமே என்பது நினைவுகொள்ளத் தக்கது. அவர் எந்த சூழ்நிலையிலும் மக்களை இதுவரை நேரடியாக சந்திக்கவில்லை என்பதை “ரஜினி வாய்ஸ்” குறித்து அவ்வப்போது ஆதங்கப்படும் தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் நினைவில் கொள்ளவேண்டும்.

சூப்பர் ஸ்டாரின் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் சுருக்கமாக அதே சமயம் சரியாக இன்றைய மாலை மலர் தந்திருக்கிறது. முதல் இரண்டு பாராக்கள் சூப்பர்.

“ரஜினியிடம் அரசியல் இல்லை. ஆனால் அவரை சுற்றி அரசியல் உண்டு.” - வைரமுத்து.

Over to Maalai Malar (06/03/09)

பாராளுமன்ற தேர்தல் ரஜினி ஆதரவு யாருக்கு?

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ரஜினி ஆட்டி வைத்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. விரல் அசைவுக்காக காத்திருக்கும் ரசிகர் படை தமிழ் மக்கள் அளித்துள்ள சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றால் அவரது ஆதரவை பெற அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வரிந்து கட்டுவது உண்டு.

ரஜினி கட்சி துவங்கி அரசியலில் ஈடுபட வேண்டுமென ரசிகர்கள் வற்புறுத்தல்கள் தொடர்கிறது.. இவ்விஷயத்தில் அவர் தொடர்மவுனம் கடைபிடிப்பதால் தேர்தல்களில் அவர் கை நீட்டும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஆறுதல் படுகின்றனர்.

1996-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக அரசியல் களத்தில் பிரவேசித்தார் அ.தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக கருணாநிதி, மூப்பனாரை நேரில் சந்தித்து தி.மு.க. - த.மா.கா. கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 1998 தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார். ஒரு வருடத்திலேயே அ.தி.மு.க-வால் மத்திய அரசு கவிழ்ந்தது. 1999-ல் தேர்தல் நடந்த போது பல கட்சிகள் ரஜினி ஆதரவை நாடி தூதுவிட்டன. ஆனால் எக்கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.. நடுநிலைமை வகித்தார். ரசிகர்கள் தனது படங்களை தேர்தலில் பயன்படுத்தக்கூடாது எனவும், தடை விதித்தார்.

ஆனால் 2004 பாராளுமன்ற தேர்தலில் நிலைப்பாடு மாறியது. பா.ம.க-வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அக்கட்சிக்கு எதிராக இறங்கினார்.. பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் எதிராக ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் என்றார். அதோடு நதி நீர் இணைப்பை நிறைவேற்றுவதாக அறிவித்த பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போடுவேன் என்றும் வெளிப்படையாக சொன்னார். அது போல் ஓட்டும் போட்டார்.

ஆனால் 2006 சட்ட சபை தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் மீண்டும் மவுனம். அவரது படங்களுடன் சென்று பிடித்த அரசியல் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்த ரசிகர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

தற்போதைய தேர்தலில் ரஜினி நிலை என்ன என்று ரசிகர்களும் அரசியல் கட்சியினரும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கின்றனர். மறைமுகமாக சில கட்சிகள் அவரது ஆதரவை கேட்டு தூது அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி படங்கள், ரசிகர்மன்ற கொடிகள் போன்றவற்றுடன் சென்றால் கூடுதல் வாக்குகளை திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.

ரஜினி ஏதேனும் கட்சியை ஆதரிப்பாரா அல்லது நடுநிலைவகிப்பாரா என்பது இன்னும் ஒரிருவாரத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முடிவை ரசிகர்மன்ற தலைவர் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் மூலம் விரைவில் தெரிவிப்பார் என்று ரசிகர்மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

நன்றி - onlysuperstar.com



Tuesday, March 03, 2009

kuraltvinfo.com சிறைக்கு அஞ்ச மாட்டேன்... விஜய டி.ராஜேந்தர் ஆவேசம்!


"சார்... சும்மா டெஸ்ட் டெலிகாஸ்ட் இது. இதையே இரண்டு மாசத்திலே இருபது லட்சம் பேர் பார்த்திருக்காங்க. (யாருக்கு தெரியும் !!) எப்படி சினிமாவிலே ஒரு சாதனையை(??!!) செஞ்சேனோ, இந்த வெப் டிவியிலேயும் என்னோட சாதனை தொடரும்" ஆர்பாட்டமாக பேச ஆரம்பித்தார் விஜய.டி.ராஜேந்தர். இவர் புதிதாக துவங்கியிருக்கும் குறள்டிவிஇன்போ.காம் குறித்துதான் இந்த பெருமிதம்.

சினிமா, இலக்கியம், பல்சுவை என்ற பிரிவுகளோடு, ஈழத்தமிழர்களின் இன்னல்களுக்கும் குரல் கொடுக்கிற டி.வியாக இது இருக்கும் என்றவரிடம், புலிகளுக்கு ஆதரவாக பேசிய சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆதரவாக பேசினால் கைது செய்யப்படுவீர்களே என்றார் ஒரு நிருபர். அவ்வளவுதான்....

'உங்களுடைய விருப்பம் அதுதான்னா அதுக்காக கவலைப்படுறவன் இந்த விஜய.டிராஜேந்தர் இல்லே. ஈழத்தமிழர்கள் நலனை வலியுறுத்தி எனக்கு வழங்கப்பட்ட சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியையே தூக்கி எறிஞ்சவன் நான். சாதாரண கவுன்சிலர் பதவியை கூட விட்டு தராதவர்கள் மத்தியில் என்னுடைய செயலை யாரும் பாராட்ட வேண்டாம். விமர்சனம் பண்ணாமல் இருந்தாலே போதும். நீங்க சொல்ற போராளிகள் என்பவர்கள் யார்? ஈழத்தமிழர்கள்தானே! இதை சொன்னால் என்னை கைது செய்வேன் என்றால், நான் இப்போதே ரெடி' என்றார் ஆவேசமாக!

