ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை...
முதலாளி : மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...!
சரக்கு மாஸ்டர் : கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க...
முதலாளி : சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்..
மாஸ்டர் ஒருவரிடன் சென்று....
மாஸ்டர் : ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க...
அவன் : நான் PM ஆ இருந்தேன்..
மாஸ்டர் : என்னது Prime Minister ராவா...????
அவன் : இல்லைங்க.... Project Manager ரா இருந்தேன்.
மாஸ்டர் : அப்படி முழுசா சொல்லு.... சூப்பர்வைசர் வேலை தானே....
PM : இல்லைங்க... வேலை செய்யுறதுக்கு எத்தன பேரு வேணும், எவ்வளவு நேரம் எடுக்கும்னு ப்ளான் போட்டு கொடுத்து... அவங்க வேலை செய்யுறத கவனிக்குற வேலைங்க....
மாஸ்டர் : அதுதான்.... சூப்பர்வைசர் வேலை...
PM : நாங்க ப்ளான் போட்டு.... அதுக்கு தகுந்தா மாதிரி மத்தவங்கள வேலை செய்ய சொல்லுவேன்.
மாஸ்டர் : நாங்களும் திட்டம் போடுவோம். ஒரு நாளைக்கு எத்தன பேரு வருவாங்க..வந்தவங்க கணக்கு ஜாஸ்தியான எப்படி சமாளிக்கனும். காய்கறி வெட்டுறதுக்கு எத்தன பேரு. நல்லா சமைக்கிறாங்களா.... இப்படி திட்டம் போட்டு தான் சமைக்கவே ஆரம்பிப்போம்.
PM : இது பேரு தான் ப்ளானிங்....
மாஸ்டர் : அடபாவி.... நாங்க எல்லாம் ப்ளான் பண்ணி எல்லா வேலையும் செய்யுறோம். ப்ளான் மட்டும் பண்ணுறத்க்கு தனி ஆளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திட்டு இருக்காங்க...
ப்ராஜக்ட் மேனேஜரிடம் பேசிய பிறகு மாஸ்டர் கிட்சனுக்கு சென்றார். அங்கு ஒரு டெவலப்பர் நீண்ட நேரமாக சமைத்துக் கொண்டு இருந்தான்.
மாஸ்டர் : தம்பி... இத்தன நேரமா சமைக்காம கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுற....
டெவலப்பர் : சாம்பார் ரொம்ப சப்புனு இருக்கு. என்ன பண்ணனும்னு கூகுல் அடிச்சு பார்த்திட்டு இருக்கேன்.
மாஸ்டர் : சப்புனு இருந்தா உப்பு போடு... கூகுல் வந்து என்னடா பண்ண போது....
டெவலப்பர் : யாராவது சாம்பார் வச்சிருந்தா.... டௌன்லோட் பண்ணி கொஞ்சம் மாத்தி கொடுக்கலாம்னு நினைச்சேன்,
மாஸ்டர் : விட்டா அடுப்பு பத்த வைக்கிறது கூட கூகுள் அடிச்சு பார்ப்ப போலிருக்கு....
இவனிடம் பேசி வேலைக்காகது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒருவன் எல்லா சாப்பாட்டையும் உற்று பார்த்து கொண்டு இருப்பதை கவனித்தான்.
மாஸ்டர் : நீ என்னவா இருக்க....?
அவன் : டெஸ்டரா இருக்கேன்.
மாஸ்டர் : ஏன் எல்லா சாப்பாட்ட பார்த்திட்டு இருக்க...
டெஸ்டர் : கலர் பார்க்குறேன்.
மாஸ்டர் : எதுக்கு...??
டெஸ்டர் : இத Sanity Testingனு சொல்லுவாங்க...
அந்த டெஸ்டர் சாம்பரை சுவைத்து பார்த்தான்.
மாஸ்டர் : இதுக்கு என்ன பேரு....??
டெஸ்டர் : Functional Testingனு சொல்லுவோம். சாம்பர்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு...
டெவலப்பர் : நான் சரியா தான் போட்டேன்.
டெஸ்டர் : நீ சாப்பிட்டு பாரு... உப்பு எவ்வளவு ஜாஸ்தினு....
மாஸ்டர் : சரி...சரி... உங்க சண்டைய விடுங்க... நான் சரி பண்ணுறேன்.
சாம்பாரில் உப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த மாஸ்டர் கொஞ்சம் பருப்பு போட்டு சாம்பாரில் இருக்கும் உப்பை சரி செய்கிறார். இப்போது, டெஸ்டர் ரசத்தை ருசித்து பார்க்கிறான்.
டெஸ்டர் : ரொம்ப காரம்மா இருக்கு...
மாஸ்டர் தண்ணீர் ஊற்றி சரி செய்கிறார்.
டெஸ்டர் : இப்ப நல்லா இருக்கு...
டெஸ்டர் மீண்டும் சாம்பரை சுவைத்து பார்க்கிறான்.
மாஸ்டர் : எதுக்கு மறுபடியும் சாம்பார டேஸ்ட் பண்ணுற...
டெஸ்டர் : இத நாங்க Regression Testingனு சொல்லுவோம்.
மாஸ்டர் : அடபாவி.... டெஸ்டிங் பண்ணுறனு சொல்லி பாதி சாம்பர், ரசத்த சாப்பிடியடா....
மாலையானதும் முதலாளி வந்து கல்லாவை பார்க்கிறார். ஒரு பைசா கூட இல்லாமல் காலியாக இருந்தது.
முதலாளி : என்ன மாஸ்டர் ! கஸ்டமர் யாரும் வரலையா....
மாஸ்டர் : இன்னும் சமையல முடிக்கலைங்க.... டெஸ்டர் மட்டும் அண்டா அண்டாவா சாம்பர், ரசம் குடிச்சிட்டான்.
ஹோட்டல் முதலாளி ஸ்வீட் செய்திருப்பதை பார்க்கிறார்.
முதலாளி : ஸ்வீட் இருக்குல... அது ஏன் கட முன்னாடி வைக்கல....?
மாஸ்டர் : ஸ்வீட் பொறுப்ப... 'SQA' கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருக்குனு சொல்லி.... கடைசி வரைக்கும் எந்த ஸ்வீட்டையும் கஸ்டம்மர் கண்ணுல காட்டாம உள்ளையே வச்சிட்டு இருந்தாங்க...
முதலாளி : $$@#$@##$
( ஐ.டி ஊழியர்கள் யாரும் என்னை திட்ட வேண்டாம். நானும் ஒரு ஐ.டி. ஊழியன் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். )
Friday, January 30, 2009
I.T. Engineers in Hotel - ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?
சிவா மனசுல சக்தி mp3 டவுன்லோட்

Actors : Jeeva, Anuya
Director : M. Rajesh
Music Director : Yuvan Shankar Raja
Producer : Vikatan Talkies
Oru Kal: Yuvan Shankar Raja
MGR Ilenge: Harichandran & Co
Oru Adangapidari: Shankar Mahadevan & Shwetha
Eppadio Maatikiten: Clinton & Nruthya
Oru Kal: Adnan Samy
Thithikum Theeai: K.K & Shwetha
Oru Paarvaiyil: Ranjith
More Details on Siva Manasula Sakthi
Siva Manasula Sakthi (S.M.S) mp3 download - சிவா மனசுல சக்தி mp3 டவுன்லோட்

