Wednesday, November 26, 2008

முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள்! சாதியும் ஓழியும்!


ஒரு காலத்தில் சாதியை தொழில் அடிப்படையில் பிரித்திருந்தார்கள். இடைபட்ட காலத்தில் சில சாதியினரை ஓடுக்கினார்கள். இவர்களுக்கு கல்வி, பொருளாதார முன்னேற்றம் மறுக்கப்பட்டது. இந்த தீண்டாமை வன்கொடுமையை அடியோடு ஓழிக்க வேண்டும் என்பதற்கு மாற்று கருத்தில்லை. ஆனால் இன்று சாதிய இட ஓதுக்கீடு என்பதை வைத்து நடப்பது என்ன? சனநாயக நாட்டில் சாதிய இடஓதுக்கீடு மட்டும் உங்களுக்கு தீண்டாமையாக தெரியவில்லையா?

சாதியை ஓழிக்கவேண்டும் என்பது உங்கள் கொள்கையா? அல்லது சாதி இருக்கட்டும் அது சமத்துவமாக இருக்கட்டும் என்பது உங்கள் கொள்கையா? அதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

சாதி மனிதனுக்கு எதற்குமே தேவையில்லையே. அப்படி இருக்க ஏன் இந்த சாதியை விடாபிடியாக பிடித்துள்ளீர்கள்?

இன்று சாதி எங்கெங்கு பயன்படுத்தப்படுகிறது?
1. பள்ளி சாதிசான்றிதழில், 2. கல்லூரி இட ஓதுக்கீட்டில், 3. அரசு உதவிதொகைகளில், 4. வேலைவாய்ப்பு இட ஓதுக்கீட்டில். 5.அரசியல் இட ஓதுக்கீட்டில். இந்த இடங்களில் தான் சட்ட்பூர்வமாகவே சாதி பயன்படுத்தப்படுகிறது.(நான் காண்ட மிகபெரிய வன்கொடுமை இது தான்)

சாதி சங்கங்கள், சாதிகட்சிகள், திருமணங்கள் இவற்றில் பயன்படுத்துவதை சட்டம் தவறு என்றும் சொல்லவில்லை, சரி என்றும் சொல்லவில்லை.

ஓடுக்குதல், சித்தரவதை செய்தல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல், இவற்றில் சாதி பயன்படுத்துவதை சட்டம் தீண்டாமை வன்கொடுமையாக எதிர்க்கிறது.

அன்பர்களே ஓன்றை புரிந்து கொள்ளுங்கள். ஓடுக்குதல், அடிமைபடுத்துதல், கேலி செய்தல் என்பவை சாதிய அடையாளத்தில் செய்தால் மாட்டுமே தீண்டாமை அல்ல. எங்கு எப்படி எந்த அடையாளத்தில் செய்தாலும் அது தீண்டாமை தான். சாதியை சொல்லி திட்டினால் தான் வன்கொடுமை என்று கருத வேண்டாம். விருப்பததாக மனிததன்மையற்ற எந்த வார்த்தையை சொல்லி திட்டினாலும் அது வன்கொடுமை தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு சாதி அடையாளம் மட்டும் பூசிக்கொள்ள தேவையில்லை.

சரி எதற்காக இந்த சாதி வேண்டும்? பின்தங்கியவர்கள் முன்னேற இட ஓதுக்கீடுகள் வேண்டும் என்றால் அதற்கு சாதி அடையாளம் தான் வேண்டுமா? ஓரு காலத்தில் சாதிய அடையாள அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது தீண்டாமை என்றால் இன்று சாதிய அடிப்படையில் கல்வி சலுகை தருவது மட்டும் எப்படி தீண்டாமையாகாது?

உங்களுடைய குறிக்கோள் என்ன?

பிற்படுத்தபட்ட சாதியை முற்படுத்துவோம். பின்னர் சரிசம பலத்தோடு சாதிசண்டை போடலாம் என்பதா?

முற்படுத்தபட்ட சாதியினர் ஒரு காலத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம் இன்றைய சாதிய இட ஓதுக்கீடு என்பதா?,

முற்படுத்தப்பட்ட சாதியினர் செய்த பாவத்துக்கு தண்டனையா? அல்லது பாவத்துக்கு திருப்பி பலிதீர்க்க இன்றைய இட ஓதுக்கீடா?

படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரன்டாம் வகுப்புகளிலேயே நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். அது எந்த சாதியினராக இருந்தாலும் சரி எந்த இனத்தினராக இருந்தாலும் சரி. இவர்கள் பொது பிரிவிலேயே கல்லூரிக்குள் தாரளம் நுழைந்து விடலாம்.

பொதுவாக எல்லா சாதியை சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களும் தனியார் கல்லூரிகளுக்கு சென்று விடுகின்றனர். அரசு கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் எல்லா சாதியிலும் இருக்கும் ஏழைமாணவர்கள் மட்டும் தான். இந்த ஏழை மாணவர்களுக்குள் ஏன் உங்கள் சாதிபித்தில் வஞ்சனை காட்டுகிறீர்கள்?


ஆனால் இட ஓதுக்கீடு எதற்காக பலிதீர்க்கவா? ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் கல்வி சமதாய மேன்மை மறுக்கப்பட்டது என்பது மிக தவறானது. எந்த காலத்திலும் எந்த சாதியாக இருந்தாலும் ஏழைகளுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முற்படுத்தப்பட்ட சாதியில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள் என்பது ஏன் உலகுக்கு தெரியாமல் போனது.

நகரத்தில் இருப்பவர்களுக்கு படிக்க கணிணி முதற்கொண்டு ஆசிரியர்கள், நூலகம், ஆய்வு கூடம், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வகுப்புகள். மின்சார வசதி என எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களே இல்லாமல் சிம்னி விளக்கில் படிக்கிறோம் கிராம மாணவர்கள். இவர்களுக்கு அல்லவா மதிப்பெண் அடிப்படையில் இட ஓதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும்.

இட ஓதுக்கீடு தேவைதான் அதற்காக ஏன் சாதிய அடையாளத்தில் தருகிறீர்கள்? பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு செய்யலாமல்லவா? அப்போதும் பின்தங்கிய வகுப்பினர் தானே பெரும்பாலும் பயனடைவார்கள். கூடவே முற்படுத்தபட்ட சாதி ஏழைகளும் பயனடைவார்கள் அல்லவா?

எனது வழிபாடு வேறு, உனது வழிபாடு வேறு அதனால் மதமாக பிரிந்துள்ளோம் என்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாதியில் என்ன பிரிவினை இருக்கிறது என்பது தான் எனக்கு இன்னும் புறியவில்லை.

ஓரு காலத்தில் தொழில் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டது. ஆனால் இன்று சாதிய அடிப்படையில் எந்த தொழில் உள்ளது. எல்லோரும் எல்லா தொழிலுமே செய்கிறார்களே. அதே போல தான் உணவு பழக்கவழக்கங்களும். எல்லோருமே பிடித்ததை சாப்பிடும் காலம் இது. இதில் எங்கே சாதிபாகுபாடு வேண்டும்?

சாதி என்ற குறுகிய வட்டத்தில் மனதகுலத்துக்கு அல்லது குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கும் லாபம் என்ன? சாதிக்கொள்கைகள் தான் என்ன? மதத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. நாட்டுக்கு ஓரு கொள்கை இருக்கிறது. மொழிக்கு ஓரு கொள்கை இருக்கிறது. இனத்துக்கு ஓரு கொள்கை இருக்கிறது. ஆனால் இந்த சாதிக்கு என்ன கொள்கை இருக்கிறது?

எனக்கு தெரிந்து தொழிலும், உணவு உட்பட பழக்கவழக்கங்களும் தான். ஆனால் இன்று தொழிலுக்கும் உணவுக்கும் சாதிய பாகுபாடு தேவையே இல்லையே. உணவுக்காக வேண்டுமாயின் சைவம் அசைவம் என பிரிக்கலாம். அதிலும் ஏற்ற தாழ்வு வர வாய்ப்பில்லலையே.