'மே 13 ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வருது. அதிலே ஈழத்தமிழர் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன். மே 15 ந் தேதியில் இருந்து என்னுடைய 'ஒருதலைக் காதல்' படத்தை ஆரம்பிக்கப் போறேன். குறளரசனை ஹீரோவாக அறிமுகப்படுத்துற இன்னொரு படத்தையும் துவங்கப் போறேன்' என்றார்.

முன்னதாக திரையிடப்பட்ட குறள் டிவி ட்ரெய்லரில் அநேக நிகழ்ச்சிகளில் இவரே திரையில் தோன்றி வசனங்கள் பேசிக் கொண்டிருந்தார். மற்றொரு டி.ராஜேந்தர் ஷோ?


Thee - Movie Review தீ – திரைவிமர்சனம்



சென்னைக்கு வரும் ஹீரோ, ஒண்டி ஆளாக நின்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலங்கடிப்பதுதான் கதை! கதை புதுசு. காட்சிகள் பழசு என்பதால் கடுப்பும், கைத்தட்டல்களுமாக கலப்பட ரசனைக்குள்ளாக்குகிறார் இயக்குனர் கிச்சா.

ஆரம்ப காட்சியில் சென்சார் கொஞ்சம் அசந்திருந்தாலும் ரசிகர்களுக்கு முடி கயிறு வைத்தியம் அவசியப்பட்டிருக்கும். நல்லவேளை... நிர்வாண கோலத்தில் ஓங்கு தாங்காக நடந்து வரும் சுந்தர்சி க்கு ஒரு கட்சி பேனரை இடுப்பில் கட்டி காப்பாற்றுகிறார் தலைவாசல் விஜய். பின்பு அதே கட்சியில் எம்.எல்.ஏ ஆகிற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்கிறார் சுந்தர்சி.

பிரபல அரசியல் தலைவனிடம் திட்டம் போட்டு தஞ்சமடையும் இவர், அவர்களை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ். ஏன் என்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் ஒரு பிளாஷ்பேக். அநேக படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும், பின்னாளில் ஹீரோவின் அழிச்சாட்டியங்களுக்கு சப்பை கட்டு கட்டுகிறது இந்த பகுதி. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு 'ரிவார்டு' கிடைக்கிறதோ இல்லையோ, 'ரிவிட்' உண்டு என்பதை கலங்கடிக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

பிளாஷ்பேக்கில் இன்ஸ்பெக்டர் சாமியாக அவதாரம் எடுத்திருக்கிறார் சுந்தர்சி. இவரால் பாதிக்கப்படுகிற எம்.எல்.ஏக்களை லாக்கப்பில் தள்ளுகிறார். 'ஏய் நான் யாரு தெரியுமா' என்று நெஞ்சை நிமிர்த்துபவர்களுக்கு இவர் கொடுக்கிற சூடு ஒவ்வொன்றும் பெட்ரோல் குண்டு! தனது உயர் அதிகாரியையே லாக்கப்பில் தள்ளும் சுந்தர்சி யின் வீரத்திற்கு கைதட்டல்கள் நிச்சயம் உண்டு.

இரண்டாம் பாதியில் இவருக்கு ஜோடி நமீதா. அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருக்கும் நடிகை வேடம். நமீதாவை நடுவில் நிற்க வைத்துவிட்டு நாலு புறமும் நின்று கண்காட்சி நடத்தியிருகிறது கேமிரா. நமீதா-சுந்தர்சி மசாஜ் காட்சிகள் 'கெட்டக்கல்' ஆர்ய வைத்திய சாலை! சில காட்சிகளில் புடவை கட்டியும் இருக்கிறார். கண் 'கொள்ளாக்' காட்சி!

நியாயமான போலீஸ் அதிகாரியாக மனோஜ் கே ஜெயன். இவரது பதவிக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த சுந்தர்சி செய்கிற காரியங்கள் பரபரப்பு என்றால், வீறு கொண்டு எழும் காவல் துறையினர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் வேலை நிறுத்தம் செய்து ஸ்தம்பிக்க வைப்பது அதிர்ச்சி. போலீஸ் இல்லையென்றால் நாடு என்னாகும் என்பதற்கு இன்னும் உருப்பாடியாக சீன்களை யோசித்திருக்கலாமே கிச்சா?

உடம்பில் எந்தெந்த பகுதிகளில் கத்தியால் குத்துபட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை விவரமாக அறிந்து கொண்டபின், குத்துப்பட்டு ரத்தம் கக்கும் சுந்தர்சி அதுபோல இன்னும் சில காட்சிகளில் கலக்குகிறார்.

சுமார் ஒரு டஜன் வில்லன்கள் இருந்தும், மாறாத ஆக்ரோஷம்! தேறாத சவடால்கள்!

அவ்வளவு நெருக்கமான எதிரி, யூனிபார்மை கழற்றிவிட்டு வந்தால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா, அவனையே எம்எல்ஏ ஆக்குகிறார்களே? லாஜிக்கிற்கும் சேர்த்து தீ மூட்டியிருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'கா கா கா' ரீமிக்ஸ் துள்ளல். (படமாக்கிய விதம்தான் அல்லல்)

தீ- பட்டால் என்னாகுமோ அதுதான் நடக்கிறது வெளியே வரும்போதும்!


கேபிள் சங்கரின் தீ – திரைவிமர்சனம்
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009