Actors : Jeeva, Anuya
Director : M. Rajesh
Music Director : Yuvan Shankar Raja
Producer : Vikatan Talkies
Oru Kal: Yuvan Shankar Raja
MGR Ilenge: Harichandran & Co
Oru Adangapidari: Shankar Mahadevan & Shwetha
Eppadio Maatikiten: Clinton & Nruthya
Oru Kal: Adnan Samy
Thithikum Theeai: K.K & Shwetha
Oru Paarvaiyil: Ranjith
More Details on Siva Manasula Sakthi
Wednesday, January 28, 2009
Sun Tv - Padikathavan - சன்டிவியின் "வெற்றிப்படம் படிக்காதவன்"! சன்டிவியின் தந்திரங்கள்
கடந்த பதினைந்து நாட்களாக சன்டிவியின் முக்கிய தலைப்பு செய்திகள் இவைதான்,
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளும் ரசிகர்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று விட்டன.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளில் பாடல்கள் காட்சிகளின் போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து ஆனந்தமாக நடனமாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்கிற்குச் சென்றாலும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள்தான் எதிரொலிக்கின்றன.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தில் நடித்ததால் நடிகர் தனுஷிற்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் அதிகரித்து விட்டடது, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஏதாவது ஒரு வகையில் "வெற்றிப்படம் படிக்காதவன்" பெயர் தினந்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது.
சன்டிவியில் தொடர்ந்து மலிவான விளம்பர நோக்கில் திணிக்கப்படும் இப்படிப்பட்ட செய்திகளும், சன்டிவியின் நிகழ்ச்சிகளின் இடையே திணிக்கப்படும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் விளம்பரங்களும் பாமரர் முதல் படித்தவர் வரையிலான எல்லாத் தரப்பு மக்களையும் முகம் சுளிக்கச் செய்வதுதான் உண்மை.
இவை எல்லாம் எங்கே தொடங்கின என்று பார்த்தால்,
ஓராண்டுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துடன் ஏற்பட்ட போட்டியில் புதிய திரைப்படங்களை வாங்க முடியாமல் தோற்றுப் போன சன்டிவி நிறுவனம், அதைச் சமாளிக்க எடுத்த முயற்சிதான் சன் பிக்சர்ஸ்.
ஏற்கனவே தயாரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படங்களை விலைக்கு வாங்கி வெளியிடத் தீர்மானித்த சன்டிவி நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக சன்பிக்சர்ஸ் மூலமாக கிட்டத்தட்ட ஒன்பது படங்களை விலைக்கு வாங்கி அதற்கான அறிவிப்பை ஒரு பெரும் விழாவாக நடத்தி வெளியிட்ட போதே திரை உலகில் பலவாறான குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
சண்டிவியானது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் தொலைக்கட்சிகளில் முதல் இடத்தைப் பெற்றுத் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டது மட்டுமில்லாமல் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஏகபோகமாகச் செயல்பட்டு வருகிறது.
சன்டிவி, தான் தொடங்கப்பட்டதில் இருந்து இத்தனை ஆண்டுகளில் தனக்குப் போட்டியாக எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தனது ஊடக ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட மிகப்பெரும் ஊடக பலமும், பணபலமும் கொண்ட சன் குழுமம் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக அறிவித்த போதே, திரைத்துறையில் உள்ள தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கக் கூடிய சிலர் இதனால் பல விபரீத விளைவுகள் ஏற்படப் போகின்றன என்று எச்சரித்தனர்.
ஏனெனில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதன்மையான தொலைக்காட்சியாக கோலோச்சும் சன்டிவியின் தயவு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் முக்கியமானதாகப் போய்விட்டது. முதலில் திரைப்படங்களை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட சன்டிவி, பின்னர் தான் மனது வைத்தால் மட்டுமே திரைப்படங்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டது.
சன்டிவியில் பாடல்கள், காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மட்டுமே அதிகமான மக்களைச் சென்றடைந்து வெற்றி பெற முடியும் என்ற நிலையை சன்டிவி உருவாக்கி விட்டது.
இப்படிப்பட்ட சூழலில் சன்டிவிக்கு ஒட்டுமொத்த தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமைகள் கொடுக்கப்படாத திரைப்படங்களின் பாடல்கள், காட்சிகள் மற்றும் அந்தத் திரைப்படங்களின் விளம்பரங்கள் சன்டிவியில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும்,
திரை விமர்சனம் மற்றும் பட வரிசைகளில் இக்தகைய திரைப்படங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் பல ஆண்டுகளாகவே சன்டிவியின் மீது குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் எழுந்தன.
காக்க காக்க, சச்சின், தவமாய்த் தவமிருந்து, மும்பை எக்ஸ்ப்ரஸ், மாயக் கண்ணாடி,
தற்போது ரஜினியின் குசேலன் உள்ளிட்ட எத்தனயோ திரைப்படங்களின் வெற்றியை சன்டிவியின் இருட்டடிப்பு பாதித்ததாக நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் சன்டிவியே நேரடியாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தால் பின்னர் மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு சன்டிவியில் என்ன மாதிரியான மரியாதை தரப்படும் என்பதே திரைத்துறையினரின் அச்சத்திற்குக் காரணம்.
இப்போது சன் பிக்சர்ஸ் மூலமாகத் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. திரைத்துறையினர் ஏற்கனவே எதை நினைத்து பயந்தனரோ அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.
சன்டிவியின் மூலமாகத் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமே சன்டிவியிலும், சன் குழுமத்தின் மற்ற எல்லா அலைவரிசைகளிலும் தற்போது ஒளிபரப்பப் படுகிறது. மற்ற எல்லாத் திரைப்படங்களும் முடிந்த அளவு இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
தற்போது சன்டிவியினர் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அத் திரைப்படங்களை வெற்றி பெறச் செய்யவும் தங்களது முழு ஊடக பலத்தையும் உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டனர்.
சன்டிவியினர் தங்களது சொந்த ஊடக பலத்தையும் - தங்களின் சொந்த பண பலத்தையும் - தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்திற்குப் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், இவர்களின் செயல்கள் எல்லை மீறிப் போகும் போது சுட்டிக் காட்டாமல் இருப்பதும் தவறுதானே.
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் போது மற்ற திரைப்படங்களுக்குத் தரப்பட வேண்டிய குறைந்த பட்ச முக்கியத்துவத்தையாவது தர வேண்டும் இல்லையா?
திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களில் குறைந்தபட்ச நடுநிலையாவது பின்பற்றப்பட வேண்டும் இல்லையா?
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களின் பாடல்களைக் கூட ஒளிபரப்ப மறுப்பது தவறில்லையா?
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களை ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்வது என்பது சர்வாதிகார மனப்பான்மையின் வெளிப்பாடுதானே,
தன்னுடைய மித மிஞ்சிய ஊடக பலத்தை வைத்துக் கொண்டு தனது புதிய தொழிலில் முன்னேற முயல்வது என்பது தவறான செயல் இல்லை,
ஆனால் தனது ஊடக பலத்தால் தனது சகபோட்டியாளர்களை அழித்தொழிக்க முனைவது என்பது முறையான காரியம் இல்லையே,
தொழிலில் வரும் போட்டிகளை சமாளித்து சக போட்டியாளர்களுடன் கடுமையாக போட்டியிட்டு முன்னேறி முதலிடம் பெற முயல வேண்டுமே தவிர, தனது எல்லாப் போட்டியாளர்களையும் நசுக்கிப் பின்னர் தனக்குப் போட்டியே இல்லாத நிலையை உருவாக்கிக் கொண்டு தனது வெற்றிக் கொடியை நாட்ட முயல்வது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்றே தோன்றுகிறது................. அறிவிழி
Ayan video song download - அயன் வீடியோ பாடல்கள் டவுன்லோட்
அயன் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்க
ராபிட் சேர் டவுன்லோட் - Rapidshare Download
1. Hey Super Nova
2. Pala Palakkira
3. Vizhi Moodi
4. Nenje Nenje
5. Honey Honey
6. Oyaayiyae Yaa
நெஞ்சே நெஞ்சே - Nenje Nenje
பல பல - Pala Pala
VIZHI MOODI


NENJE NENJE


HONEY HONEY


PALA PALAKKIRA


OYYAAYIYE YAA


Saturday, January 24, 2009
Junior Superstar Dhanush - தனுஷ் ‘இளைய சூப்பர் ஸ்டாரா?’

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தனது படம் ஓடும் தியேட்டர்களுக்கு விசிட் அடித்த தனுஷ் எல்லா தியேட்டர்களிலும் தவறாமல் பேசி வரும் விஷயம் பட்டப் பெயர்.
வெறுமனே ‘தனுஷ் நடிக்கும்’ என்று போடுவது நன்றாக இல்லை என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களாம்.
இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி ஒரு ரசிகர் உண்ணாவிரதமே ஆரம்பித்துவிட்டாராம். தனுஷ்தான் நேரில் போய் ஒரு மணிநேரம் அவரைச் சமாதானம் செய்தாராம்!
எனவே இனி இளைய சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தைப் போட்டுக் கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.
அநேகமாக, இது மாலை நேர்த்து மயக்கம் படத்திலிருந்து தன்னை இளைய சூப்பர் ஸ்டார் என தனுஷ் அழைத்துக் கொள்ளக் கூடும்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் பேசியிருப்பதாவது:
இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நான் பயன்படுத்த வேண்டும் என அனைத்து ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். அதை ஏற்க நிறைய தகுதி வேண்டும். உங்களது கோரிக்கையை ஏற்று அந்த பட்டத்தை போடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பட்டத்தை எனக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காகவாவது போட்டுக் கொள்ள பரிசீலிக்கிறேன்.
ரஜினி சாரின் சில படங்களுடைய தலைப்புகள் என்னிடம் உள்ளது உண்மைதான். அந்த விஷயத்தில் அவர் தலையிடுவதே இல்லை. உடனடியாக எனக்குப் பிடித்த அவரது படத்தின் தலைப்பு ஒன்றைப் பயன்படுத்த உள்ளேன். ஆனால் அது என்ன தலைப்பு என்று இப்போது கூற மாட்டேன், சர்ப்ரைஸ்..” என்றார்.
நன்றி - என்வழி.காம்
Slumdog millionaire Review in Tamil - ஷ்லம்டாக் மில்லினியர் - திரைவிமர்சனம்

