Sunday, March 22, 2009

LTTE Prabhakaran now - சாதாரண உடையில் பிரபாகரன் நடமாட்டம் : இலங்கை ராணுவம் தகவல்


"இலங்கை புதுக் குடியிருப்பில் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி பலமுறை சாதாரண உடையில் வெளியே வந்துள்ளனர்' என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் வெறும் 26.5 சதுர கி.மீ., பரப்பளவிலான நிலப்பகுதி மட்டுமே இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது. அப்பகுதியையும் புலிகளிடமிருந்து கைப்பற்ற கடும் தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி புதுக்குடியிருப்பில் உள்ள தாக்குதலுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது

இதுகுறித்து இலங்கை ராணுவம் கூறியிருப்பதாவது:புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி இருவரையும், புதுக்குடியிருப்பில் உள்ள துப்பாக்கிச்சூடு நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் பலமுறை பார்த்ததாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வந்த தமிழர்கள் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பதுங்குகுழியில் இருப்பதாகவும், அடிக்கடி சாதாரண உடையில் வெளியே வந்து ராணுவத்திற்கு எதிராக போரிடுவதன் அவசியம் குறித்து படையில் சேராத தமிழர்களிடையே பிரசாரம் செய்துள்ளனர்.

சாதாரண உடையில் வருவதன் மூலம் தமிழர்களுடன் கலந்த இருவரும், தங்களை சுற்றி பயங்கர ஆயுதங்களுடன் உள்ள சிறப்பு பாதுகாவலர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மனின் டிரைவரை 58வது பிரிவு கைது செய்துள்ளது. புலிகளின் தலைவர்கள் பற்றி பல ரகசிய தகவல்களை அவன் ராணுவத்தின் விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.இவ்வாறு ராணுவம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய ஆயிரத்து 185 தமிழர்களை மீட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தற்போது நடந்து வரும் சண்டையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி ராணுவத்திடம் அடைக்கலம் புகுந்த தமிழர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முல்லைத்தீவில் படிக்கரைக்கு தெற்கே நடந்த சண்டையில் புலிகளின் கடற்பிரிவு மூத்த தலைவர் சிந்து கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.இரணைப்பாலையில் செந்தூரன் சிலையடி, அமலன் வெதுப்பகச்சந்தி, டயர் கடைச்சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சிவன் கோவிலடி ஆகிய இடங்களில் முன்னகர்ந்த ராணுவத்தினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், படுகாயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதலில், நேற்று 46 பேர் உட்பட கடந்த மூன்று நாட்களில் 102 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.வன்னிக்கு கடந்த 4 மாதங்களாக மருந்துகள் அனுப்பப்படாத நிலையில், மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக கிளிநொச்சியை சேர்ந்த டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல் இரு தடவைகளில் 850க்கும் அதிகமான நோயாளிகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்றி - தினமலர்

Related Posts



3 கருத்துக்கள்:

raju on March 22, 2009 at 1:24 PM said...

பிரபாகரன் அவர்களும்,மகன் சார்லஸ் அன்டோனி யும் சாதரண உடையில் வலம் வருகிறார்கள் என்ற பெயரில் பாதுகாப்பு பிரதேசத்தில் உள்ள மக்களை கொள்ளுவதட்க்கு பக்ச குடும்பம் போட்டுள்ள திட்டம் மிக மிக அருமை. தமிழ் மக்கள் என்ன சிங்களவர்களை போல் மடையர்களா?

Anonymous said...

மிகவும் அழகாக சொன்னிர்கள் பொங்கல் http://tinyurl.com/dctk7l

கடவுளே sania Mirza, Wimbeldon ல வெற்றி பெறனும்..

nTamil on March 22, 2009 at 8:22 PM said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009