Wednesday, January 21, 2009

இனி யாராவது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னால்…


அடுத்த சூப்பர் ஸ்டார்: அமீர் போட்ட போடு!

ஒரு படத்தில் நடித்துவிட்டு தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் அடிக்கலாம் போலுள்ளது என்கிறார் அதிரடி இயக்குநர் அமீர்.

ஒருவழியாக யோகி படப்பிடிப்பிலிருந்து மீண்டு வந்துவிட்டார் அமீர். பருத்தி வீரனுக்குப் பிறகு அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் கண்ணபிரான். பருத்தி வீரனை விட நூறு மடங்கு பவர்ஃபுல் படம் இது என அமீரே சிலாகித்துச் சொன்ன திரைக்கதை இந்தப் படத்தினுடையது.

ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு வீம்பில் யோகி படத்தில் நடிக்கப் போய்விட்டார் அமீர்.

சுப்பிரமணியம் சிவா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்போது தனது கண்ணபிரானை தான் நினைத்தபடி வார்த்தெடுக்கும் பணியில் இறங்கிவிட்டார் அமீர்.

இந்தப் படத்தில் நடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லையாம். ஏற்கெனவே முடிவு செய்தபடி ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். ரவியின் தந்தை நிர்வகிக்கும் ஜெயம் கம்பெனியே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இந்தப் படம் குறித்து அமீர் இப்படிக் கூறுகிறார்:

கண்ணபிரான் தமிழ் சினிமாவை இன்னொரு பரிமாணத்தில் காட்டும். அதற்கு மேல் ஏதாவது சொன்னால் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும்.

எங்களைப் போன்றவர்கள் நடித்தாலும் படம் பெரிய வெற்றி பெறும் என்பதை உணர்த்தவே யோகியில் நடித்தேன். தொடர்ந்து நடிகர்களின் பின்னால் இயக்குநர்கள் ஓடிக் கொண்டே இருப்பதை தவிர்க்கவும்தான் இந்த முடிவு.

இனி யாராவது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னால்…

ஒரு படம் நடித்து வெளிவந்தாலே, அவரவர் தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அந்த நிலைக்கு வர ரஜினி சார் எத்தனை கஷ்டங்கள் பட்டிருப்பார், எத்தனை அவமானங்களைத் தாங்கியிருப்பார். எத்தனை ஆண்டுகள் பிடித்தது… ஆனால் சும்மா கையை காலை ஆட்டிக்கிட்டு, அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்னு சொல்றவங்களைப் பார்த்தால் அடித்துவிடலாம் போல் உள்ளது.

முதலில் ரஜினி அளவுக்கு சாதனை பண்ணுங்க. நிரூபிச்சுக் காட்டுங்க. மக்களே பார்த்து தருவார்கள் ஏதாவது ஒரு பட்டத்தை. உங்களுக்கு நீங்களே ஏன் சூட்டிக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்?

இவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவே என்னைப் போன்ற இயக்குநர்கள் எல்லாம் நடிப்பில் குதித்திருகிகறார்கள். மக்களுக்குப் பிடித்திருந்தால் போதும். வேறு எந்த விமர்சனம் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை, என்கிறார் அமீர்.

அப்படிப் போடுங்க!

நன்றி - என்வழி

Related Posts



2 கருத்துக்கள்:

Anonymous said...

அப்படி சொல்லுங்க அமீர் அண்ணா...

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகமுடியுமா?

நல்ல ஒரு சூடு எல்லாருக்கும்.....

சிம்மபாரதி, துபாய்

Anonymous said...

nanba simma barathi,

nalama?

-mujib, dubai

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009