இந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ.ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றியும் , அவர் இசை அமைத்த Slumdog millionire பற்றியுமான அதிகபடியான தேடல்கள். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் படம், குறைந்தது 8 விருதுகளையாவது அள்ளிவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த அளவு தரத்துடன் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது உள்பட நான்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.அமைதியாக வந்த அந்த படம் எ.ஆர். ரஹுமான் ஆல் ஏக எதிர்பார்ப்புக்களை உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கிறது. அது அவருக்கு மட்டுமேயான தனித்துவமான திறமையால் சாத்தியமாகி இருக்கிறது , அவரின் திறமையை குறைத்துக் கூறுவது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்த படம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளையும் , அது தொடர்பாக என் கேள்விகளையும் பதிவு செய்வதே எனது நோக்கம்.
ஹரன் பார்வையில் , இந்த படம் இந்தியாவின் , அதன் மக்களின் மிக அசிங்கமான ஒரு மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்தியர்கள் மட்டும் பார்த்து , தெரிந்து, மறைத்து வந்த பல விடயங்கள் இந்த படம் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு வரப்போகிறது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன் , ஒரு உபகண்டமாக , உலகின் அடுத்த வல்லரசு எண்டு சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது. மிக திறமையான இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்குதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவரின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதி இன்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், இன ரீதியான சண்டைகள் , வேட்டுகுத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம் , அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டுவது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. இதன் காரணமாகவோ என்னவோ படத்தொகுப்பாளர் , இந்தியரான ரெசுல் பூக்குட்டி என்பவரது பெயரும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை கவ்ரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அறிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.

படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கத பாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்பட இல்லை. ஹீரோவை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் நெகடிவ் ஆக இருப்பதற்கு காரணம் என்ன ...? அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அணில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும். சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொரூரம்? இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனர் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திராந்கலிநூடாக தான் கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுகிறார். அந்த காட்சிகள் கூட இந்திய போலீஸ் காரரின் கேவலத்தை நன்கு பறைசாற்றுகிறார் இயக்குனர். இப்படியான காட்சி அமைப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு கட்டாயம் தேவை தானா?
அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள், மற்றைய நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள் ?
இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார் படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்? வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்றைய இந்திய நகரங்கள் பற்றி ? இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழுகிறது . ஆனாலும் இயக்குனர் பொய்யான ஒன்றை கட்டவில்லை, நிஜமான பல விடயங்களையே கட்ட்சிப்படுத்தியிருக்கிறார். நாம் சென்று அமெரிக்க போன்ற நாடுகளின் மக்களையும் , மனிதர்களையும் கேவலமாக பிரதிபலித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா ? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?
இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் ஒன்றுக்கும் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய எதாதிபதியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். எனவே விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலிய படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெற்றிருக்கிறது. இனிமேல் கமல் ஹசன் போன்றோரும் இந்தியாவை விமர்சித்து படம் நடித்தால் ஆஸ்கார் விருதுகள் வெகு தொலைவில் இருக்காது.
ஸ்லம்டாக் மில்லியனர் தமிழில் வருகிறது!!
ஆஸ்கர் விருது.... ரஹ்மானுக்கு எதிராக சதி?
Friday, January 23, 2009
A.R.Rahman in Oscar Awards - ஆஸ்கர் விருது.... ரஹ்மானுக்கு எதிராக சதி?

ஏஆர் ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருது கிளிக் செய்க
"யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா?
கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதற்காக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா'
இந்தியாவின் சந்தோஷம்!
இந்தியாவின் ஆனந்தம்!!
இந்தியாவின் பேருணர்ச்சி!!!
ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.
அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது. A.R.Rahmanஎல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்பாக இந்த செய்தியை வெளியிட்டன.
1944 ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் 66 ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது பற்றி சொல்பவர்கள் 'ஆஸ்கர் விருதுக்கு முந்தைய அடையாளம் இது' என்றே பெருமை பேசுகிறார்கள். இந்த முறை பிரிட்டிஷ் இயக்குனர் டேனி போயல் இயக்கிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் இசையமைத்தற்காக பெற்றிருக்கிறார் ரஹ்மான்.
ஆனால் இவ்வளவு சந்தோஷமும், திருமங்கலம் வேட்டு சத்தத்தில் அமுங்கிப் போனதுதான் துரதிருஷ்டம். தமிழ் சேனல்களில் பலவற்றை ஆக்ரமித்துக் கொண்டது இடைத்தேர்தல் முடிவும், அது குறித்த அலசல்களும்தான். அட, இதுவாவது போகட்டும். விருதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்திறங்கிய ரஹ்மானை வரவேற்க தமிழ் திரையுலகத்தை சேர்ந்த வி.ஐ.பிகள் ஒருவருமே போகவில்லை. நல்லவேளையாக ரஹ்மான் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள். நாதஸ்வரம், மேளதாளத்தோடு விருது ராஜாவை அவரது வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அன்று நள்ளிரவு வரை அந்த தெருவே திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஒரு தெருவோடு முடிந்து போகிற கொண்டாட்டமா இது?

இருந்தாலும் சற்று தாமதமாகதான் திரையுலகத்தை சேர்ந்தவர்களும், அரசியல் Golden Globe Awardதலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ தலைவர் அத்வானி, அபிஷேக் பச்சன், ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள். கை நிறைய மலர் கொத்துகளோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள் நடிகர் பார்த்திபனும், இயக்குனர் கதிரும். தமிழக முதல்வர் கலைஞரும், அதிமுக தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துகளை அறிக்கையாகவே வெளியிட்டார்கள்.
தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது. (மற்ற இசையமைப்பாளர்கள் யாருக்கும் மனசே வரவில்லை போலிருக்கிறது)
இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும், தன்னை சூழ்ந்து கொண்ட ஆங்கில Golden Globe Awardபத்திரிகையாளர்களிடம் ரஹ்மான் கேட்ட ஒரே கேள்வி "தமிழ் பத்திரிகைகளிலிருந்து யாரும் வரலையா?" என்பதுதான். என்றாலும், மறுநாள் தமிழ் பத்திரிகைகள் சார்பாக சில நிருபர்களை சந்தித்தார் இசைப்புயல்! ஏராளமான கேள்விகள். எல்லாவற்றுக்கும் தனது இசையைப் போலவே இனிக்க இனிக்க பதில் சொன்னார் தனக்கு பின்னால் நடக்கும் கசப்பான ஒரு விஷயத்தை ஜீரணித்துக் கொண்டே! மறந்தும் கூட இவர்களிடம் அதுபற்றி வாய் திறக்காத ரஹ்மான் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் வேதனையோடு குறிப்பிட்டாராம் இப்படி...