சனநாயக நாட்டில் யாரையும் யாரும் அடிமைப்படுத்த முடியாது. நீ இந்த தொழில் தான் செய்யவேண்டும் என வற்புருத்தவும் முடியாது. அப்படி இருக்க எதற்காக இன்னும் இந்த சாதி அடையாளம்.

மனிதனுக்கு எதற்குமே பயன்படாத சாதிய வட்டம் வேண்டும் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே ஆதரியுங்கள். நிச்சயம் சாதிகள் சமத்துவமும் ஆகாது, சாதி சண்டையம் ஓழியாது. எல்லா சாதியினரும் கல்வி, பொருளாதாரம், ஆயுதம், என அனைத்திலும் சரிசம பலத்துடன் மோதிக்கொள்ளலாம். இதனால் இரு சாதியினருக்கும் இழப்பு தானே தவிர, எந்த சாதியும் சமுதாய முன்னேற்றத்தை காண முடியாது.

சாதியே வேண்டாம் என்பவர்கள் சாதிய இட ஓதுக்கீட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு (மன்னிக்கவும் தீயிட்டு எரித்துவிட்டு) பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீட்டை வழங்கும்படி குரல் கொடுங்கள். அப்போது தான் உண்மையான சமத்துவமும் சாதி ஓழிப்பும் வரும்.

சாதிய இட ஓதுக்கீடு என்பதற்காக சாதியை அங்கீகரித்துக்கொண்டு இருப்பதால் தான் இன்றும் சாதிக்கலவரங்கள் புகைந்துகொண்டு இருக்கிறது.

சாதியே மனிதனுக்கு தேவையில்லை. சாதியை பயன்படுத்துவதே தேச துரோகம். சாதிபெயரில் கட்சிகள் இருக்க கூடாது. சாதி பெயரில் சங்கங்கள் இருக்ககூடாது. சாதி பெயரில் குழுக்கல் இருக்ககூடாது. சாதி பெயரில் இட ஓதுக்கீடுகள் இருக்ககூடாது. சாதியே இருக்ககூடாது என சட்டம் போட்டு பாருங்கள். அடுத்த தலைமுறையினருக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடும்.

அது இல்லாமல் இன்னும் அரசியலுக்காக சாதியை, சாதி கட்சிகளை, சாதிசங்கங்களை, சாதி இட ஓதுக்கீடுகளை வளர்த்து வந்தீர்கள் என்றால் எந்த காலத்திலும் சாதியும் ஓழியாது, சாதிகள் சமத்துவமும் ஆகாது. இன்னும் சாதிவெறி தீவிரமாகி சாதிக்கலவரங்கள் தொடர்ந்து வெடிக்கும் என்பது தான் நிதர்சன உண்மை.

சாதியை ஓழிக்க முதலில் சாதிய இட ஓதுக்கீட்டை ஓழியுங்கள். இந்த ஓன்றை வைத்து தான் சட்டத்தின் முன் சவால் விட்டுக்கொண்டு சாதிய சங்கங்களும், சாதிய கட்சிகளும், சாதிய அரசியலும் கொடிகட்டி பறக்கிறது. சாதிய இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், அதை வைத்து எந்த சாதியையும் முன்னேற்ற எந்த சங்கமும் தேவைப்படாது. சாதியை ஓழியுங்கள். சாதியை ஒழிக்காமல் சாதிகலவரத்துக்கு வேறு தீர்வே இல்லை.


thanks - kulali.blogspot

Related Posts



1 கருத்துக்கள்:

Anonymous said...

Reservation is meant for bringing up oppressed people who were denied social rights for several centuries and is not meant for making a poor richer. Social scientists have published several research reports on what happens to a person's mental, physical, social well-being when he is oppressed and denied fundamental rights. Suppression not only impacts that particular individual but his entire generation. It would be foolish to introduce reservation to make a poor to become richer. You will become rich if you are smart enough to utilize the opportunities you are previlaged. Castism has to go away from people's mind and nothing to do with reservation. Govt has to encourage intercaste marriages. People in all communities have to stop advertising caste based matrimonials. When students in reserved category are capable of securing marks equal to students in open category, reservation will automatically become irrelevant. Until then people have compete within their societies. Equality among equals. Let's not conduct a race between a physically handicapped person with normal people.

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009