Thursday, December 25, 2008

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க்கை வரலாறு


கானல் நீராய் இருந்து நாயகனாய் வளர்ந்த வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க்கை வரலாறை அன்புடன் சமர்பிக்கிறேன்
இலங்கை கண்டியில் 1973 ஆண்டு பிறந்த ஜே.கே.ரித்தீஷ் (இயற்பெயர் : முகவை குமார் ) 1976 ஆண்டில் ராமேஸ்வரத்தில் குடியேறி பள்ளிப்படிப்பை முடித்தார். ஜே.கே .ரித்தீஷ் தமிழக குடிசை மாற்றுத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் அவர்களுடைய பேரன் ஆவார். ரிதீஷ்ன் தந்தை வேளாண்மைத்துறையில் பெரிய பொறுப்பில் பணிபுரிகிறார். தாயார் குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார். இவருக்கு சாந்தி,மணி என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். ஜே.கே.ரித்தீஷ் ஜோடி என்ற பெண்ணை மணமுடித்து(2007) மனவல்கையை ஆரம்பித்தார். அதன் பலனாக "அரிக் ரித்தீஷ்" என்ற மகன்(2008) பிறந்தான்.

நடிப்புத்துறை:

முதல் படமான கானல் நீரில் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் ஜே.கே.ரித்தீஷ் நடித்தார். அப்படத்தின் தயாரிப்புப்பணிகளிலும் உதவிபுரிந்தார். அந்தப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஜே.கே.ரித்தீஷ் முத்திரை பதித்தார்.

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க! வீரத்தளபதி J.K.Ritheesh வாழ்க! வாழ்க!

அடுத்த படமான நாயகன் திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் தனிமுத்திரை பதிதார். அந்தப்படம் வெளியான புதிதில் நல்ல வசூல் மழை பெய்தது. இந்தப்படத்தில்தான் ரித்தீஷுக்கு "வீரத்தளபதி" என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. படம் ஆரம்பத்தில் "வீரத்தளபதி" ஜே.கே.ரித்தீஷ் என்று பெயர் போடும்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. இந்தப்படத்திற்கு பிறகுதான் இவரின் ரசிகர் வட்டம் உலகஅளவில் பெருகியது. அறிமுகப்பாடலில் பலவித வேடங்களில் நடனமாடி உலனாயகன் நடித்த தசாவதாரத்திகே போட்டியாக இருந்தது. அவரது ரசிகர்கள் http://www.jkritheesh.com/என்ற இணையதளத்தை ஆரம்பித்தனர். தற்போதைய நிலையில் கைவசம் நாலு திரைப்படங்களில் நடிக்கும் ஒரே இந்திய நடிகர் இவர்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த புகழ்பெற்ற படங்களின் பெயரில் நடிக்கிறார்.


வரவிருக்கும் படங்கள்:
இயக்குனர் பேரரசுவின் சகோதரர் முத்துவடுகு திருப்பாச்சி படத்தில் இருந்து திருவண்ணாமலை படம் வரை அவருக்கு உதவியாக பணிபுரிந்தார். கடந்த சில வருடங்களாக முத்துவடுகு தனியாக ஒரு படத்தை இயக்கப்போவதாக திரையுலகில் பேசப்பட்டது. நாயகன் வெற்றியை தொடர்ந்து தனது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஜே.கே.ரிதீஷிடம் கேட்டுக்கொண்டார். இயக்குனரிடம் கதையைக்கேட்டவுடன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ். இந்தப்படம் ரிதீஷுக்கே உரிய அதிரடி கமர்சியல் படமாக இருக்கும். படத்திக்கு "தளபதி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அடுத்ததாக சித்திக் இயக்கத்தில் "தில்லுமுல்லு" என்ற படத்தில் நடிக்கிறார்.








அடுத்ததாக
"வேட்டைபுலி" என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பற்றி வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் கூறியதாவது :
" முதலில் வேட்டைக்காரன் என்று பெயர் சூட்ட எண்ணியிருந்தோம். ஆனால் அந்தப்பெயரை இளையதளபதி விஜய் நடிக்கும் அடுத்தபடத்திர்க்கு பதிவு செய்துவிட்டதால், பாயும் புலி என்று பெயர் வைக்கலாம் என ஏவிஎம் நிவாகத்தை அணுகினோம். அனுமதி கிடைக்கவில்லை. எனவே இரண்டு பெயர்களையும் சேர்த்து வேட்டைபுலி என்று வைத்துவிட்டோம். இப்படத்தை பாவா என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நாயகன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர்களை திருப்திபடுத்துவதாகவும் அதிரடிப்படமாகவும் அமையும்.

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க! வீரத்தளபதி J.K.Ritheesh வாழ்க! வாழ்க!