தயங்கி தயங்கி இந்த வார்த்தையை அப்படியே நம் காதிலும் போட்டார் நண்பர். எந்த Slumdog Millionaireமாதிரியான புரளிகள் என்பது குறித்து மேலும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அதே நண்பர். "ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட கோல்டன் குளோப் விருது, ஒரிஜனல் இசைக்கான விருது. ஆனால், ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு ரஹ்மான் ஒரிஜனலாக இசையமைத்தது ஐந்தே டிராக்குகள்தான் என்றும், மற்ற டிராக்குகள் எல்லாம் ஏற்கனவே அவரால் பயன்படுத்தப்பட்டவை" என்றும் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் எல்லா டிராக்குகளும் ஒரிஜனலாக இந்த படத்திற்கென்றே உருவாக்கப்பட்டது. அதுவும் லண்டனில் ரஹ்மானுக்கு சொந்தமான வீட்டிலிருக்கும் இசைக்கூடத்தில் இருபதே நாட்களில் உருவாக்கப்பட்டது" என்று கவலையோடு சொன்னார் அந்த நண்பர்.
ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்கு இந்த படத்தை அனுப்பும்போது படத்திற்கு விருது A.R.Rahmanகிடைத்தாலும், இசைக்கோ, இசையமைப்பாளருக்கோ விருது கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு கிளப்பி விடப்பட்ட வதந்திதானாம் இது. ஏனென்றால் ஒரிஜனல் இசை டிராக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே விருது கமிட்டியால் தேர்வு செய்யப்படுவார் ரஹ்மான். மீடியாக்களின் கருத்தும் இந்த கமிட்டியால் பரிசீலிக்கப்படும் என்பதால், இதை திட்டமிட்ட சதியாகவே கருதுகிறாராம் ரஹ்மான்!
கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் வென்றவுடன் முதலில் கொண்டாடிய இதே மும்பை மீடியாக்கள் மூலமாகதான் இப்படி ஒரு தகவலும் பரப்பப்படுகிறதாம். சிஎன்என் சேனலில் ராஜிவ் மசந்த் என்பவர் ரஹ்மானின் கோல்டன் குளோப் விருது குறித்து எழுப்பிய விமர்சனங்களில்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டு பகிரங்கமாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிற சேனல்களும் இதே கருத்தை வழி மொழிய துவங்கியிருக்கிறார்களாம்.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், யாரோ திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்புகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறாராம் ரஹ்மான்.
ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக்... காதல் கோட்டை படத்திற்காக முதன் முதலாக தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய இயக்குனர் அகத்தியனுக்கு தங்கத்தில் அடையாள அட்டை கொடுத்து கௌரவித்தது இயக்குனர்கள் சங்கம். அதுமட்டுமல்ல... பாலசந்தர், பாரதிராஜா போன்ற இரு ஜாம்பவான்களும் இருபுறமும் நின்று அவரை மலர் தூவி வரவேற்றார்கள்.
நாற்பத்தி மூன்றே வயதில், ரஹ்மான் சாதித்தது ஏராளம். இவரது ஆடியோ சிடிக்கள் இதுவரை 200 மில்லியனுக்கு மேல் விற்றிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விபரம். அகத்தியனுக்கு வழங்கியதை போல ரஹ்மானுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டால், அதுவே ஆயிரம் ஆஸ்கருக்கு சமம்!
செய்வீர்களா தோழர்களே!
டெயில் பீஸ்-
ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் குடிசைப் பகுதி மக்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் தபேஸ்வர் விஸ்வகர்மா என்ற வழக்கறிஞர். நடிகர் அனில் கபூர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை ரஹ்மானுக்கு எதிரான சதியோடு இணைத்து பார்க்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்!
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி- தமிழக அரசியல் வார இதழ்
Slumdog Millionaire in Tamil - ஸ்லம்டாக் மில்லியனர் தமிழில் வருகிறது!!
‘ஸ்லம்டாக்…’ இப்போ ‘நானும் கோட்டீஸ்வரன்’!!
விரைவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளவிருக்கும் சர்வதேசப் புகழ் ஸ்லம்டாக் மில்லியனேர் இப்போது தமிழிலும் வெளியாகிறது
‘நம்ம’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் லண்டனைச் சேர்ந்த டேனி பாய்லே இயக்கியுள்ள படம் இது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 30க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்துவிட்ட இந்தப் படம் இப்போது உலகின் மிக உயரிய திரைப்பட விருதான ஆஸ்கர் வரை போய்விட்டது.
10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் படம், குறைந்தது 8 விருதுகளையாவது அள்ளிவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த அளவு தரத்துடன் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது உள்பட நான்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.
இப்படம் இந்தியா முழுவதும் இன்று திரைக்கு வருகிறது. ஆங்கிலத்தில் இப்படம் உள்ளதால் இதை தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்துள்ளனர். தமிழில் நானும் கோடீஸ்வரன் என தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் இப்படத்துக்கான டப்பிங் உரிமையை ரூ.70 லட்சத்துக்கு பால்கன் பிலிம்ஸ் பெற்றுள்ளது.
பிப்ரவரி 6-ம் தேதி ரிலீஸ் ஆகிறது நானும் கோட்டீஸ்வரன்!
என்வழி.காம்
Satyam Raju is fraud or honest - சத்யம் ராசு நல்லவரா? கெட்டவரா? 420யா? இல்லை வள்ளலா?
சத்யம் ராமலிங்க ராசு தனது தந்தை பைர் ராசு நினைவாக ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பைர் ராசு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, அந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி வருகிறார்.
சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளை அந்தப் பகுதியல் உள்ள ஆறு மாவட்டங்களில் முனைப்புடன் செயல்படுகிறது.அந்த ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 கிராமங்களில் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளையின் மூலம் பலன் அடைந்த ஏழை மக்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சத்தைத் தாண்டும் என்பதை அறியும் போது உண்மையிலேயே வியப்பாகத்தான் இருக்கிறது.
வருமான வரி விலக்கைப் பெறுவதற்காகத் தான் இது போன்ற செயல்களில் சத்யம் ராசு ஈடு பட்டார் என்று கூறி அவரின் தொண்டுகளை நாம் எளிதில் ஒதுக்கி விடக் கூடாது. ஏனென்றால் சத்யம் ராசுவை விட பல மடங்கு வருமானம் ஈட்டும் எத்தனையோ பெரும் தொழில் அதிபர்கள் இது போன்ற தொண்டுகளைச் செய்யாமல் அதே நேரத்தில் வருமான வரியையும் கட்டாமல் தவிர்க்க என்ன செய்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம் இல்லையா?
ஆந்திர மாநிலத்தில் பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான ராமலிங்க ராசு தந்து வாழ்வில் எப்படி முன்னேறினார் என்பதைப் பார்ப்போம்,
1987 -ஆம் ஆண்டில் வெறும் 20 ஊழியர்களுடன் தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். நிறுவனத்தை ஆரம்பித்தார் ராமலிங்க ராசு.
1990 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த விற்று முதல் வெறும் ஐம்பத்தாறு லட்சம் ரூபாய் மட்டுமே.
1991-இல் சத்யம் நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு தொழில் ஒப்பந்தத்தைப் பெற்றது.
1999-இல் அமெரிக்காவின் நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்டது சத்யம் நிறுவனம். நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்ட முதல் இந்திய இணைய நிறுவனம் சத்யம்தான்.
2000-த்தில் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட உலகின் தலை சிறந்த முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 நிறுவனங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்ட பெருமையைப் பெற்றது சத்யம் நிறுவனம்.
2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனம் ஐ.எஸ்.ஒ தரச் சான்று பெற்றது.உலகிலேயே இக்தகைய தரச் சான்று பெற்ற முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் சத்யம்தான்.
2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் நியூ யார்க் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டன.
2003-ஆம் ஆண்டில் உலக வங்கிக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப சேவைகளைச் செய்யும் ஒப்பந்தம் சத்யம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டது.
2006-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருவாய் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டியது, அதுவே 2008-ஆம் ஆண்டில் இரண்டு பில்லியன் டாலர்களானது.
சத்யம் நிறுவனத்தை உலகின் முதன்மை நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற தனது லட்சியத்தாலும், எல்லை இல்லாத கனவுகளாலும், தணியாத ஆசைகளாலும் தூண்டப்பட்ட ராசுவின் தொடர் முயற்சிகளால் பெரும் வளர்ச்சி கண்டது சத்யம்.
இத்தனை முன்னேற்றங்கள் அடைந்த பின்னரும் கூட பின்னரும் எளிமையின் அடையாளமாகத்தான் இருந்தார் ராசு, அலுவலகத்திற்கு வரும் போது தனது ஊழியர்களைப் போலவே சத்யம் நிறுவன சின்னம் பொறிக்கப்பட்ட நீல நிற சட்டையைத்தான் அணிந்து வந்திருக்கிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 56 லட்சம் மதிப்புள்ளதாக இருந்த சத்யம் நிறுவனத்தை, இந்த இருபது ஆண்டுகளில் - இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக - இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றி விட்டார் ராமலிங்க ராசு.
சத்யம் ராசு தனது எந்தக் கனவுகளால் சத்யம் நிறுவனத்தை உயர்த்தினாரோ அதே கனவுகள்தான் இன்று அந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விட்டது.
எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும், பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்ற சத்யம் ராசுவின் பேராசைதான் அவரின் இன்றைய நிலைக்கு வழிவகுத்து விட்டது.
சத்யம் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திக் காட்ட வேண்டும், மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விடத் தனது நிறுவனம் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற லட்சியங்களோடு சத்யம் ராசுவின் பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற பேராசையும் சேர்ந்து கொண்ட போது அவற்றை நிறைவேற்ற அவர் குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கினார்.
2001-ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் நிறுவனத்தின் மதிப்பினை உயர்த்திக் காட்ட நிறுவனத்தின் லாபத்தை அதிகப்படுத்திக் காட்டினார்.
