Monday, November 24, 2008

Infosys - ஊழியர்களை கசக்கிப்பிழிய எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க


Infosys நிறுவனம் பெங்களூரில் அதிகரித்து வரும் peak time trafficஜ கட்டுப்படுத்த ஒரு அருமையான உபாயத்தை (so called "innovative idea") கொண்டு வந்துள்ளது. அதாவது அங்கு வேலை செய்யும் ஊழியர்களை முன்னதாகவே அலுவலகம் வர தூண்டுவதன் மூலம், காலை 9-10 மணிக்கு இடையில் ஏற்படும் traffic jamஜ மட்டுப்படுத்த போகிறார்களாம்.


இத்திட்டத்தின் மூலம் அலுவலகத்துக்கு 8 மணிக்கெல்லாம் வரும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 1.5 புள்ளியும், 8:30 மணிக்கு வரும் ஊழியருக்கு 1 புள்ளியும் வழங்குவார்களாம், மாதக்கடைசியில் 20 புள்ளி பெற்றுள்ள ஊழியர்களில் குலுக்கல் முறையில் தேர்வாகும் இரு ஊழியருக்கு தலா 12 ஆயிரமும், நான்கு ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

விரைவாக அலுவலகம் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் அவர்கள் அந்த ஊழியர்கள் விரைவாக வீடு செல்ல ஏதாவது ஏற்பாடு செய்துள்ளார்களா என்றா அது தான் இல்லை (நாராயண மூர்த்தி ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் அலுவலகத்தில் இருக்க கூடாது என்று பக்கம் பக்கமாக அட்வைஸ் மழை மட்டும் பொழிவார்).

8 மணிக்கு அலுவலகம் வரும் ஊழியர் எனக்கு தெரிந்து குறைந்த பட்சம் 7 - 8 மணிக்கு முன்னர் வீடு திரும்ப இயலாது. ஏனெனில் ஜடி துறையினர் பெரும்பாலோனோர் வேலை செய்வது அமெரிக்க கம்பெனிகளுக்கு. status meeting, இந்த மீட்டிங் அந்த மீட்டிங் என்று தினமும் அவர்களின் அமெரிக்க காலை நேரம் 8 மணி வரையிலாவது அவர்களின் clients அலுவலகம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதனால் ஊழியர்கள் குறைந்த பட்சம் 12 மணி நேரமாவது அலுவகத்தில் இருக்க வேண்டும். இவர்களின் அலுவலகம் பெரும்பாலும் ஊரை விட்டு வெகு தொலைவில் இருக்கும் உ.தா. Mahindra City, Electronic city. எப்படி தான் traffic இல்லை என்றாலும் அலுவலகம் செல்ல குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். எனவே ஒருவன் அலுவலகம் செல்ல காலை 6 மணிக்கு தயார் ஆக ஆரம்பித்தால் வீடு திரும்ப இரவு 9 மணியாவது ஆகும். ஒரு சில வார இறுதி நாட்களும் வேலை செய்யும் படி இருக்கும். இப்படியே போனால் அந்த ஊழியனின் சொந்த வாழ்க்கை என்ன ஆகும்?

swipe card வேலை செய்தால் “அப்பாடா இன்னிக்கு வேலை காலியானவர்களில் என்னோட பெயர் இல்லை” என்று நினைக்கும் அளவிற்கு பணி நிரந்திரமும், cost cutting என்ற பெயரில் 10 பேர் செய்யும் வேலையை 3-4 பேரை வைத்து செய்ய வைக்கும் அவலமுமே சமீபகாலமாக கணிப்பொறியாளர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுத்திவருகிறது.இந்த லட்சணத்தில் இவர்கள் ஊழியர்களின் மன உளைச்சலை குறைக்கும் வழிகளை யோசிக்காமல் இது போன்று மேலும் மேலும் அவர்களை கொத்தடிமைகள் போல் வேலை வாங்க நினைத்தால் என்னவென்று சொல்வது? பளபளப்பான அலுவலகம், நினைத்தால் onsite, ஆயிரங்களில் சம்பளம் என்று பேராசைப்பட்டதற்கு இன்னும் எதையெல்லாம் அனுபவிக்க போகிறோமோ?

Traffic நெரிசலை குறைக்க வீட்டில் இருந்து வேலை செய்ய தூண்டுதல், ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியே பஸ்,கார் வசதிகள் அளிப்பதை தவிர்த்து எல்லா நிறுவனங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த போக்குவரத்தை(Integrated transportation) அளித்தல், அரசு அளிக்கும் public transportationஜ உபயோகிக்க ஊக்கப்படுத்துதல், carpooling என்று பல அருமையான யோசனைகள் இருக்கும் பொழுது ஊழியர்களை மேல் மேலும் exploit செய்ய நினைக்கும் இவர்களுக்கு எப்படியெல்லாம் யோசனை தோன்றுகிறது பாருங்க.

இந்த மொக்கை திட்டத்துக்கு stanford university, background research பஸ்களின் எண்ணிக்கை என்று டெக்னிகல் முலாம் பூசி அதை ஒரு அருமையான திட்டமாக்க முயற்சி செய்து இருக்காங்கன்னு
இங்க போயி பாருங்க.

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009