அடுத்ததாக மீண்டும் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் "தெய்வமகன்" என்ற படத்தில் நடிக்கிறார்.

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் நடித்த திரைப்படம் ""அங்குசம்"" என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
இவருக்கு ஆந்திராவிலும் பெரிய ரசிகர்கூட்டம் இருக்கிறது.

அரசியல் & சமூக சேவை

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் தாத்தா தமிழக குடிசைமாற்று துறை அமைச்சர் சுப.தங்கவேலன் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க . செயலாளராக பதவி வகிக்கிறார். ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரம் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.


வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம் click

ஜே.கே.ரித்தீஷின் புகைப்படங்கள் click

ஜே.கே.ரித்தீஷ் அதிகாரப்பூர்வ இணையதளம் click


வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க!

வீரத்தளபதி J.K.Ritheesh வாழ்க! வாழ்க! வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க!


Related Posts



10 கருத்துக்கள்:

கார்க்கிபவா on December 25, 2008 at 11:29 PM said...

உங்கள் பங்களிப்புக்கு நன்றி..

சங்கம் உங்களையும் "கவனிக்கும்"

சங்கத்து சார்பாக,

கார்க்கி

ஷங்கர் Shankar on December 25, 2008 at 11:42 PM said...

//**சங்கம் உங்களையும் "கவனிக்கும்"**//

சங்கத்துல துணை கொ.பா.செ பதவி கொடுத்தா நல்ல இருக்கும்!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கார்க்கி

ரவி on December 25, 2008 at 11:51 PM said...

//இலங்கை கண்டியில் 1973 ஆண்டு பிறந்த ஜே.கே.ரித்தீஷ் (இயற்பெயர் : முகவை குமார் ) ///

கண்டியில் பிறந்தா கண்டி குமார் தானே ? பிறக்கும்போதே முகவை குமார்னு வெச்சிட்டாங்களா ?

//அடுத்ததாக மீண்டும் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் "தெய்வமகன்" என்ற படத்தில் நடிக்கிறார்.///

ஏற்கனவே கானல் நீர் படத்தை பப்படமாக்கிய சின்னியின் படத்தில் ஏன் நடிக்கவேண்டும் ? மார்க்கெட் வேல்யூவை கெடுத்துக்கொள்ளவேண்டும் ?

ஏன் தல சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறார் ?

ஷங்கர் Shankar on December 26, 2008 at 8:39 AM said...

//ஏற்கனவே கானல் நீர் படத்தை பப்படமாக்கிய சின்னியின் படத்தில் ஏன் நடிக்கவேண்டும் ? மார்க்கெட் வேல்யூவை கெடுத்துக்கொள்ளவேண்டும் ?//

என்ன பண்ணுறது! முதல் படத்தில் அறிமுப்படுத்திய குருவுக்காக மீண்டும் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் நடிக்கிறார்

நாம எல்லாம் இருக்கிறோம் வெற்றி படம் ஆக்கமாடோமா என்ன?

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தழல் ரவி !

RAMASUBRAMANIA SHARMA on December 26, 2008 at 2:16 PM said...

namma thalaivar j.k.rithish melum melum pala vetri padangalai vazhngattum ena vazhthi vidai perukiren....nalla pathivu

Anonymous said...

Ada pavingala.... yedu yedukku thaann article yelutharathunnu oru vivasthai illaya? Thatha sambaricha sothula peran alli vudaran,...ivana poi vai koosama nadigannu soreya. idhula kamal kooda comparison vera.. tamil cinema thangadhuda saaami...

ஷங்கர் Shankar on December 26, 2008 at 2:24 PM said...

Hello Appavi Tamilan

Ungalukku enga thalaya pathi sariya teyala

thalapathi padam varattum

anthapadam summa sakkai podupodappokuthu!

ஷங்கர் Shankar on December 26, 2008 at 2:27 PM said...

Thank You RAMASUBRAMANIA SHARMA

கிரி said...

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!!

வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க! வாழ்க!

ராமநாதபுரம் - ஜே.கே. ரித்தீஸ்!!!!!!!!!!

coimbatorethevars on May 12, 2009 at 8:14 PM said...

j.k.rithish kanal neer padatha panam kuduthuthan ottunar, nayaganukum kuduparnu nenachu matra mavattangallayum rasigar mandram arambichu pala rasikarkal panatha vari erachu cutout, banner, posters nu saramariya selavu pannunanga...

aana thalaivar avunga ellerukkum biriyani mattume vangithanthu, enaku rasigar mandram lam venam. ramanathapurathula mattum pothum nu sonnar.. appuramthan therinjuthu avar thanthathu biriyani illa 'alva' nu,,, ippudi ulacha kaasa tholachavunga ethanayo peru bossu...
(including me with tears)

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009