அதாவது சத்யம் நிறுவனம் ஈட்டிய உண்மையான லாபத்தை விட அதிகளவு லாபம் ஈட்டியதாகப் பொய்யாகக் கணக்குக் காட்டினார்.நிறுவனத்தின் லாபப் பணம் வங்கிகளில் ரொக்கக் கையிருப்பாக முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் கணக்குகள் காட்டினார்.
இந்தப் பொய்யானது கடந்த ஏழு ஆண்டுகளாக அதாவது 28 காலாண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து இன்று கிட்டத்தட்ட 8000 கோடிகளாக மாறி உள்ளது.
ஒரு வங்கியில் முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு, பின்னர் அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து, அந்தப் பணத்தையே வேறு வங்கிகளில் இதே போல முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.
வங்கிகளில் முதலீடு செய்த ஆதாரங்கள் மட்டுமே ஒவ்வொரு காலாண்டுக் கணக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.எப்போதுமே வங்கிக் கணக்குகளின் ஒட்டு மொத்த வரவு செலவுக் கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.
இதன் மூலம் தன்னிடம் இருக்கும் பணத்தைப் பல மடங்கு அதிகப்படுத்திக் காட்டி இருக்கிறார் சத்யம் ராசு.கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாயை வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து உள்ளதாக கணக்குகள் காட்டப்பட்டு உள்ளது. ஆனால் அப்படி எந்தப் பணமும் இல்லை என்பதுதான் உண்மை.
சத்யம் நிறுவனத் தலைவர் ராசுவை மட்டும் இந்த மோசடியில் குற்றம் சொல்வது சரியாக இருக்காது, சத்யம் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய நிதி மோசடிகளால் தங்கள் பணத்தை இழந்து உள்ள முதலீட்டாளர்களும் இந்த மோசடிக்குப் பொறுப்புதான்.
தாங்கள் முதலீடு செய்துள்ள ,
சத்யம் நிறுவனம் காட்டிய ஒவ்வொரு காலாண்டு கணக்கிலும் அந்த நிறுவனத்தின் லாபத்திற்கும், இதே தகவல் தொழில் நுட்பத் துறைகள் உள்ள மற்ற நிறுவனங்கள் இதே காலாண்டுகளில் ஈட்டிய லாபத்திற்கும் இருந்த வேறுபாடுகள் என்ன? எவ்வளவு? ஏன்?
இவ்வளவு பணத்தை(8000 கோடிகள்) எதற்காக ரொக்கக் கையிருப்பாக வெறுமனே வைத்திருக்க வேண்டும்,
அந்தப் பணத்தைக் கொண்டு தொழிலை மேலும் விரிவு படுத்தலாமே,
வங்கிகளில் 8000 கோடிகளை வங்கியில் வைப்பு நிதியாக வைத்துள்ள ஒரு நிறுவனம் ஏன் பங்கு சந்தைகளில் தனது பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதன் மூலம் நிதி திரட்ட முனைய வேண்டும்,
திடீரென நிறுவனத்தின் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் எதனால் ஏற்பட்டன?
2007 ஆம் ஆண்டில் உலக வங்கியின் ஒப்பந்தத்தைப் பெற சத்யம் நிறுவனம் செய்த முறைகேடுகள் என்ன?
குறிப்பிடத் தகுந்த லாபத்தில் இயங்காத மைத்தாஸ் நிறுவனத்தை சத்யம் நிறுவனத்தின் மிகப் பெரும் நிதியைக் கொண்டு திடீரென வாங்க முற்பட்டது ஏன்?
இது போன்ற எந்தக் கேள்விகளையும் கேட்காமல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமலும் மெத்தனமாக இருந்த முதலீட்டாளர்களும்,
ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்த இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்காமல் இருந்த மத்திய மாநில அரசுகளும்,
இவற்றை எல்லாம் கண்க்கனிக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டுள்ள பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமும் இந்த மோசடிக்கு காரணம்தானே.
ஆந்திர நடுத்தரவர்க்கப் பட்டதாரி இளைஞர்களின் இதயத்தில் வழிகாட்டியாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகச் செய்த மக்கள் பணிகள் மூலமாக மக்கள் தொண்டனாகவும், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அவ்வப்போது கூறிய அறிவுரைகளால் பெரும் அறிவு ஜீவியாகவும் அறியப்பட்டு இருந்த சத்யம் ராமலிங்க ராசு தனது தணியாத பேராசைகளால் இன்று மோசடிப் பேர்வழி என்று பெயர் எடுத்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அடைக்கப் பட்டு உள்ளார்.
தனது இந்த நிலைக்குக் காரணம் என்ன? தனது தவறுகள் எங்கே ஆரம்பித்தன? எந்தத் தவறுகளைத் தன்னால் தவிர்த்திருக்க முடியும்? எந்தத் தவறுகளைத் தவிர்த்திருக்க முடியாது? என்பதை எல்லாம் ராமலிங்க ராசு இப்போது சிறைக்குள்ளே யோசித்துக் கொண்டிருப்பாரோ என்னவோ?
நன்றி - அறிவிழி
Menon visit spoils Srilanka - வீணாய்ப் போனதா மேனன் விசிட்
முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 பேருக்கு மேல் காயம். எஞ்சியவர்கள் பின் வாங்கிச் சிதறியோடினார்கள்.அதற்கடுத்த நாள் புலிகள் இல்லாத காட்டுப் பகுதிக்குள் புகுந்து `படகு கட்டும்தளம் ஒன்றைக் கைப்பற்றி விட்டோம்' என்று ராணுவம் அறிவித்திருப்பதை வெறும் பகடியாகவே கருதுகிறார்கள் புலிகள்.
இதற்கிடையே ``முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் ராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது'' என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
ஈழத்தின் தற்போதைய கள நிலவரம்தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். ``நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை. புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை ராணுவத்திற்கும் இருக்கிறது'' என்றனர் அவர்கள்.
நிலைமை இப்படியிருக்க ```யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்' என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது'' என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.
பரபரப்பான இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?
``கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய ராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவசங்கர மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.''
புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?
``அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது''.
கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்'. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்' என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?
``கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்''.
நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்' என்று கருணா கூறியிருக்கிறாரே?
``யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் ரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
தமிழ் தேசிய ராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் ராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசப்படை களின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.''
`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்' என்கிறாரே கருணா? அப்படியா?
``இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.''
`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை' என்று கருணா கூறியிருப்பது உண்மையா?
``தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.''
`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்' என்று கருணா கூறியிருப்பது பற்றி.....?
``ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.''
`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்' என்றும் கருணா கூறியிருக்கிறாரே?
``தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் ராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.''
கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?
``மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.''
முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? `ராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது' என்கிறதே ராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?
``நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.''
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
``தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.''
இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்' என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
``எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்''.
மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
``இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த ராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள ராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.''
நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்
Thursday, January 22, 2009
நான் கடவுள் - சென்சார்போர்டு, இளையராஜா விமர்சனம்
படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். "எங்க ஆர் ஓ வுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" என்ற அச்சத்தோடு பேச ஆரம்பித்தார் அவர். "நாங்க எல்லாருமே இந்த படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருந்தோம். இத்தனை நாட்கள் ஆன பிறகும், படம் பார்த்த பிரமிப்பு எங்களை விட்டு போகவே இல்லை. சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம். மற்றபடி எந்த காட்சிகளையும் வெட்டும்படி நிர்பந்திக்கவில்லை" என்றவர், படத்தின் கதையையும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.
"காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை" என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.
இளையராஜா
இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்...டென்ஷன்... ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!
மீண்டும் இசைஞானியை சந்திக்கிற வரை ஒரு பதற்றம் இருந்ததே பாலாவிடம், அதே பதற்றத்தை ரிலீஸ் நேரத்திலும் இவருக்கு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன சில இந்துத்வா அமைப்புகள்.
இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். "என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு...!"
தமிழர் ரசனை மீது ‘அவ்வளவு’ நம்பிக்கை!
தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது ஏ….க நம்பிக்கை சினிமாக்காரர்களுக்கு… இல்லாவிட்டால் தைப் பொங்கலும், தமிழ்ப் புத்தாண்டுமாய் இப்படி கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள்.
அஆஇஈ என்ற படத்தையும் சேர்த்து கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் பொங்கல் கணக்கு நான்கு படங்கள்.
இவற்றில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படத்தைத் தவிர மற்ற மூன்றும் குறைந்தபட்சம் திட்டி விமர்சனம் எழுதக்கூட அருகதையற்ற படங்கள்.
வில்லு! கொல்லு!

என்ன தைரியத்தில் இந்தப் படத்தை ‘இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்டு படம்’ என்று பீற்றிக் கொண்டார்களோ.. புரியவில்லை. ஜேம்ஸ்பாண்ட் படத்தை முன்னபின்ன பார்த்திருக்கீங்களா விஜய்?
இதையெல்லாம் பிராஸ்னனோ… டேனியல் க்ரெய்க்கோ கேள்விப்பட்டால் சொன்னவங்களை டம்மி துப்பாக்கியாலேயே சுட்டுக் ‘கொன்னு’டுவாங்க!!
வேண்டாம் தனுஷ்…

தனுஷ் இப்போது செய்துள்ள காரியம் அவர்களையெல்லாம் அவமானப்படுத்துவதற்குச் சமமானது!
ரஜினியின் படப் பெயர்கள் தனுஷுக்கே ஏகபோகச் சொத்தாக இருந்துவிட்டுப் போகட்டும். அதில் யாருக்கும் வருத்தமில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்தத் தலைப்புகளுக்கு சின்ன மரியாதை வருமளவுக்கு கதையுள்ள படங்களாக நடித்தால் நல்லது. காரணம், படிக்காதவன் என்ற அந்த தலைப்புக்காகவே போய் படம் பார்த்துவிட்டு தலையிலடித்தபடி வெளியில் வரும் பல ரசிகர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது!!
‘அதெல்லாம் முடியாது… நான் எப்போதும் ‘சுள்ளான்’தான், மாற்றிக் கொள்ள முடியாது…’ என்றால், தயவு செய்து எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை தனுஷ் மட்டுமல்ல… வேறு யாருமே வைக்க முயற்சிக்காதீர்கள் (ஜானி, இளமை ஊஞ்சலாடுகிறது, ரங்கா, முத்து போன்ற தலைப்புகள் இப்போது இவர் வசம்தான் உள்ளன என்கிறது தயாரிப்பாளர் சங்கம்!).
இந்த புதிய படிக்காதவன் படத்தின் இன்னொரு கொடுமை விவேக் என்ற வக்கிரம் பிடித்த அரைகுறை. பேசாமல் ரிட்டயர் ஆகிவிடுங்கள் விவேக்… தமிழ் சினிமா பிழைத்துப் போகட்டும்!
திரைத்துறையில் சன் டிவி போன்று சர்வாதிகாரிகளை வளரவிடுவது எத்தகைய ஆபத்து என்பதற்கு காதல்னா சும்மா இல்லை என்ற ஓரளவு நல்ல படம் வந்ததே தெரியாமல் அமுங்கிப் போனதே சான்று.

ஏஎம் ரத்னம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தும், இந்தப் படத்தில் தன் மகனுக்கு தேவையற்ற பில்டப் எதுவும் கொடுக்காமல் அவரை சாதாரண கேரக்டராக வரவைத்திருந்தார்.
ஆனால் கொடுமை பாருங்கள்… சென்னையை விட்டால் அடுத்த 100 கிமீ தூரத்துக்கு வேறு தியேட்டரில் ‘காதல்னா சும்மா இல்ல’ படத்தையே பார்க்க முடியவில்லை. அந்தளவு தியேட்டர் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள் இந்தப் படத்துக்கு.
இவர்களின் அசுர பலத்துக்கு முன்னால் யார் என்ன செய்துவிட முடியும்?
அஆஇஈ… ஏவிஎம் என்ற காலிப் பெருங்காய டப்பா(பிராஞ்ச் -2)விலிருந்து வந்துள்ள படம்… அந்த வாசனை கொஞ்சம்கூட இல்லை!
ஆக இந்தப் பொங்கல், அரசியல் தொடங்கி சினிமா வரையில் தமிழனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதாகவே வந்து போனது!
வில்லு படம் பார்த்தார் அஜீத்

படத்தை பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் விஜய்க்கும் போன் செய்து பாராட்டினாராம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தவர், ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'அசல்' படத்திற்காக விருமாண்டி ஸ்டைல் மீசை வைத்திருக்கிறார் அஜீத். அரிவாள் சைசுக்கு இருக்கும் இந்த கனத்த மீசையோடு தியேட்டருக்கு போனதால், ஒன்றிரண்டு ரசிகர்கள் உற்றுப்பார்த்தார்களே தவிர, அடையாளம் கண்டு கொள்ளவில்லையாம்.
ஒருபுறம் சம்பள பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், அசலுக்காக தனது அசல் கெட்டப்பை மாற்றிக் கொள்வதில் எந்த குறையும் வைக்கவில்லை தல!

Wednesday, January 21, 2009
நேர்மையான எம்.பி.க்கள்!
பொ.மோகன் பற்றி கீழ்க்கண்டவாறு அப்பத்திரிகை எழுதியுள்ளது.

புகைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அது டில்லியாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி சந்தோஷமாக கிளிக் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் கட்சியால் வழங்கப்பட்ட பஜாஜ் எம்80 வண்டியில்தான் இன்னும் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஒரு முறை, ரேசன் கடையில் பொருள் வாங்கிக் கொண்டு செல்லும் வழியில் வண்டி நின்று விட்டதால் இறங்கி அவரே சரி செய்ய முற்பட்டார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நாளிதழின் புகைப்படக்கலைஞர் அதைப் படம் பிடித்தார். அடுத்த நாள், முதல் பக்க புகைப்படமானது.
டில்லியில் இருக்கும்போது நாடாளுமன்றத்திற்கு நடந்து செல்வதைப் பார்க்கலாம். மூன்று முறை தேர்தலில் தோல்வியுற்று, 1999 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரான பொ.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கத்தில் தனது பணியை 1973 ஆம் ஆண்டு துவக்கினார். கடந்த சில ஆண்டுகளில் மதுரையின் வளர்ச்சிக்கு அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மதுரைக்காரர்கள் சொல்லி வருகிறார்கள்.
மதுரையில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தனது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியை இந்தத் தொகுதிகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தருகிறார். இந்தப் பணிகள் நடைபெறுவதையும் தொடர்ந்து கண்காணிக்கிறார்.
கிராமம் ஒன்றில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வந்தது. அப்பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் சிமெண்டுடன் அதிக மணலைக் கலந்து வந்தார். உங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது பாருங்கள் என்று மக்களிடம் மோகன் கூறினார். மக்களே அந்த ஒப்பந்ததாரர்களை தூக்கி எறிந்தார்கள்.
மழை பெய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் ஜோதி கணேஷ் என்ற வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் ஒரு நபர் மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு அதை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் மோகன்தான்.
யாரிடமிருந்தும் அவர் பணத்தை வாங்கியதில்லை என்பதற்கு நான் சாட்சியாகும். அவருக்கு எதிரான கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், இதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகம் குறிப்பிடுகிறார்.
நன்றி - The Sunday Indian
இனி யாராவது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னால்…
ஒரு படத்தில் நடித்துவிட்டு தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் அடிக்கலாம் போலுள்ளது என்கிறார் அதிரடி இயக்குநர் அமீர்.
ஒருவழியாக யோகி படப்பிடிப்பிலிருந்து மீண்டு வந்துவிட்டார் அமீர். பருத்தி வீரனுக்குப் பிறகு அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் கண்ணபிரான். பருத்தி வீரனை விட நூறு மடங்கு பவர்ஃபுல் படம் இது என அமீரே சிலாகித்துச் சொன்ன திரைக்கதை இந்தப் படத்தினுடையது.
ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு வீம்பில் யோகி படத்தில் நடிக்கப் போய்விட்டார் அமீர்.
சுப்பிரமணியம் சிவா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்போது தனது கண்ணபிரானை தான் நினைத்தபடி வார்த்தெடுக்கும் பணியில் இறங்கிவிட்டார் அமீர்.
இந்தப் படத்தில் நடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லையாம். ஏற்கெனவே முடிவு செய்தபடி ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். ரவியின் தந்தை நிர்வகிக்கும் ஜெயம் கம்பெனியே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
இந்தப் படம் குறித்து அமீர் இப்படிக் கூறுகிறார்:
கண்ணபிரான் தமிழ் சினிமாவை இன்னொரு பரிமாணத்தில் காட்டும். அதற்கு மேல் ஏதாவது சொன்னால் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும்.
எங்களைப் போன்றவர்கள் நடித்தாலும் படம் பெரிய வெற்றி பெறும் என்பதை உணர்த்தவே யோகியில் நடித்தேன். தொடர்ந்து நடிகர்களின் பின்னால் இயக்குநர்கள் ஓடிக் கொண்டே இருப்பதை தவிர்க்கவும்தான் இந்த முடிவு.
இனி யாராவது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னால்…
ஒரு படம் நடித்து வெளிவந்தாலே, அவரவர் தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அந்த நிலைக்கு வர ரஜினி சார் எத்தனை கஷ்டங்கள் பட்டிருப்பார், எத்தனை அவமானங்களைத் தாங்கியிருப்பார். எத்தனை ஆண்டுகள் பிடித்தது… ஆனால் சும்மா கையை காலை ஆட்டிக்கிட்டு, அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்னு சொல்றவங்களைப் பார்த்தால் அடித்துவிடலாம் போல் உள்ளது.
முதலில் ரஜினி அளவுக்கு சாதனை பண்ணுங்க. நிரூபிச்சுக் காட்டுங்க. மக்களே பார்த்து தருவார்கள் ஏதாவது ஒரு பட்டத்தை. உங்களுக்கு நீங்களே ஏன் சூட்டிக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்?
இவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவே என்னைப் போன்ற இயக்குநர்கள் எல்லாம் நடிப்பில் குதித்திருகிகறார்கள். மக்களுக்குப் பிடித்திருந்தால் போதும். வேறு எந்த விமர்சனம் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை, என்கிறார் அமீர்.
அப்படிப் போடுங்க!
நன்றி - என்வழி
ஒபாமாவின் ரூ 2.2 கோடி கார்

அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகம் செல்லும் இந்த காரில் சக்தி வாய்ந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது
புறப்பட்ட 15 வது வினாடியில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கும்
ஒரு லிட்டர் டீசலுக்கு 2.8 கி.மீ தூரம் தான் செல்லும்
இந்த காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. காரை குண்டு துளைக்காமல் இருக்க ஸ்டீல், அலுமினியம், டைட்டானியம் கலந்த தகடு பொருத்தப்பட்டுள்ளது
கண்ணி வெடி வெடித்தாலும் சேதம் ஏற்படாமல் தடுக்க 12 செ.மீ கனமான தகடு காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. கார் கதவுகள் முக்கால் அடி கனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
ஏவுகனை வீசி தாக்கினாலும் சேதமடையாத டீசல் டேங்க் காரில் பொருத்தப்பட்டுள்ளது
தீயணைப்பு கருவிகள், துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் காரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
டயர்கள் வெடித்தாலும் தொடர்ந்து காரை ஓட்டலாம்
ட்ரைவர் சி.ஐ.ஏ வால் பயிற்சி அளிக்கப்பட்டவர். தீவிரவாத தாக்குதல் உட்பட எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையிலும் வேகமாக வண்டியை ஓட்ட அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
நம்பர் பிளேட் பகுதியிலும், பக்கவாட்டிலும் இரவிலும் தெளிவாக படம் எடுக்க கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
காரில் உள்ள ஜி.பி.எஸ் கருவியின் உதவியுடன் கார் எங்கு இருக்கிறது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்கலாம்
பின் பகுதியில் உள்ள இருக்கையில் ஒபாமா உட்கார்ந்து இருப்பார். அவருக்கு முன் இன்டெர்நெட் வசதியுடன் ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. மேலும் ஒரு செயற்கைகோள் தொலைபேசியும், துணை ஜனாதிபதி மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகனுடன் உடனடியாக பேச தொலைபேசிகளும் வைக்கப்பட்டுள்ளது
ஆபத்து காலத்தில் உதவுவதற்காக ஒபாமாவின் ரத்த வகையை சேர்ந்த ரத்தமும் ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் வைக்கப்பட்டிருக்கும்
நன்றி தினகரன்
நன்றி - கிரி
Tuesday, January 20, 2009
அயன் Mp3 பாடல்கள் டவுன்லோட் செய்க

Nenje Nenje - Harris rahavendra, Mahathi Download
Oo Aayiye Aayiye - Benny Dayal, Hariharan, chinmayi Download
Pala Pala Download
Vizhi Moodi - Karthick Download
Monday, January 19, 2009
வில்லு சீறிப்பாயனுமா? விஜய்க்கு டிப்ஸ்
இது தமிழ் மசலாப் பட ரசிகர்களுக்கு மட்டும். உலக சினிமா பார்ப்பவர்கள் இந்தப் பதிவை படிக்காமல் இருப்பது நலம்.

அதிர்ச்சியில் ஆடாமல் அசையாமல் இருந்தால்.... பின்ன என்னங்க குஷ்புவை போய் ஆட வச்சீங்கன்னா எவன் பார்ப்பான்?
இதென்ன மானாட மயிலாடன்னு நினைச்சீங்களா? டி.வில பாட்டை பார்த்த எனக்கே நைட்டு சாப்பாடு இறங்கல...பாவம்
தியேட்டர்ல படத்தை பார்த்தவங்க. அப்புறம் "அன்பு வேணும்", "ஆப்பம் வேணும்" எத்தனை நாளுக்கு பாடுவீங்க,
"நீ எனக்கு சகோதரன்" "நான் உனக்கு மச்சான்" சும்மா உறவு முறை வச்சு பாட கூடாது. அப்புறம் பிரச்சனையாயிடும்.
2)ரிலீஸ் தேதி: இப்பெல்லாம் பொங்கல், தீபாவளின்னு தனுஷ் படமும் இறங்க ஆரம்பிச்சுடிச்சு. "பொல்லாதவன்" வந்து
ATMக்கு ஆப்பு வச்சுது. "யாரடி நீ மோகனி" குருவிக்கு சூடு வச்சுது. இப்ப உங்க வில்லு "படிக்காதவனை" ஓட வச்சிடும்.
அதுனால தனுஷ் படம் எப்ப இறங்குதுன்னு பார்த்துட்டு அதுக்கேத்த மாதிரி ரிலீஸ் பண்ணுங்க. அவர் வேற
நடிக்கவெல்லாம் செய்யிறாரு. அப்புறம் காசுக்கு ஆசப்பட்டு அதாவது "வீக் எண்ட் கலெக்ஷன்" பார்த்து அமெரிக்காவில
நாலு நாள் முன்னாடி ரிலீஸ் பண்ணீங்க. இப்ப என்னாச்சு? படத்தை பார்த்துட்டு அப்பவே நிறைய பேர் வில்லை
இராமன் உடைச்ச மாதிரி உடைச்சுட்டாங்க. அதைப் படிச்சுட்டு இங்க நிறைய பேர் பொங்கல் லீவுல இந்த படத்துக்கு
போக வேணாம்ன்னு முடிவெடுத்துட்டாங்க. (இல்லைன்னா மட்டும் போவோமான்னு கேட்டா நீங்க தான் உண்மையான புத்தசாலி).
3)இசை மற்றும் நடனம்: ஆமா ஏன் எல்லா பாட்டையும் தெலுங்கலிருந்தே எடுக்குறீங்க??? வேற மாநிலமே உங்க
காதுக்கு கேக்கலையா?. நம்ம ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் தெலுங்கு தான். உங்க பாட்டை கேட்டாலே இது தெலுங்கு
பாட்டுடான்னு உடனே சொல்லிடுவாங்க. பாடல்கள் ஹிட்டானாலே படம் ஹிட்டாயிடும்ன்னு நினைப்பா உங்களுக்கு???
சரி முன்னவாவது டான்ஸ் நல்லா ஆடிகிட்டு இருந்தீங்க. இப்ப என்னாச்சு? வர வர உங்க டான்ஸ் சகிக்கல.
இனிமே உங்க இசையமைப்பாளர்கிட்ட சொல்லி சொந்தமா இசையமைக்க சொல்லுங்க.
4)கதைக்களங்கள்: முன்னெல்லாம் தெலுங்கிலேருந்து கதையை உருவுனீங்க. ஜெயம் ரவி குடும்பம் உங்களுக்கு ஆப்பு
வச்சுது. இந்த பக்கம் மலையாளம். அத ஏற்கனவே பி.வாசுன்னு ஒருத்தர் உருவிகிட்டு இருக்காரு. புது கதைன்னு
சொல்லி குருவி எடுத்தீங்க. அது முக்கால் வாசி "சத்தரபதி"ன்னு ஒரு தெலுங்கு படத்திலிருந்து எடுத்திருக்கீங்கன்னு
கொஞ்சம் பேருக்கு தான் தெரியும். அதுவும் பாக்க சகிக்கல. இப்ப இந்திப் படம். ஆமா உங்களுக்கு கொஞ்சம் கூட
மூளையே இல்லையா???? போயும் போயும் அந்த "சோல்ஜர்" இந்தி படம் தானா கிடைச்சுது?. அதுவே ஒரு டப்பா
படம். சாரூக், ஹிருத்திக் ரோஷன் படம் எதுனா முயற்சி பண்ண தோணலையா உங்களுக்கு? பேசாம பி.வாசு கூட ஒரு
மலையாள ரீமேக் படம் பண்ணுங்க. எங்கையோஓஓஓஒ போயிடுவீங்க
5)இமேஜ்: இந்த எழவு எப்ப வந்தது உங்களுக்கு??? அந்த மண்ணெல்லாம் ஒன்னும் கிடையாது. உங்களுக்கு காமெடி
தான் நல்லா வருதில்ல, உங்க பாடி லாங்வேஜும் அதுக்கு ஒத்துழைக்குது அப்புறம் ஏன் தனியா பைட் பண்ணி காமெடி
பண்றீங்க? வடிவேலு காமெடியான செத்து செத்து விளையாடுறத வேற கடந்த இரண்டு படங்கள்ல பண்ணி காமெடி
பண்ணியிருக்கீங்க. அப்புறம் படத்துல வடிவேலுவும், விவேக்கும் எதுக்கு?
அப்புறம் இந்த வீர வசனம் பேசி டயத்த வேஸ்ட் பண்றதுக்கு பதிலா தங்கர் பச்சானோடவாவது ஒரு படம்
பண்ணுங்க ஏன்னா நடிப்புன்னா என்னான்னு தெரியனுமில்ல. அப்புறம் பின்னால அரசியல்வாதியா ஆயிட்டு, நடிக்க
தெரியாம பொழப்பு ஓடாது பாருங்க.
டிப்ஸ்: இதையெல்லாம் படிச்சுட்டு நான் தல ரசிகன்னு கேவலமான முடிவுக்கு வருபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது
"உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு" :)
புரியலன்னா இதற்கு தொடர்புடைய லின்ங் இது தான். படிச்சுட்டு இங்க வாங்க
Sunday, January 18, 2009
திருமாவின் புலி ஆதரவு எல்லை மீறுகிறது

திருமாவளவனுக்கும், காங்கிரஸுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்தான் என்ற நிலையில், இதில் இன்னொரு வில்லங்கமாக வந்து முளைத்திருக்கிறது ஒரு சி.டி! அது புலிகளை ஆதரித்து திருமா வெளியிட்டுள்ள `எகிறிப் பாய்' என்ற சி.டி.
கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய `தமிழீழ அங்கீகார மாநாட்டில் வெளியிடப்பட்ட குறுந்தகடு அது. இதற்காக திருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.
``திருமாவளவனின் புலி ஆதரவு எல்லைமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. `கடுமையான நடவடிக்கை எடுப்போம்!' என்று வைகோ, சீமானை எல்லாம் கைது செய்த முதல்வர், திருமாவிற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை? முன்பு புலிகளுக்கு ஆதரவாக வெறும் பிரசாரம் மட்டுமே செய்து வந்த திருமா, இன்று சி.டி. போட்டு பிரசாரம் செய்ய யார் இடம் தந்தது? அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா? `எகிறிப்பாய்' என்ற அந்தக் குறுந்தகடை வாங்கி நானும் கேட்டேன். அதில், தொடக்கத்திலேயே மூன்று நிமிடங்கள் உரையாற்றுகிறார் திருமா.

இப்படிச் சொல்லி இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரிவினை வாதத்தை திருமா தூவுகிறார். நிரந்தரமாய் நாடு வேண்டும் என்கிறார். யாருக்கு என்றால் இலங்கையில் உள்ள தமிழனுக்கு. அங்கே தனிநாடு கேட்பது யார்? விடுதலைப் புலிகள்தானே? தடைசெய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படி இங்கே பிரசாரம் செய்தால் தமிழ்நாட்டில் அல்லவா அமைதி கெடும்? அது மட்டுமல்ல, அந்தக் குறுந்தகட்டில் வரும் முதல் பாடலே பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்து பிரசாரம் செய்வதாக உள்ளது.
`பழந்தமிழன் வீரம் இன்னும் செத்துப் போகவில்லை! தமிழ்ப் பரம்பரைக்கே சரணாகதிப் பழக்கமென்றுமில்லை! பாருக்கதை உணர்த்துகிறான் தம்பி வேலுப்பிள்ளை! அவன் பக்கம் செல்லும் தகுதி நம்மில் யாருக்குமே இல்லை!' என உள்ளது அந்தப் பாடல். அதை எழுதியவர் திருமாதான். பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமான பிரபாகரனின் பின்னால் செல்லும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை என்று கூறி இங்குள்ள தமிழ் மண்ணின் தலைவர்களை, மைந்தர்களை கேவலப்படுத்துவதாக உள்ளது அந்தப் பாடல். அதே பாடலில்...
`தமிழனென்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. தலைநிமிர்ந்து நடப்பதற்கே கூச்சமாக இருக்கிறது. தமிழன் தலை ஈழத்திலோ ரத்தஆற்றில் மிதக்குது!- இந்தத் தமிழ்நாட்டு தறுதலைகள் திரையரங்கில் கிடக்குது!' என்ற வரிகளும் உள்ளன.
என்ன கொடுமை இது? `வெட்கமாக இருக்கிறது, கூச்சமாக இருக்கிறது' என்று எந்தத் தமிழனை இங்கே இவர் கூறுகிறார்? தமிழக முதல்வரையா? அல்லது காங்கிரஸ்காரர்களையா? அது மட்டுமல்ல, திரையரங்கில் கிடப்பவர்களெல்லாம் தறுதலைகளா? அவர்கள் தறுதலைகள் என்றால் சினிமாவில் நடிப்பவர்கள் யார்? திருமா இதையெல்லாம் விளக்க வேண்டும்.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனுக்காகவும் திருமா அந்த சி.டி.யில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதைப் பாடியிருப்பவர் உன்னிகிருஷ்ணன். தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படியெல்லாம் பிரசார பாடல் எழுதினால் என்ன அர்த்தம்? இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கம். தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் வேண்டும்.
அந்தத் தமிழீழ ஆதரவு மாநாட்டிலேயே பிரபாகரன் படம் போட்ட போஸ்டர், புத்தகங்களை எல்லாம் போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் இந்த `எகிறிப்பாய்' சி.டி.யை மட்டும் போலீஸ் எப்படி அனுமதித்தது என்பது தெரியவில்லை. சென்னை புத்தகக் காட்சியிலும் இது பரபரப்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடலை எழுதி வெளியிட்ட திருமா மீது நடவடிக்கை கோரி முதல்வர் கலைஞர், கவர்னர் மட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சர், எங்கள் கட்சித் தலைவி அன்னை சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்'' என்று குமுறி முடித்தார் பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.
இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சியில் பிரபாகரன் படம் போட்ட புத்தகங்களை விற்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அந்த மாதிரி புத்தகங்களை விற்கக் கூடாது என்று கியூ பிராஞ்ச் போலீஸார் தடை போட்டிருக்கிறார்கள். சிறுத்தைகளின் புத்தகக் கடைக்குப் போய் இப்படிக் கூறியபோது, `முடியாது! நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார்கள் அவர்கள்.
இந்த சர்ச்சை பற்றி காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தோம்.
``தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரிய டீம் காய் நகர்த்தி வருகிறது. இந்தப் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வரும் கலைஞரிடமும். அதற்கேற்ற கணிப்பு இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இதன் முதல்அடி தெரிந்துவிடும். இதற்குமேல் இப்போதைக்கு வெளிப்படையாக நாங்கள் எதுவும் பேச முடியாது'' என்று கூறிச் சிரித்தனர் அவர்கள்.
சரி! இந்தக் குறுந்தகடு பற்றிய குற்றச்சாட்டுக்கு திருமாவளவனின் பதில் என்ன? கேட்டோம்.
``நெஞ்சில் நஞ்சையும், வஞ்சகத்தையும் சுமந்து கொண்டு தமிழின துரோகத்தோடு பிரபாகரனைக் காட்டிக் கொடுக்கத் துடிக்கும் இவர்கள் (காங்கிரஸார்) எல்லாம் ஒன்று சேர்ந்து இதே பிரபாகரனை பாராட்டிப் போற்றி ஆதரித்துப் பேசிய காலத்தில், 83-ம் ஆண்டில் நான் எழுதிய பாடல்கள்தான் அந்த `எகிறிப்பாய்' குறுந்தகடு. இன்று அந்த காங்கிரஸ்காரர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், நான் மாறவில்லை. அந்தப் பாடல்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் எழுதவில்லை. உலகத் தமிழர்கள் பத்தரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். தேசிய இன அடிப்படையில் அவர்களுக்காக ஒரு நாடு வேண்டும் என்றுதான் குரல் கொடுத்திருக்கிறேன். அது ஒரு ஜனநாயகக் கோரிக்கையே தவிர குற்றமாகாது.
தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, இவர்கள் கற்பனை செய்வதைப் போல இந்தியாவிலிருந்து தனித்தமிழ் நாடு வேண்டும் என்று கோரவில்லை. தமிழினத்தை வைத்து பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் இத்தகைய துரோகக் கும்பலை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் தனிநாடு கோரவும் முடியாது. தமிழனுக்காகவே வாழ்ந்து தனித்தமிழ்நாடு கோரிய தமிழரசனை அடித்துக் கொன்ற மண் இந்த மண். இங்கே நாங்கள் தமிழ்ஈழம் வேண்டும் என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்தியாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பரப்பவில்லை.
காங்கிரஸ் கட்சியிலும் இனமானத் தமிழுணர்வுள்ள தமிழர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அதேபோல நாங்களும் அமரர் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை மட்டுமின்றி உண்மையான காங்கிரஸாரை மதிக்கின்றோம். மாறாக, சிங்களத் தூதர் அம்சாவின் எடுபிடிகளாக மாறி, அம்சா தருகிற கேளிக்கை விருந்துகளுக்கும், `பரிசு'களுக்கும் மயங்கிக்கிடக்கும் சில காங்கிரஸாரின் நிலையை ஏற்க முடியாது. அப்படிப்பட்ட போலி காங்கிரஸார்தான் இப்படி சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள். இவர்களுக்கு ராஜீவ் காந்தியை விட ராஜபக்ஷேதான் மானசீகத் தலைவர். ஆகவே, ராஜபக்ஷேவின் எடுபிடிகள் இப்படித்தான் பேசுவார்கள்'' என முடித்துக் கொண்டார் திருமா.